ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.087.திருப்பனையூர்
7.087.திருப்பனையூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
882 |
மாட மாளிகை கோபு ரததொடு பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த் தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின் |
7.087.1 |
உயர்ந்த மேல்மாடங்களும், சிறந்த மாளிகைகளும், கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற, ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற, நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, ஒருகாதிற் குழை தூங்க, மறறொரு காதினில் தோட்டினை இட்டு, அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையவர்.
883 |
நாறு செங்கழு நீர்ம லர் சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூ நினைப்பவர் தம்ம னத்த ராகிநின் |
7.087.2 |
மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும், நல்ல மல்லிகை மலரையும், சண்பக மலரையும், சேறு செய்யப்பட்ட கழனியாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி, தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும், நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
884 |
செங்கண் மேதிகள் சேடெ றிந்து பைங்காண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த் யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில் |
7.087.3 |
சிவந்த கண்களையுடைய எருமைகள், வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால், அங்குள்ள கயல்மீனின் கூட்டமும், பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, சந்திரனைச் சூடிய செல்வனார், தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின், அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.'
885 |
வாளை பாய மலங்கி ளங்கயல் பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த் டாடு வாரடித் தொண்டர் தங்களை |
7.087.4 |
வாளை மீன்கள் துள்ள, மலங்கும், இளமையான கயலும், வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும், பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந்துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும், தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
886 |
கொங்கை யார்பல ருங்கு டைந்ந் பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர் தாமுடையவர் மான்ம ழுவினொ |
7.087.5 |
மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால், குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர, அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும், திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும், அகங்கையில், 'மான், மழு, தீ' என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
887 |
காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர் பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர் மதக ரியுரி போர்த்து கந்தவர் |
7.087.6 |
பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய், பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும், பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையார்.
888 |
மரங்கள் மேல்மயி லால மண்டப திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த் துரங்கன் வாள்பிளந் தானுந் தூமலர்த் றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே. |
7.087.7 |
மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம், மாடம், மாளிகை, கோபுரம் இவைகளின்மேல், தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, குதிரை உருவங்கொண்டு வந்த, 'கேசி' என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும், தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று, மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
889 |
மண்ணி லாமுழ வம்ம திர்தர பண்ணி யாழ்முரலும் பழ னத்திரு ருப்பனையூர் வெண்ணி லாச்சடை மேவிய அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே. |
7.087.8 |
மாடம், மாளிகை, கோபுரம் இவைகளில், மண் பொருந்திய மத்தளம் அதிர, யாழ்கள் பண்களை இசைக்கின்ற, நல்ல வயல்கள் சூழந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட, விண்ணவரும்
890 |
குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக் பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர் தோளி ருபது தான்நெ ரிதர |
7.087.9 |
குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க, அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற, குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, இரக்கமில்லாதவராய், அரக்கனாகிய இராவணன், அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நொயும்படி, தமது காலால் நெருக்கியவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
891 |
வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர் பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர் வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன் |
7.087.10 |
வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய், பெரிய தவத்தவர்க்ள மிகுகின்ற, வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர், ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.087.திருப்பனையூர் , ழகியரே, எழுந்தருளியிருக்கின்ற, திருப்பனையூரில், அவரே, மிக்க, யாவரினும், அழகுடையர், ஆகிய, மாளிகை, நல்ல, னத்தி, ருப்பனையூர், நின்று, திருமுறை, வாளை, ருப்பனையூர்த், மலரையும், திருப்பனையூர், வளர்கின்ற, கோபு, யுடைய, மகளிர், பாகத்தையும், மங்கை, ஏழாம், மரங்கள், தோள்களும், மான், என்னும், மாடம், கோபுரம், கெண்டை, ரத்தின்மேல், பொருந்திய, விரும்பி, எங்கும், வஞ்சி, தோன்ற, ரும்வ, தம்மை, உடைய, மல்லிகை, ளர்பொழில், நாளும், மாறுவல்லா, மூழ்கி, திருச்சிற்றம்பலம், வயல்களையுடைய, மீன்கள், தேவாரப், கண்களையுடைய, பதிகங்கள், சூடிய, பக்கம்