பத்தாம் திருமுறை - திருமந்திரம் - மூன்றாந் தந்திரம்
மூன்றாந் தந்திரம்
1. அட்டாங்க யோகம்
549 |
1 உரைத்தன வற்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் 2 பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே. |
1 |
1 உரைத்த நவாக்கிரி | ||
2 பிரைச்சதம் |
550 |
செய்த இயம நியமஞ் சமாதிசென் றுய்யப் பராசக்fதி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே |
2 |
551 |
அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத் தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் புன்னெறி 1 யாகத்திற் போக்கில்லை யாகுமே |
3 |
1 யாக்கத்திற் |
552 |
இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்1பிரத்தி யாகாரஞ் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே |
4 |
1 நண்பிரத்தி |
2. இயமம்
553 |
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்fசடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே |
1 |
554 |
கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில்நின் றானே |
2 |
3. நியமம்
555 |
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன் நீதி 1 யுணர்ந்து நியமத்த னாமே. |
1 |
1 யுணர்ந்த |
556 |
தூய்மை 1 அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்த னாமே |
2 |
1 அருளுண் |
557 |
தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே |
3 |
4. ஆதனம்
558 |
பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் தங்க இருப்பத் தலைவனு மாமே |
1 |
559 |
ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே |
2 |
560 |
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளி லங்கையை நீட்டி உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப் பரிசு பெறுமது பத்திரா சனமே |
3 |
561 |
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித் தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற் குக்குட ஆசனங் கொள்ளலு மாமே |
4 |
562 |
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக் கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச் சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே |
5 |
563 |
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு 1 முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே |
6 |
1 முத்த மயூரமுது |
5. பிராணாயாமம்
564 |
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே |
1 |
565 |
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே |
2 |
566 |
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற் கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந் துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே |
3 |
567 |
பிராணன் மனத்தொடும் பேரா 1தடங்கிப் பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே |
4 |
1 தடக்கிப் |
568 |
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் 1 கும்பம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம் மாறுதல் ஒன்றின்fகண் வஞ்சக மாமே |
5 |
1 கும்பகம் |
569 |
வளியினை வாங்கி 1 வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந் தௌiயக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே |
6 |
1 வயிற்றில் |
570 |
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் சங்கே குறிக்கத் தலைவனு மாமே |
7 |
571 |
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே |
8 |
572 |
மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே |
9 |
573 |
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே |
10 |
574 |
இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப் புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக் கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து நட்டம் இருக்க நமனில்லை நமக்கே |
11 |
575 |
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே |
12 |
576 |
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே |
13 |
577 |
பன்னிரண் 1 டானை பகலஇர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே |
14 |
1 டானைக்குப் |
6. பிரத்தியாகாரம்
578 |
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே |
1 |
579 |
நாபிக்குக் கீழே 1 பன்னிரெண்f டங்குலந் தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர் தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் 2 குடியிருந் தானே |
2 |
1 நாலிரண்டண்-குலம் | ||
2 குடிபுகுந்தானே |
580 |
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே |
3 |
581 |
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை 1 யாமே |
4 |
1 யாகுமே |
582 |
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே |
5 |
583 |
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே |
6 |
584 |
எருவிடும் வாசற் கிருவிரன் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே |
7 |
585 |
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே |
8 |
586 |
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே |
9 |
587 |
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நங்கி விகிர்தனை நாடுங்f சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் அறிப்புறு காட்சி அமரரு மாமே |
10 |
7. தாரணை
588 |
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே |
1 |
589 |
மலையார் சிரத்திடை வானீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே சிலையார் பொதுவில் திருநட மாடுந் தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே |
2 |
590 |
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் 1 பராநந்தி ஆணையே |
3 |
1 பார்நந்தி |
591 |
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே |
4 |
592 |
கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கங் கலந்த உயிரது காலது கட்டிற் கலந்த உயிருடல் காலமும் நிற்குமே |
5 |
593 |
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையுமாமே |
6 |
594 |
வாழலு மாம்பல காலும் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில் எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியதோர் பள்ளி அறையே |
7 |
595 |
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் குரங்கினைக் 1 கொட்டை பொதியலு மாமே |
8 |
1 கோட்டைப் |
596 |
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் முன்னுறு கோடி உறுகதி பேசிடில் என்ன மாயம் இடிகரை நிற்குமே |
9 |
597 |
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே |
10 |
8. தியானம்
598 |
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியான முன்னுங் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. |
1 |
599 |
கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு) அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஔiகாட்டிப் 1 புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே |
2 |
1 பிண்ணாக்கி |
600 |
ஒண்ணா நயனத்தில் உற்ற ஔiதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வௌiகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே |
3 |
601 |
