திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
*சிவனெனவே தேறினன்யா னென்றமையா லின்றுஞ் சிவனவனி வந்தபடி செப்பில் - அவனிதனில் உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால் அப்படியே கண்டா யவன். |
91 |
*திருவாசகம்: திருவண்டப்பகுதி |
அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல தெவனவனாய் நிற்கின்ற தேழாய் - அவனிதனில் தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய் ஈன்றிடுமோ சொல்லா யிது. |
92 |
முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந் தத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினான் மோகக் கொடியறுக்க முத்தி பழம்பழுக்கும் ஏகக் கொடியெழுங்கா ணின்று. |
93 |
அகளத்தி லானந்தக் தானந்தி யாயே சகளத்திற் றையலுடன் றோன்றி - நிகளத்தைப் போக்குவதுஞ் செய்தான்றன் பொன்னடியென் *புன்றலைமேல் ஆக்குவதுஞ் செய்தா னவன். |
94 |
*புன்தலையில் |
குற்றமறுத் தென்னியாட் கொண்டருளித் தொண்டனேன் உற்ற தியானத் துடனுறைவர் - முற்றவரின் மாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக் காட்சியுமாய் நிற்பார் கலந்து. |
95 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், மோகக், முத்தி, இலக்கியங்கள், அவனிதனில்