ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.089.திருவெண்பாக்கம்
7.089.திருவெண்பாக்கம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - வெண்பாக்கத்தீசுவரர்.
தேவியார் - கனிவாய்மொழியம்மை.
902 |
பிழையுளன பொறுத்திடுவர் பழியதனைப் பாராதே குழைவிரவு வடிகாதா உழையுடையான் உள்ளிருந் |
7.089.1 |
'குழை பொருந்திய, தூங்குங்காதினை உடையவனே, நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய்; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ?' என்று யான் வினாவ, மானை ஏந்திய அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
903 |
இடையறியேன் தலையறியேன் நடையுடையன் நம்மடியான் விடையுடையான் விடநாகன் உடையுடையான் எனையுடையான் |
7.089.2 |
யான் யாதொரு செயலிலும் 'முதல் இன்னது; நடு இன்னது; முடிவு இன்னது;' என்று அறியேன்; 'எம் பெருமானே எனக்குப் புகலிடம்; ஆவது ஆகுக' என்று கவலையற்றிருப்பேன்; அதனையறிந்திருந்தும், இடப வாகனத்தை யுடையவனும், விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும், வெண்மையான நீற்றைப் பூசுபவனும், புலியின் தோலாகிய உடையை உடையவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன், 'இவன் நம்மையே அடைக்கலமாக அடைதலை யுடையவன்; நமக்கு அடியவன்' என்ற முறைமைகளை நினையாமலே, "உளோம் போகீர்" என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்!
904 |
செய்வினையொன் றறியாதேன் பொய்யடியேன் பிழைத்திடினும் பையரவா இங்கிருந்தா உய்யஅருள் செய்யவல்லான் |
7.089.3 |
படத்தையுடைய பாம்பை அணிந்தவனே, 'உனது திருவடியே புகல்' என்று கருதி, 'செய்யத்தக்க செயல் இது; தகாத செயல் இது' என்பதைச் சிறிதும் அறியாத பொய்யடியேனாகிய யான்,அறியாமையாற் பிழைசெய்தேனாயினும், பொறுத்தல் உனக்குக் கடமையன்றோ; அங்ஙனம் பொறுத்து எனக்கு அருள் பண்ணாமையின், நீ இங்கே இருக்கின்றாயோ' என்று யான் உரிமையோடு வினாவ, எப்பொழுதும் என்மேல் அருள்கூர்ந்து, என்னை உய்யுமாறு தன் திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான், இதுபோது, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்!
905 |
கம்பமருங் கரியுரியன் செம்பவளத் திருவுருவன் நம்பியிங்கே யிருந்தாயே உம்பர்தனித் துணையெனக்கு |
7.089.4 |
'நம்பியே, நீ, செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு உடனாயினவன் ஆதலின், இருவீரும் இங்கே இருக்கின்றீர்களோ' என்று நான் வினவ, அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும், கபாலத்தையும், செவ்விய பவளம்போலும் உருவத்தையும் உடையவனும், தேவர்களுக்கு ஒப்பற்ற துணைவனும் ஆகிய இறைவன், எனக்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
906 |
பொன்னிலங்கு நறுங்கொன்றை மின்னிலங்கு நுண்ணிடையாள் துன்னியிரு பால்அடியார் உன்னமதாய்க் கேட்டலுமே |
7.089.5 |
பொன்போல விளங்குகின்ற, நறுமணம் பொருந்திய கொன்றைமலர், சடையின்மேற் பொருந்துதலால், மேலும் பொலிவுற்று விளங்க, மின்னலினது தன்மை விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க, எருதை ஏறுபவனாகிய சிவபெருமானை, இருபாலும் அடியார்கள் நெருங்கி, வணங்கித் துதிக்க, யானும் உயர்ந்த முறைமையினாலே, 'கோயிலுளாயே' என்று கேட்க, அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
907 |
கண்ணுதலால் காமனையுங் தெண்ணிலவு செஞ்சடைமேல் கண்மணியை மறைப்பித்தாய் ஒண்ணுதலி பெருமான்றான் |
7.089.6 |
யாவரையும் வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய, கங்கை விளங்குகின்ற, தௌளிய நிலவை அணிந்த சடையின்மேல் தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை, அடியேன், 'என் கண்மணியை மறைப்பித்தவனே, இங்கு இருக்கின்றாயோ?' என்று வினவ, ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய உமையம்மைக்குத் தலைவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