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழு துன்னார் சந்திரப் 1 பூவே |
4 |
1 பூவையே |
602 |
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே |
5 |
603 |
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை உண்ணாடிக் குள்ளே ஔiயுற 1 நோக்கினால் கண்ணாடி போலக் 2 கலந்துநின் றானே |
6 |
1 நோக்கிற் | ||
2 கலந்திருந்தானே |
604 |
நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை 1 தேட்டமும் இல்லை சிவனவ நாமே |
7 |
1 வேட்டமும் |
605 |
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட் டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே |
8 |
606 |
மணிகடல் யானை 1 வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே |
9 |
1 வளர்க்குழல் |
607 |
கடலொடு மேகங் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டரண் டத்துச் 1 சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே |
10 |
1 சுடர்மணி |
608 |
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும் ஓசை யதன்மணம் போல விடுவதோர் ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே |
11 |
609 |
நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல்யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே |
12 |
610 |
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற 1 ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே |
13 |
1 ஐவர் அருள்நாதமோடும் |
611 |
பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் ஔfளி தறியிலோ ரோசனை நீளிது வௌfளி அறையில் விடிவில்லை தானே |
14 |
612 |
கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே |
15 |
613 |
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே |
16 |
614 |
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில் இளைப்பின்றி மார்க்கழி ஏற்றம தாமே |
17 |
615 |
முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலமிடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயர்நிலை வானவர் கோனே |
18 |
616 |
நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே கடலித் திருந்து கருதவல் லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந் தாரே |
19 |
617 |
1 அறிவாய சத்தென்னு மாறா றகன்று செறிவான மாயை சிதைத்தரு ளாலே பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே |
20 |
1 அறியா யசந்தென்னு |
9. சமாதி
618 |
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே |
1 |
619 |
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே |
2 |
620 |
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத் துள்ளே மனோலய மாமே |
3 |
621 |
விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்- கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள் செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை கொண்டு குதிரை குசைசெறுத் தாரே |
4 |
622 |
மூல நாடி 1 முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வௌiயுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே |
5 |
1 முக்கடல் |
623 |
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே |
6 |
624 |
பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத் தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே |
7 |
625 |
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார் அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே |
8 |
626 |
நம்பனை யாதியை நான்மறை ஓதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க் கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே |
9 |
627 |
மூலத்து மேலது முச்சது ரத்தது காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே |
10 |
628 |
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே |
11 |
629 |
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங் குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந் துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே |
12 |
630 |
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் 1 உள்நின்ற சீவனு மாகுமால் ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடிபணிந் தன்புறு வாரே |
13 |
1 முன்நின்ற |
631 |
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ் சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற் சமாதிதா னில்லை தானவ னாகிற் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே |
14 |
10. அட்டாங்கயோகப் பேறு
இயமம்
632 |
போதுகந் தேறும் புரிசடை யானடி யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு மாதுகந் தாடிடு மால்விடை யோனே. |
1 |
நியமம்
633 |
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே |
2 |
ஆதனம்
634 |
வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே |
3 |
பிராணாயாமம்
635 |
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்fகொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே |
4 |
பிரத்தியாகாரம்
636 |
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே |
5 |
தாரணை
637 |
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே |
6 |
தியானம்
638 |
தூங்க1வல் லார்க்கும் துணையேழ் புவனமும் வாங்கவல் லார்க்கும் வலிசெய்து 2 நின்றிடுந் தேங்க3வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந் தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே |
7 |
1 வல்லார்க்குத் | ||
2 நின்றிட்டுத் | ||
3 வல்லார்க்குத் |
சமாதி
639 |
காரிய மான உபாதியைத் தாங்கடந் தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற ஆரிய காரண மாய தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே |
8 |
11. அட்டமா சித்தி
பரகாயப் பிரவேசம்
640 |
பணிந்தெண் திசையும் பரமனை நாடித் துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே |
1 |
641 |
பரிசறி வானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவௌi கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே |
2 |
642 |
குரவன் அருளிற் குறிவழி மூலன் பரையின் 1 மணமிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே |
3 |
1 மனமிகு சக்கட்ட மார்த்துத் |
643 |
காயாதி பூதங் கலைகால மாயையில் ஆயா தகல அறிவொன் றனாதியே ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலு மாமே |
4 |
644 |
இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம் மருவிய கன்ம மாமந்த யோகந் தருமிவை காய உழைப்பாகுந் தானே 1 அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே |
5 |
1 அருமிரு |
645 |
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின் உதய மதுநா லொழியவோ ரெட்டுப் பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில் திதமான ஈராறு சித்திக ளாமே |
6 |
646 |
நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால் நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம் பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின் நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே |
7 |
647 |
