சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அருளினால் ஆக மத்தே அறியலாம் அளவி னாலும் தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா இருளெலா மிரிக்க லாகும் அடியரோ டிருக்க லாமே. |
6 |
அளவை
அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர், அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு), அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம், அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே. |
7 |
மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விகற்ப முன்னா ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம் பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும் காசறு முறையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும். |
8 |
கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே, கொண்டல் திரிவாம் பெயர்ச்சாத்தி குணமே கன்மம் பொருளெனஐந், துண்ட விகற்ப உணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின், விண்ட வில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே. |
9 |
காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென, ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம், மாண்ட உரைதந்த் ரமந்த்ரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம், பூண்ட அளவைக் கெதிர் புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், அளவை, சுபக்கம், நூல்கள், காண்டல், விகற்ப, சித்தியார், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், தாகும், அனுமானம், இலக்கியங்கள், கருதல்உரை