திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிந்தையிலு மென்றன் சிரத்தினுலுஞ் 1*சேரும்வகை வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை மாதினுட னெத்திறமும் வாழ்ந்திருக்க வென்பதலால் ஏதுசொலி வாழ்த்துவே 2*னின்று. |
100 |
1*சேரும் வண்ணம்; 2*நான் |
ஆதார மாகி அருளோடு நிற்கின்ற சூதான இன்பச் சுகவடிவை - ஓதாமல் உள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால் தெள்ளவா ராதே சிவம். |
101 |
பொருளு மனையு மறமறந்து போக மறந்து புலன்மறந்து கருவி கரண மவைமறந்த கால மறந்து கலைமறந்து தரும மறந்து தவமறந்து தம்மை மறட்ந்து தற்பரத்தோ டுருகி யுருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார். |
102 |
திருக்களிற்றுபடியார் முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், மறந்து, சாத்திரங்கள், திருக்களிற்றுப்படியார், சித்தாந்த, இலக்கியங்கள்