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந் தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ் சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதிற் றான்பர காயமே |
8 |
648 |
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் 1 ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று 2 ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே |
9 |
1 நேரொன்று | ||
2 ஓரொன்று |
649 |
தானே அணுவுஞ் சகத்துத்தன் 1 நொய்ம்மையும் மானாக் 2 கனமும் பரகாயத் தேகமுந் தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் 3 வியாபியு மாம்எட்டே |
10 |
1 நோன்மையும் | ||
2 ககனமும் | ||
3 வியாப்பிய |
650 |
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர் வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக் 1 கோங்கி வரமுத்தி முந்திய வாறே |
11 |
1 கோண்-கிய வாமுத்தி |
651 |
முந்திய முந்நூற் றறுபது காலமும் வந்தது நாழிகை வான்முத லாயிடச் சிந்தை 1 செயச்செய மண்முதல் தேர்ந்தறிந் துந்தியில் நின்று உதித்தெழு மாறே |
12 |
1 செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள் |
652 |
சித்தந் திரிந்து சிவமய மாகியே முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர் சித்தம் பரத்தில் திருநடத் தோரே |
13 |
653 |
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே |
14 |
654 |
இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய் இருக்கு 1 முடலி லிருந்தில வாகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே |
15 |
1 முடலீ திருந்தில |
655 |
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனு 1 முடமதாய் fவீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே |
16 |
1 முடமதாம் |
656 |
கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன் கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற் கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே |
17 |
657 |
நாடியின் ஓசை நயனம் இருதயந் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் 1தாரே |
18 |
1 தார்க்களே |
658 |
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட(fகு) ஒன்பது 1 காட்சி யிலைபல வாமே |
19 |
1 வாசல் உலைநலமாமே |
659 |
ஓங்-கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல வாங்கி இரவி மதிவழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் 1 அருவழி யோர்க்கே |
20 |
1 அறிவுடை |
660 |
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே |
21 |
661 |
ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர் நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே |
22 |
662 |
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டிட்ட 1 கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் 2 கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப் பொட்டிட்டு நின்று பூரண மானதே |
23 |
1 கண்ணியர் | ||
2 தட்டிட்டு நின்று தளண்-களி உ\டுபோய்ப் |
663 |
பூரண சத்தி ஏழுமூன் றறையாக ஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண மாகிக் கலந்து விரிந்ததே |
24 |
664 |
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற் பரந்து குவிந்தது பார்முதற் பூதம் இரைந்தெழு வாயு விடத்தினில் 1 ஒடுங்கே |
25 |
1 ஓண்-கே |
665 |
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடைபடு வாயுவு மாறியே நிற்குந் தடையவை 1 யாறேழுந் தண்சுட ருள்ளே மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே |
26 |
1 யாறெழுந் |
666 |
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு வதனுள் மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே நடங்கொண்ட 1 கூத்தனும் நாடுகின் றானே |
27 |
1 கூத்தனை நாடுகின் றேனே |
667 |
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே |
28 |
668 |
அணுமாதி சித்திக ளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பரகாய மேவல் 1அணுவத் தனையெங்குந் 2தானாத லென்றெட்டே |
29 |
1 அணுமைத் | ||
2 தானாக |
669 |
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற் கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும் ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே |
30 |
670 |
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ் சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை சத்தி அருள்தரத் தானுள வாகுமே |
31 |
அணிமா
671 |
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் இட்டம துள்ளே 1 இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே |
32 |
1 இருக்கல் |
672 |
மந்தர மேறு மதிபானு வைமாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்றி நற்1கா மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே |
33 |
1 காய மிய |
673 |
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனுந் தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே |
34 |
லகிமா
674 |
ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச் சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே |
35 |
675 |
மாலகு வாகிய மாயனைக் கண்டபின் தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும் பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே |
36 |
மகிமா
676 |
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின் மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே |
37 |
677 |
ஆகின்ற காலொளி யாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவது மில்லையாம் மேனின்ற காலம் வௌiயுற 1 நின்றன 2 தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே |
38 |
1 நின்றபின் | ||
2 தாழ்கின்ற |
678 |
தன்வழி யாகத் தழைத்திடு ஞ்aனமுந் தன்வழி 1 யாகத் தழைத்திடும் வையகந் தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந் தன்வழி தன்னரு ளாகிநின் றானே |
39 |
1 மீதாகத் |
பிராத்தி
679 |
நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் 1 படையவை யெல்லாங் கொண்டவை யோராண்டு கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே |
40 |
1 படையானவையெலாண் |
கரிமா
680 |
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின் பாகின்ற பூவிற் பரப்பவை காணலா 1 மேகின்ற காலம் வௌiயுற நின்றது போகின்ற காலங்கள் போவது மில்லையே |
41 |
1 மேனின்ற |
681 |
போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே |
42 |
682 |
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில் பறிந்தது பூதப் படையவை யெல்லாங் குவிந்தவை யோராண்டு கூட இருக்கில் 1 விரிந்தது பரகாய மேவலு மாமே |
43 |
1 விரிந்த |
பிராகாமியம்
683 |
ஆன விளக்கொளி யாவ தறிகிலர் மூல விளக்கொளி முன்னே யுடையவர் கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு மேலை விளக்கொளி வீடௌi தாநின்றே |
44 |
ஈசத்துவம்
684 |
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாங் கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற் பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே |
45 |
685 |
ஆகின்ற சந்திரன் 1 தன்னொளி யாயவன் ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவ நாமே |
46 |
1 தண்ணளி |
686 |