908 |
பார்நிலவு மறையோரும் தார்நிலவு நறுங்கொன்றைச் கார்நிலவு மணிமிடற்றீர் ஊரரவம் அரைக்கசைத்தான் |
7.089.7 |
'மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே, தாங்குதற்கரிய நஞ்சுபொருந்திய, நீலமணிபோலும் கண்டத்தையுடையவரே, நீர், மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும், அடியவர்களும் பணிசெய்ய இங்கு இருக்கின்றீரோ? என்று யான் வினவ, ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன், 'உளோம்; போகீர்' என்றானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
909 |
வாரிடங்கொள் வனமுலையாள் பாரிடங்கள் பலசூழப் காரிடங்கொள் கண்டத்தன் யூரிடங்கொண் டிருந்தபிரான் |
7.089.8 |
கச்சினது இடம் முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு, பூதங்கள் பல சூழ, முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற, மேலான நிலையில் உள்ளவனும், கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட கண்டத்தை யுடையவனும், நான் விரும்பும் இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன், யான் வினவியதற்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
910 |
பொன்னவிலுங் கொன்றையினாய் சொன்னஎனைக் காணாமே என்னவல்ல பெருமானே ஒன்னலரைக் கண்டாற்போல் |
7.089.9 |
"பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே, நீ, கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ் இரு" என்று சொன்ன என்னை, அதன் பொருட்டுக் காணாமலே, சங்கிலியிடம் சென்று, 'சூளுறவு, மகிழ மரத்தின் கீழே ஆகுக' என்று சொல்ல வல்ல பெருமானே, நீ, இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ, எம்பெருமான், என்னை, பகைவரைக் கண்டாற்போல வெறுத்து, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
911 |
மான்றிகழுஞ் சங்கிலியைத் தோன்றஅருள் செய்தளித்தாய் ஈன்றவனே வெண்கோயில் ஊன்றுவதோர் கோலருளி |
7.089.10 |
'மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு ஈந்து, அதனால் உளவாகின்ற பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய்' என்று சொல்லுதற்கு, 'உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே, வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ' என்று யான் வினவ, எம் பெருமான், ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி, 'உளோம்; போகீர்' என்றா னன்றே! இத்துணையது தானோ அவது கண்ணோட்டம்!
912 |
ஏராரும் பொழில்நிலவு காராரும் மிடற்றானைக் சீராருந் திருவாரூர்ச் ஆரூரன் தமிழ்வல்லாக் |
7.089.11 |
புகழ் நிறைந்த திருவாரூரில் உள்ள சிவ பொருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன், அழகுநிறைந்த சோலைகள் விளங்குகின்ற திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட, கருமை நிறைநத கண்டத்தை யுடையவனை மிக விரும்பி, அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்மேல், வலிய வினைகள் வந்து சாராவாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.089.திருவெண்பாக்கம் , உளோம், கண்ணோட்டம், என்றானே, இதுவோ, அவனது, போகீர், யான், சொன்னானன்றே, உளோம்போகீர், பொருந்திய, விளங்குகின்ற, வினவ, இருக்கின்றாயோ, என்னை, இறைவன், எனக்கு, இங்கிருந்தா, பெருமானே, கொண்ட, பாம்பை, இடமாகக், இங்கு, யோஎன்ன, திருமுறை, ஆகிய, அணிந்த, உடையவனும், திருவெண்பாக்கம், எம்பெருமான், இன்னது, பதிகங்கள், உடைய, மலரை, திருச்சிற்றம்பலம், கண்மணியை, தேவாரப், கொன்றை, கருமை, மகிழ, மரத்தின், பயன்களெல்லாம், சூளுறவு, கண்டத்தை, தனக்கு, ஏழாம், பாராதே, நான், இதுபோது, நினையாமலே, போக&, வினாவ, அவன், ஆகுக, யுடையவனும், திருவடியே, அடியேன், கேட்டலுமே, செவ்விய, வல்ல, இங்கே, செயல், பிழை, மறைப்பித்தாய்