சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சீவன்கள் சநநம் போலச் சிலர்வயிற் றுதித்த மாலைத் தேவென்றே உலகங் காக்கச் சுவேச்சையாற் சநித்தா னென்பீர் பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக் கோவந்து முகத்தில் தோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல் கூறும். |
276 |
நாரணன் அயனை யீன்றும் அயனும்நா ரணனை யீன்றும் காரணம் ஒருவ ருக்கங் கொருவர்தாம் இருவ ருக்கும் வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற ஆரணம் உரைக்கும் பக்கத் தவர்களும் அடைந்தா ரன்றே. |
277 |
அழிப்(பு)அரி யேவ லென்றாய் அரிதனை யழிக்கும் அன்றங்(கு) அழிப்பது தவிர்க்க மாட்டான் அங்கமும் அழித்தே பூண்டான் அழிப்(பு)அரி யேவ லென்றபே கறைந்ததும் அழிந்த தன்றோ அழித்திடும் அரனே ஆக்கம் நோக்கமும் ஆக்கு வானே. |
278 |
வானம்கீழ் மண்ணு மெல்லாம் மாயனே காப்பா னென்றாய் தான்அஞ்சும் கலந்த ரன்தன் உடல்கீண்ட சக்க ரத்தை ஆன்அஞ்சும் ஆடு வான்பாற் பெற்றுல களித்த வார்த்தை தானெங்கு மாகு மெல்லாம் சங்கரன் காப்பே யாமே. |
279 |
மாலினார் சேலி னாராய் வாரிகள் அடக்கிக் கொண்டன்(று) ஆலியா உலக மெல்லாம் அழிப்பவன் நானே என்னச் சேலினார் தமைப்பி டித்துச் செலுவினை இடந்து கண்ணைச் சூலியார் மேல ணிந்தான் சூலிதா னாகு மன்றே. |
280 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், மெல்லாம், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, பரபக்கம், அழிப், இலக்கியங்கள், யீன்றும்