தானே படைத்திட வல்லவ னாயிடுந் தானே யளித்திட வல்லவ னாயிடுந் தானே சங்காரத் தலைவனு மாயிடுந் தானே யிவனெனுந் தன்மைய னாமே |
47 |
687 |
தன்மைய தாகத் தழைத்த கலையினுள் பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே |
48 |
வசித்துவம்
688 |
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங் கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே |
49 |
689 |
தன்மைய தாகத் தழைத்த பகலவன் மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மைய தாகப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே |
50 |
690 |
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன் அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங் கற்கொடி யாகிய காமுக னாமே |
51 |
691 |
காமரு தத்துவ மானது வந்தபின் பூமரு கந்தம் புவனம தாயிடும் மாமரு 1 வுன்னிடை மெய்த்திடு மானனாய் நாமரு வுமஔi நாயக மானதே |
52 |
1 வுன்னிடம் எய்திடு |
692 |
நாயக மாகிய நல்லொளி கண்டபின் தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் போயக மான புவனங்கள் கண்டபின் பேயக மாகிய பேரொளி காணுமே |
53 |
693 |
பேரொளி யாகிய பெரியஅவ் 1 வேட்டையும் பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன் தாரொளி யாகத் தரணி முழுதுமாம் ஓரொளி யாகிய காலொளி காணுமே |
54 |
1 வெட்டையும் |
694 |
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் காலது அக்கொடி நாயகி தன்னுடன் காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங் காலது 1 வேண்டிக் கொண்டஇவ் வாறே |
55 |
1 பெண்மண்டிக் |
695 |
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள் ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள ஆறது வாயிர மாகு மருவழி ஆறது வாக வளர்ப்ப திரண்டே |
56 |
696 |
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே |
57 |
697 |
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது அஞ்சது வன்றி இரண்டது வாயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே |
58 |
698 |
ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே |
59 |
699 |
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் முன்னுறும் 1 ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே |
60 |
1 ஐம்பதொ டொன்றுடன் |
700 |
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே |
61 |
701 |
இருநிதி யாகிய எந்தை யிடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே |
62 |
702 |
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடமது சொல்லில் எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய் எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே |
63 |
703 |
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட எட்டது கால்கொண் டிடவகை 1 யொத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே |
64 |
1 ஏற்றபின் |
704 |
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற் சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச் சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத் துந்திச் சமாதி யுடையொளி யோகியே |
65 |
705 |
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல் வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல் 1 சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல் நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே |
66 |
1 சிணண்-குற்ற வாயர் சித்திதாண்- கேட்டல் |
706 |
மரணஞ் 1 சரைவிடல் வண்பர காயம் இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல் அரணன் 2 திருவுற வாதன்மூ வேழாங் 3 கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே |
67 |
1 சிறைவிடல் | ||
2 திருவுரு | ||
3 கரணுறு |
707 |
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே. |
68 |
708 |
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே |
69 |
709 |
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தமீ தானந்த யோகமே |
70 |
710 |
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள் விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் பதியது காட்டும் பரமன்நின் றானே |
71 |
711 |
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு 2 நட்டறி வார்க்கு நமனில்லை தானே கட்டவல் லார்கள் 1 கரந்தெங்குந் தானாவர் மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து |
72 |
1 கலந்தெண்-குந் | ||
2 நட்டிடு |
12. கலை நிலை
712 |
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழிதருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே |
1 |
713 |
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங் காக்கலு மாகுங் கலைபதி நாறையுங் காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங் காக்கலு மாகுங் கருத்துற நில்லே |
2 |
714 |
நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியில் 1 அலைவற வாகும் வழியிது வாமே |
3 |
1 மலைவறி |
715 |
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ் சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே |
4 |
716 |
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு வொளிப்பெற நிற்கத் தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே |
5 |
717 |
சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதக மாக விளைந்து கிடக்குமே |
6 |
718 |
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே பங்கய மாகத் தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே |
7 |
719 |
தனே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவாலய மாகுமே |
8 |
720 |
திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகில ராரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே |
9 |
721 |
சோதனை தன்னில் துரிசறிக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள் 1 சாதன மாகுங் குருவை வழிபட்டு மாதன மாக மதித்துக்கொள் ளீரே |
10 |
1 சாதக மாகுண்- குருவழி பட்டு |
722 |
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல் நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும் பேராது காயம் பிரான்நந்தி ஆணையே |
11 |
723 |
ஓசையில் ஏழும் ஔiயிங்கண் ஐந்தும் நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந் தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள் மாசறு சோதி வகுத்துவைத் தானே |
12 |
13. காயசித்தி உபாயம்
724 |
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே |
1 |
725 |
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே |
2 |
726 |
1 சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங் கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே |
3 |
1 சுழித்துக் |
727 |
அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத்தி யானத்திற் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே |
4 |
728 |
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் 1 நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு ஊன்றி யிருக்க உடம்பழி யாதே |
5 |
1 நான்றவிழ் |
729 |
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபது மாறும் புகுவரே |
6 |
730 |
