திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட் பயன் - பத்தாம் பத்து
10. அணைந்தோர் தன்மை
ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத் தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். |
91 |
ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர் வெந்தொழிலும் மேவார் மிக. |
92 |
எல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று அல்லாது அறியார் அற. |
93 |
புலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார் தலம்நடக்கும் ஆமை தக. |
94 |
அவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும் இவனைஒழிந்து உண்டாதல் இல். |
95 |
உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு எள்ளும் திறம் ஏதும் இல். |
96 |
உறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம் வறும்தொழிற்கு வாய்மை பயன். |
97 |
ஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை தோன்றில் அருளே சுடும். |
98 |
மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு அம்மையும் இம்மையே ஆம். |
99 |
கள்ளத்தலைவர் துயர்கருதித் தம்கருணை வெள்ளத்து அலைவர் மிக. |
100 |
திருவருட்பயன் முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருவருட்பயன், பயன், சாத்திரங்கள், சித்தாந்த, இலக்கியங்கள்