சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பரமுத்தியின் இயல்பு
ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா மிருமை யாகி யொன்றினொன் றழியு மொன்றா தென்னினொன் றாகா தீயி னொன்றிரும் புறழி னின்றா முயிரினைந் தொழிலும் வேண்டு மொன்றிநின் றுணரு முண்மைக் குவமையா ணவத்தொ டொன்றே. |
பாச நீக்கம்
அழிந்திடும் பாச மென்னி னித்தமென் றுரைத்தல் வேண்டா அழிந்திடா தென்னின் ஞான மடைவது கருதல் வேணா அழிந்திடுஞ் சத்தி நித்த மழிந்திடா வொளியின் முன்னர் அழிந்திடு மிருளு நாச மடைந்திடா மிடைந்தி டாவே. |
வினை நீக்கம்
எல்லையில் பிறவி நல்கு மிருவினை யெரிசேர் வித்தி னெல்லையி னகலு மேன்ற உடற்பழ வினைக ளூட்டுந் தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல் அல்லொளி புரையு ஞானத் தழலுற வழிந்து போமே. |
6. புனித நாமம்
பந்தமா னவைய றுத்துப் பவுதிக முழலு மெல்லைச் சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும் அந்தமா திகளில் லாத வஞ்செழுத் தருளி னாலே வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே. திருவெழுத் தைந்தி லான்மாத் திரோத மாசருள் சிவஞ்சூழ் தரநடு நின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மை யாகி வருமந மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக் கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே. ஆசறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக வோசைகொ ளதனி னம்மே லொழித்தரு ளோங்கு மீள வாசியை யருளு மாய மற்றது பற்றா வுற்றங் கீசனி லேக மாகு மிதுதிரு வெழுத்தி னீடே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, சிவப்பிரகாசம், சாத்திரங்கள், திரோத, நீக்கம், இலக்கியங்கள், யாகி