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான் மத்தியா னத்திலே 1 வாத்தியங் கேட்கலாந் தித்தித்த கூத்துஞ் சிவனும் வௌiப்படுஞ் சத்தியஞ் 2 சொன்னோஞ் சதாநந்தி ஆணையே |
7 |
1 வாக்கியண் | ||
2 சொன்னேன் |
731 |
திறத்திறம் விந்து திகழு மகார முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார மறிப்பது மந்திர மன்னிய நாத மறப்பெற யோகிக் கறநெறி யாமே |
8 |
732 |
உந்திச் சுழியி 1 னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந fதிரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே |
9 |
1 உடனே |
733 |
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே |
10 |
734 |
நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே |
11 |
735 |
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே |
12 |
736 |
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் கண்டிச் சிக்குநற் காயமு மாமே |
13 |
737 |
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே |
14 |
738 |
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட 1 வாயுச் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக மாங்கன்று நின்று வளர்க்கின்ற வாறே |
15 |
1 வாயுவுன்ய் சரீர |
739 |
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற 1 நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே |
16 |
1 நீர்க்கொள நெல்லின் |
14. கால சக்கரம்
740 |
மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே |
1 |
741 |
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங் கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை 1 அற்ற தறியா தழிகின்ற வாறே |
2 |
1 அற்றறியா |
742 |
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங் கழிகின்ற காலறு பத்திரண் டென்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே |
3 |
743 |
திருந்து தினமத் தினத்தி நொடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே |
4 |
744 |
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலே |
5 |
745 |
நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே |
6 |
746 |
ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதியங்க ணாள்விதித் தானே |
7 |
747 |
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி 1 பத்தெட்டும் பாரா திகணால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே |
8 |
1 பத்தெட்டுப் |
748 |
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரண மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே |
9 |
749 |
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே |
10 |
750 |
நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ் சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே 1 நின்றிடும் உன்னி 2 யுணர்ந்திடும் ஓவியந் தானே |
11 |
1 நின்றிடில் | ||
2 அணைந்திடும் |
751 |
ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே |
12 |
752 |
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று 1 மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே |
13 |
1 மகிழ்ந்துடன் |
753 |
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குட னாதித்த னாறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே |
14 |
754 |
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே |
15 |
755 |
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் 30 சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே |
16 |
756 |
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே |
17 |
757 |
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே |
18 |
758 |
சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் 1 கோடி யுகமது வாமே |
19 |
1 கூடி |
759 |
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி 1 கண்டு ளயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் குகங்கோடி கண்டல் குயருறு வாரே |
20 |
1 கண்டு ளயர்வறக் |
760 |
உயருறு வாருல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் கயலுறு கண்ணியைக் காணகி லாரே |
21 |
761 |
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாங் காணகி லாமற் கழிகின்ற வாறே |
22 |
762 |
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே |
23 |
763 |
கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் திண்ணென் றிருக்குஞ் சிவகதி 1 யாநிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே |
24 |
1 யாய்நிற்கும் |
764 |
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே |
25 |
765 |
கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறு மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே |
26 |
766 |
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே |
27 |
767 |
அவனிவ நாகும் பரிசறி வாரில்லை அவனிவ நாகும் பரிசது கேள்நீ அவனிவ நோசை ஔiயினுள் ஒன்றிடும் அவனிவன் வட்டம தாகிநின் றானே |
28 |
768 |
வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே |
29 |
769 |
காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியங் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே |
30 |
15. ஆயுள் பரிட்சை
770 |
வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தம மிக்கிடில் ஓராறு தங்களா மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே |
1 |
771 |
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை 1 யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை யுணர்ந்த உணர்விது வாமே |
2 |
1 பிறந்தவர் |
772 |
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை யளித்திடும் பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந் தாமே யுலகில் தலைவனு மாமே |
3 |
773 |
தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை தலைவ னிடம்வல மாயிடில் தையல் தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில் தலைவ நிடம்வலந் தன்வழி நூறே |
4 |
774 |
ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந் தேறியே நின்று தௌiயிவ் வகையே |
5 |
775 |
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை 1 ஐம்பதே யென்ன அறியலாஞ் செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே |
6 |
1 யையொன்பதே |
776 |
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற் 1 எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே |
7 |
1 எண்முன் றினாலும் |
777 |
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் போக்கலு மாகும் புகலற ஒன்றெனில் தேக்கலு மாகுந் திருந்திய பத்தே |
8 |
778 |
ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் பாயிரு நாலும் பகையற நின்றிடும் தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில் 33 ஆயுரு வாறென் றளக்கலு மாமே |
9 |
779 |
அளக்கும் வகைநாலும் அவ்வழியே 1 ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில் களக்க மறமூன்றிற் காணலு மாமே |
10 |
1 ஓடிடில் |
780 |
காணலு மாகுங் கருதிய பத்தோடிற் காணலு மாகுங் கலந்த இரண்டையும் காணலு மாகுங் 1 கலப்பற மூவைந்தேற் காணலு மாகுங் கருத்துற ஒன்றே |
11 |
1 கலப்புற மூவைந்தேழ் |
781 |
