திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
செய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப் பையக் கொடுத்தார் பரங்கெட்டா - ரையா உழவுந் தனிசு மொருமுகமே யானால் இழவுண்டோ சொல்லா யிது. |
21 |
ஆதார யோகம் நிராதார யோகமென மீதானத் தெய்தும் விதியிரண்டே - யாதாரத் தாக்கும் பொருளாலே யாக்கும் பொருளாமொன் றாக்காப் பொருளேயொன் றாம். |
22 |
ஆக்கி யொருபொருளை யாதாரத் தப்பொருளை நோக்கி யணுவி லணுநெகிழப் - பார்க்கில் இவனாகை தானொழிந்திட் டேகமா மேகத் தவனாகை யாதார மாம். |
23 |
கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயிற் *கொண்டதுவு மப்பரிசே கூறுபடுங் - கொண்ட இருபொருளு மின்றியெ யின்னதிது வென்னா தொருபொருளே யாயிருக்கு முற்று. |
24 |
*கொண்டமனும் |
ஆக்கப் படாத பொருளா யனைத்தினிலுந் தாக்கித்தா னொன்றோடுந் தாக்காதே - நீக்கியுடன் நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய் நிற்கை நிராதார மாம். |
25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சித்தாந்த, சாத்திரங்கள், கொண்ட, மாம், நிற்கும், இலக்கியங்கள், நிராதார, யாதாரத்