சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இருவினை உண்மை
படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நரராய்ப் பண்ணியதென் முன்னைவினைப் பான்மையென்ப ரடுத்தவினை யுளதாயி னிறையே னென்னில் அசேதனமற் றவையாவிக் கமைந் தாகும் எடுத்தவினை யுறுவுறுவ துயிரேற் றானே யிருவினைக்குத் தக்கவுட லெய்து மென்னில் சடத்திரளு மகர்த்தாவா யறிவொன் றில்லாத் தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே. |
மும்மலமும் அநாதி
அல்லன்மிக வுயிர்க்கிவைதா னனைத்த தீசன் அருவினைக ளருந்துதற்கோ விளையோ வன்றிச் சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்ததெனு முரைமுதலோர் தொடக்கிலார்பால் ஒல்லைவரு மெனினுளதா முயிருண் டாவே யுளதுமல மலமுளதா வொழிந்த வெல்லாம் நெல்லின்முளை தவிடுமிபோ லநாதி யாக நிறுத்திடுவ ரிதுசைவ நிகழ்த்து மாறே. |
தத்துவங்களின் தோற்றமுறை
அருத்திமிகுங் கலைகால நியதியுடன் வித்தை யராகமிவை யனந்தரான் மாயைதனி லாகும் உருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்கள் உளவாகு மாங்காரம் புந்திதனி லுதிக்குந் தெரித்தவிது திரிவிதமாந் தைசதம்வை காரி திகழ்தரு பூதாதி யெனத் திருந்தி யசாத்துவிதம் விரித்தகுண மனம்புத்தி யிந்திரிய மென்று விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே! மன்னியகன் மேந்திரிய மானவிரா சதஞ்சேர் வாக்காதி வைகாரி மருவிவருஞ் சத்தந் தன்னைமுத லாகியதா மதமிகுமாத் திரைபின் தருமதனின் வானநில மனல்புனன்மண் சத்த முன்னதனில் வெளியாதி யொன்றொன் றாக முறையிலுறு மிருமையயன் முடிவா முன்னே யுன்னுசதா சிவராதி யதிபதிக ளொடுக்க முதித்தவடை வெனவுரைப்ப ருணர்ந்து ளோரே. |
கன்மத்தின் இயல்பு
நண்ணியிடு முருவதனுக் கேது வாகி நானாபோ கங்களாய் நாசோற் பத்தி பண்ணிவரு மாதலால் அநாதி யாகிப் பலவாகி யணுக்கடொறும் படர்வதாகி யெண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்று மியல்பிதனாய் மதிகதமா யிருபயனாம் பாவ புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப் பொருந்துமிது கன்மமலம் புகலு மாறே. கன்மநெறி திரிவிதநற் சாதியாயுப் போகக் கடனதெனவருமூன்று முயிரொன்றிற் கலத்தல் தொன்மையதூ ழல்லதுண வாகா கானுந் தொடங்கடைவினடையாதே தோன்று மாறித் தன்மைதரு தெய்விகமுற் பெளதிகமான் மிகமாந் தகையிலுறு மசேதனசே தனத்தாலுஞ் சாரு நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவணூ ணாடிலத நூழ்வினையா நணுகுந் தானே. மேலைக்கு வருவினையே தென்னி னங்கண் விருப்புவெறுப் பெனவறியவ் விளைவு மெல்லா மூலத்த வினைப்பயில்வா மென்னி னாமேன் முற்றியதன் பயனுனக்கு முளைக்குமென்பர் ஞாலத்து வினைகளிரு திறனாகும் புந்தி நண்ணாத வினைநணுகும் வெனையெனவொன் றிரண்டா யேலத்தா னிதமகித மாமிதனால் வழுவா தெய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே. உற்றதொழி னினைவுரையி நிருவினையு முளவாம் ஒன்றொன்றா லழியா தூணொழியாதுன்னின் மற்றவற்றி னொருவினைக்கோர் வினையால் வீடு வைதிகசை வம்பகரு மரபி லாற்றப் பற்றியது கழியுமிது வினையாலேற்கும் பான்மையுமாம் பண்ணாதும் பலிக்கு முன்னஞ் சொற்றருநூல் வழியின்வரின் மிகுதி சோருஞ் சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, சிவப்பிரகாசம், சாத்திரங்கள், மாறே, இலக்கியங்கள், அநாதி