கருதும் இருபதிற் 1 காண ஆறாகும் கருதிய 2 ஐயைந்திற் காண்பது மூன்றாம் கருதும் இருப துடனாறு காணிற் கருதும் இரண்டெனக் காட்டலு மாமே |
12 |
1 ஈராறாகும் | ||
2 ஐந்திற் |
782 |
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக் காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே |
13 |
783 |
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரஞ்செய் கின்ற 1 வகையாறஞ் சாமாகில் ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே |
14 |
1 வகையான்ய் சமாதியில் |
784 |
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ் சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் மன்றியல் பாகு மனையில் இரண்டே |
15 |
785 |
மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ் சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே |
16 |
786 |
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் ஆரு மறியார் அறிவறிந் தேனே |
17 |
787 |
அறிவது வாயுவொ டைந்தறி வாய அறிவா வதுதான் உலகுயி ரத்தின் பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற் செறிவது நின்று திகழு மதுவே |
18 |
788 |
அதுவரு ளும்மரு ளான துலகம் பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி இதுவருள் செய்யும் இறையவ னாமே |
19 |
789 |
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி யாவது பற்றறும் பாசம் அழப்படி செய்வார்க் ககலு மதியே |
20 |
16. வாரசரம்
790 |
வௌfளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஔfளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் தௌfளிய தேய்பிறை தான்வல மாமே |
1 |
791 |
வௌfளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஔfளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே |
2 |
792 |
செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும் இவ்வா றறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே |
3 |
793 |
மாறி வருமிரு பான்மதி வெய்யவன் ஏறி இழியுந் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந் தேறி அறிமின் தெரிந்து தௌiந்தே |
4 |
794 |
உதித்து வலத்திடம் போகின்ற போது 1 அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும் உதித்தது வேமிக வோடிடு மாகில் உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே |
5 |
1 அதிற்கஞ்சி |
795 |
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே |
6 |
796 |
ஆயும் பொருளும் அணிமலர் மேலது வாயு விதமும் பதினா றுளவலி போய மனத்தைப் பொருகின்ற வாதாரம் ஆயவு நாளு 1 முகுர்த்தமு மாமே |
7 |
1 முகுத்தமு |
17. வாரசூலம்
797 |
வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வௌfளி குடக்காக நிற்குமே |
1 |
798 |
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே |
2 |
18. கேசரி யோகம்
799 |
கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே |
1 |
800 |
வண்ணான் ஒலிக்குஞ் f சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி 1 விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை 2 நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே |
2 |
1 விண்ணாற்றைத் தேக்கி | ||
2 நிரப்பிட்டு |
801 |
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை 1 நீக்கி உணரவல் லார்க்கட் கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே |
3 |
802 |
ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே |
4 |
803 |
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி யூனே |
5 |
804 |
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தௌiயலு மாமே |
6 |
805 |
மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற் காலனும் இல்லை கதவுந் திறந்திடும் ந்யாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே |
7 |
806 |
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே |
8 |
807 |
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை யாடிய தீங்கரும் பாமே |
9 |
808 |
தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர் ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே |
10 |
809 |
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே |
11 |
810 |
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் 1 கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே |
12 |
1 கோய்ந்தறிந் |
811 |
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே |
13 |
812 |
தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன் மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே |
14 |
813 |
மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறு1நூற் றிருபத்து நாலாய்க் கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி எதிர்மலை யாமல் இருந்தனன் தானே |
15 |
1 உ\ற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே |
814 |
இருந்தனள் சத்தியு மக்கலை சூழ இருந்தனள் கன்னியு மந்நடு வாக இருந்தனள் மானேர் முகநில வார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே |
16 |
815 |
பொழிந்த இருவௌfளி பொன்மண் ணடையில் வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக் கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் கொழுந்தது வாகுண்- குணமது தனே |
17 |
816 |
குணமது வாகிய கோமள வல்லி மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் தனமது வாகிய தத்துவ ஞானம் இனமது வாக இருந்தனன் தானே |
18 |
817 |
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே |
19 |
818 |
மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக் கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப் பண்டகத் துள்ளே பகலே ஔiயாகக் குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே |
20 |
819 |
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங் கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே |
21 |
820 |
பையினி நுள்ளே படிக்கத வொன்றிடின் மெய்யினி நூfளே விளங்கும் ஔiயதாங் கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின் மையணி கோயில் மணிவிளக் காமே |
22 |
821 |
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி 1 நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே |
23 |
1 நலண்-கிடுண்- காமத்து நாடியி உள்ளே |
822 |
சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ் சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ் சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற் சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே |
24 |
823 |
தூர தெரிசனஞ் f சொல்லுவன் காணலாங் காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற் பாரா ருலகம் பகன்முன்ன தாமே |
25 |
824 |
முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும் நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத் தன்னெழு கோயில் தலைவனு மாமே |
26 |
19. 1 பரியண்-க யோகம்
1 பரியண்-கி யோகம்
825 |
பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக் காயக் குழலி கலவி யொடுங்கலந் 1 தூசித் துளையுறத் தூங்காது 2 போகமே |
27 |
1 தூசத் துணையறத் | ||
2 யோகமே |
826 |
