திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட்பயன் - எட்டாம் பத்து
8.இன்புறு நிலை
இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். |
71 |
இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம் ஒருவன் ஒருத்தி உறின். |
72 |
இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம் இன்பகனம் ஆதலினால் இல். |
73 |
தாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக் கூடலைநீ ஏகமெனக் கொள். |
74 |
ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது என்றாலும் ஓர் இரண்டும் இல். |
75 |
உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப் பற்றாரும் அற்றார் பவம். |
76 |
பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி நீ ஒன்றும் செய்யாது நில். |
77 |
ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது கண்படுப்பார் கைப்பொருள்போல் காண். |
78 |
மூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித் தோன்றாத இன்பம் அது என் சொல். |
79 |
இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம் அன்பு நிலையே அது. |
80 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவருட்பயன், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, தன்மை, இன்று, ஒன்றும், இலக்கியங்கள், இன்பு, உண்டாம்