போகத்தை யுன்னவே போகாது வாயுவு மோகத்தை வௌfளியு மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந் தாதிற் குழைந்து தலைகண்ட வாறே |
28 |
827 |
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மாண்டலங் கொண்டிரு பாலும் வௌiநிற்கும் வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது அங்கமே |
29 |
828 |
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே |
30 |
829 |
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந் தலைவனு மாயிடுந் தன்வழி போகந் தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே |
31 |
830 |
அஞ்சு 1 கடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே |
32 |
1 கடிகையில் ஆறாண்- கடிகைமேற் |
831 |
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே |
33 |
832 |
ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில் விண்ணந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் 40 எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே |
34 |
833 |
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமுன்ய் சோர்வில்லை வௌfளிக்கே |
35 |
834 |
வௌfளி யுருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே |
36 |
835 |
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தக நாய்நிற்கும் வெங்கதி ரோனே |
37 |
836 |
வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந் தங்களிற் பொன்னிடை வௌfளிதா ழாமுனந் தங்களிற் செவ்வாய் 1 புதைத்திருந் தாரே |
38 |
1 புதனிருந் தானே |
837 |
திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந் துருத்தியுள் வௌfளியஞ் சோரா தெழுமே |
39 |
838 |
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஔiயை அறிந்தபின் விழுகின்ற தில்லை வௌiயறி வார்க்கே |
40 |
839 |
வௌiயை அறிந்து வௌiயி னடுவே 1 ஔiயை அறியி நுளிமுறி யாமே தௌiவை அறிந்து செழுநந்தி யாலே வௌiயை அறிந்தனன் மேலறி யேனே |
41 |
1 உளியை |
840 |
மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலா நிலத்தி நடுவான வப்பொருள் மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே |
42 |
841 |
மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னை தலைப்பெய்ய 1 வல்லாரேன் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே |
43 |
1 வல்லீரே |
842 |
வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே |
44 |
843 |
உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற் கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே |
45 |
844 |
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஔiயது 1 ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே |
46 |
1 ஒன்றில்லை |
20. அமுரிதாரணை
845 |
உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே |
1 |
846 |
தௌiதரும் இந்தச் சிவநீர் பருகில் ஔiதரு மோராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங் களிதருங் காயங் கனகம தாமே |
2 |
847 |
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தௌiயுச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே |
3 |
848 |
கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறு நமனுமங் கில்லையே |
4 |
849 |
அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் 1 இளகும் மேனி இருளுங் கபாலமே |
5 |
1 இளகிடு |
850 |
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் சோதி மருந்திது சொல்லவொண் ணாதே |
6 |
21. சந்திர யோகம்
851 |
எய்து 1 மதிக்கலை சூக்கத்தி லேறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந் துய்யது சூக்கத்து தூலத்த காயமே |
1 |
1 மதிநிலை |
852 |
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள் ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே |
2 |
853 |
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலங் கவர்க்கொளப் பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே |
3 |
854 |
பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே |
4 |
855 |
எட்டெட் டனிfலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே |
5 |
856 |
எட்டெட்டும் ஈராறும் 1 ஈரெட்டுந் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படுந்தார கைகதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே |
6 |
1 ஈரெட்டுத் |
857 |
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே |
7 |
858 |
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு வங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே |
8 |
859 |
தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே |
9 |
860 |
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானான்ய் சொரூபமே |
10 |
861 |
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச் செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே |
11 |
862 |
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே |
12 |
863 |
ஒன்றிய ஈரெண் கலையும் உடல் சார்ந்த உற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் 1 கருத்துழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே |
13 |
1 கருக்குழி |
864 |
அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி அங்கி 1 சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே |
14 |
1 சிவத்தினிற் |
865 |
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே |
15 |
866 |
காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே |
16 |
867 |
பாலிக்கும் நெஞ்சம் 1 பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் காலைக்குச் சங்கு கதிரவன் தானே |
17 |
1 பரையோசை |
868 |
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ நீச நிடமது தானே |
18 |
869 |
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை 1 அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் 2 அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே 3 மகன்பிறந் தானே |
19 |
1 அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர் | ||
2 அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின் | ||
3 மகனிருந் தானே |
870 |
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்fகள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் வேதியன் அங்கே வௌiப்படுந் தானே |
20 |
871 |
பாம்பு மதியைத் 1 தினலுறும் பாம்பினைத் தங்கு கதிரையஞ் 2 சோதித் தனலுறும் பாம்பு மதியும் பகைதீர்த் 3 துடங்கொளீஇ நீண்-கல் 4 கொடானே நெடுந்தகை யானே |
21 |
1 தினலுறு மப்பாம்பு | ||
2 சேரத் தினலுறும் | ||
3 துடங்கொளின் | ||
4 கொடானெம் |
872 |
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே |
22 |
873 |
சசியுதிக் குமஅள வுந்துயி இன்றிச் சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் சசிசரிப் 1 பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே |
23 |
1 பிங்கட் டன்றுயில் |
874 |
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்க்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழவல் லார்.க்1இச் சசிவன்ன ராமே |
24 |
1 இன் வழிச்சைவ ராமே |
875 |
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண்மதி வீழ்வள விற்கண மின்றே |
25 |
876 |
வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந் தளர்க்கின்ற சந்திரன் தங்கலை யாறு 1 மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே |
26 |
1 மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம் |
877 |
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே |
27 |
878 |
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ் சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே |
28 |
879 |
உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே |
29 |
880 |
விடாத மனம்பவ நத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே |
30 |
881 |
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இகில்லை நற்கலை நாளனஇல்லை தானே |
31 |
882 |
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே |
32 |
883 |
மாறு 1 மதியும் 2 மதித்திரு மாறின்றித் தாறு படாமல் தண்டோடே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே |
35 |
1 மதியுமா தித்தனு மாறின்றித் | ||
2 ஆதித்தனு 2 மதித்திடு |
மூன்றாந் தந்திரம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - மூன்றாந் தந்திரம் , மாமே, தானே, மாகுங், வாயு, உள்ளே, வாறே, நாயகி, தன்வழி, காணலு, தலைவனு, ஆகின்ற, சந்திரன், சமாதி, தாரகை, நின்ற, துள்ளே, நின்று, றானே, வாமே, பன்னிரண், வாரில்லை, வாயுவை, மாகும், இல்லை, யாகிய, காலம், ஒன்பது, தத்துவ, னாமே, நின்றது, தன்னுடன், காக்கலு, காலங்கள், தாமே, அங்கே, காணுமே, அங்கி, ஈசன், நந்தி, யோகம், கலந்த, கழிகின்ற, கால்கொண், நாடி, கண்டபின், மூன்று, அறிந்தபின், வாரே, சொல்லலு, உபாயம், காணகி, யாமே, கருத்துற, சோதி, நரைதிரை, தீவினை, ஆணையே, ஆறும், தாரே, காட்டலு, மாயிடுந், முப்பத்து, மண்டலம், ஆறது, மண்டல, முன்னே, விளக்கொளி, சத்தி, தன்மைய, ணாதே, அப்பொருள், இருந்தனள், திங்கள், கண்டவர், நூறும், வாயுவும், வாசல், யாகுமே, எழுகின்ற, லார்க்கு, தந்திரம், தலைவ, மூன்றாந், ஆதனம், பாயும், சோதியை, அவ்வவர், ஒன்றது, தரணி, ஈராறு, தாரணை, அவனிவ, சித்தி, காதல், ஒருபொழு, யாகத், தன்னை, டங்குலம், பிராணன், துன்னார், வாகிய, காயம், லார்கள், யாவது, லாமே, நமனில்லை, காலது, நாழிகை, போகின்ற, மறியார், இருக்கலு, யோகமே, யுள்ளே, லாதார், நூறு, பூதப், நாமே, முடிவிலே, மாகத், இருப்பது, லாமற், வேண்டாம், வானவர், குழல்வழி, கொண்டு, நாடவல், தண்டுடன், மாரும், யேசென்று, சேரவே, கிருக்கில், தழைத்த, வழிசெய்து, படையவை, அண்ணலைக், யோராண்டு, கங்கை, ளாகிய, நின்றிடின், ஏதும், மெய்ப்பொருள், நின்றிடும், றில்லை, மில்லை, வாகும், அஞ்சது, இரண்டது, ஆயிரம், தாகிய, இருநிதி, சதாசிவ, கூடி, மாகுமே, னாயிடுந், கிருந்திடும், வாகுமே, அட்டமா, சித்திக, காலத்து, சிந்தித், காரண, வல்லார்க்குத், அழிகின்ற, சிவகதி, மாறு, லார்க்கும், மந்திர, ஒத்தஇவ், திருமுறை, றேனே, தேனே, சாதக, ஒடுங்கே, மானதே, தனஞ்செயன், மாறும், அறுபதும், தாமரை, யாறு, வௌfளி, யாளர்த்தம், வானீர், மேலை, மேலே, நாபிக்கு, கடிகையில், தங்கே, எழுப்பி, பராநந்தி, விளங்கும், எல்லாம், முன்னுறு, வாழலு, நிற்குமே, காலை, வரும்வழி, கீழே, பஞ்ச, அறிந்து, கேசரி, விரகறி, ஒக்க, நாலும், இயமம், நியமத்த, நாதன், சொன்னோம், புறப்பட்டுப், வுள்ளே, இருக்க, ராமே, மருந்தென்றும், ஈரெட்டு, தியானம், லார்க்குக், கருதும், அறிவா, பார்க்கலு, பத்தும், தானில்லை, இரண்டும், வாயுவுங், காணும், காயங், ஒன்றுண்டு, வலிக்கும், நிற்கும், யாய்நிற்கும், வீங்க, மிளகு, இதற்கு, ஆய்ந்துகொள், அளக்கும், செய்கின்ற, பருகிச், அண்ணல், நோக்கிடிற், கருதிய, ஓடில், அமர்ந்திடும், ஆனந்தம், வெங்கதி, தங்களிற், வாய்ந்த, அறியார், கடிகை, பரியங்க, செய்திடும், பொன்னிடை, மதிக்கலை, பொருளிது, லேறியே, மின்னிடை, வௌiயை, தில்லை, ஔiயை, வழிபாடு, மாகுந், ஆய்வரும், முடிவகை, சொல்லிடில், பூரணை, வீழ்வள, ஓடிடில், தினலுறும், சோதியுள், மதியும், ஒன்றே, எடுத்துளும், உடம்பும், அஞ்சு, மாறின்றித், உணர்வும், தங்கலை, வுந்துயி, உறைகின்ற, தண்மதி, பாம்பு, வண்ணம், கேட்டல், கலையும், நாகும், கட்டப், உயர்க்கலை, அழியும், அஞ்சுடன், இருந்த, வாயர், சூரியன், அந்திக்கு, ஈசனும், அந்தித்த, கதிரவன், பக்கத்துத், தங்கு, கட்டி, நின்றிடிற், ஆதித்தன், சேர்தலு, கடந்தது, அளக்கின்ற, நாலுங், கூறு, பாரா, பான்மதி, மூன்றுக்கும், இடைபிங், நேரொத்த, படாமற், ஒன்றிய, நாளே, வருகின்ற, பாகு, பாலிக்கு, நீக்கி, செய்யில், கன்றிய, கண்டு, யோகி, தலைப்பெய்ய, காண்பர்கள், கூத்தனு, தலைப்பெய்து, வௌfளிவெண், நாளு, நோக்கிடில், செய்யும், கண்டும், ஔfளிய, செவ்வாய், நின்றிடில், உன்னி, மகிழ்ந்துடன், கேள்நீ, போம்வழி, சுழல்கின்ற, நெல்லின், வளர்க்கின்ற, உடம்பை, மூன்றும், ஐந்தும், மேலெழ, உடம்பினை, யிறந்தவர், இருந்தனன், குணமது, இரண்டையும், வல்லீரேல், பரியண், சாத்திடு, படியை, கோயில், தன்னிற், பேராமற், பிரியுநாள், நுள்ளே, சிவனும், விந்து, சுருங்கில், பாலனு, மாறிடும், வானூறல், அங்கியுள், சரீர, திருவடி, கலந்திரு, வகையறி, அறிய, வீரே, படிக்கத, திகழு, ஊனீர், பாவினை, கூறா, பகலோன், போகாது, வாயுவு, வாய்திற, வாதார், காலமும், உயிரது, அறியில், இரண்டு, பள்ளி, என்ன, வைத்துப், கோடி, முன்னம், வார்க்குக், வந்தித், நோக்கி, வந்த, நின்றால், கலந்துநின், வாசற், குறிக்கொண்மின், பெருந்தகை, யானே, யூடே, றிருப்பார்க்கு, காட்சி, தோன்றும், தாதியிற், மேவல், இயங்கும், உணரவல், பாசம், இமையவர், யாதே, லார்க்கே, நாதம், கொண்ட, ஓடித், கொள்ளி, பகலே, அறையிற், கல்லது, தூங்கவல், பூவே, மனத்து, விண்ணாறு, கலந்தங், உற்ற, எண்ணா, குள்ளே, நாடியே, நயனம், சிவனவ, நோக்கிற், வந்து, வைத்து, கோதில், பிராணாயாமம், சனமே, அரிய, சீர்திகழ், துள்ளி, ஆரிய, பிராண, முப்பத், மிக்க, குருவின், குதிரை, பங்கய, ஐந்து, நிரைத்த, எட்டும், அட்டாங்க, திருமந்திரம், பத்தாம், மாவது, நியமம், கேள்வி, களவு, யுணர்ந்த, ஆங்கே, வஞ்சக, வாங்கி, காணலாம், தாபிக்கு, குணம்பல, டுள்ளே, பிரத்தியாகாரம், மந்திரந், அறிகிலர், கிருவிரற், பாலித்த, முன்நின்ற, மூலத், டானைக்குப், பாகன், கணக்கறி, கும்பித்து, பிடிக்குங், காற்றைப், இருக்கினும், கறுக்கும், போகான், டானையைப், மங்கையர், யோனே, புரிசடை, தலைப்பட்ட, யோகிக்கு, நாடுகின், மணிவிளக், மடங்கி, தன்னில், ருள்ளே, ளானவை, பரகாய, மாலகு, தழைத்தங், சேர்தலால், நடுநாடி, யோகத்தாற், மங்கை, பூரண, பிண்டத்துள், றங்கே, நாடியின், கண்ணினிற், கண்ணில், நாடியி, பாடியுள், கட்டிட்டு, கன்னியர், கட்டிட்ட, பகைவரைக், தற்பொரு, கைப்பொரு, மென்மைய, நற்கொடி, தாகப், தாகத், வல்லவ, அக்கொடி, புவனங்கள், மாகு, சொல்லில், பேரொளி, மாகிய, நாயக, அறிந்த, வார்க்கே, மேனின்ற, வௌiயுற, போவது, காலொளி, ளாகக், நின்றன, பிராத்தி, பூவிற், கொண்டவை, யெல்லாங், கண்டன, வியாதிகள், றிருபத்து, காலன், இல்லையே, நாலு, வாகக், மன்மனத், நிற்குங், உண்டு, மேலது, கொண்டதே, திகழ்கின்ற, மாட்டார், வானோர், மன்மனம், அந்த, மண்டலத், மாகில், சொன்றுண்டு, பிரியா, மூன்றினும், திருந்து, மாறா, சந்தியி, தலைப்படுந், கூடும், யமாதியிற், நாடிப், சமாதியே, காயமே, எண்சித்தி, நீடுங், மேவலு, கண்டேன், வாங்கிய, முந்திய, இருக்கும், மாறே, வான்முத, முந்நூற், பரிசறி, பிரானை, பிரமன், தானவ, ஆதியும், சோதித், தத்துவங், சமாதியில், தேறும், யாளர், தேவர்கள், கலவி, தாங்கே, அஞ்சே