ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.069.திருவடமுல்லைவாயில்
7.069.திருவடமுல்லைவாயில்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - கொடியிடைநாயகியம்மை.
698 |
திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் முருகமர் சோலை சூழ்திரு முல்லை பரவிடும் அடியேன் படுதுயர் களையாய |
7.069.1 |
தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, வீட்டின்பமும், அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும், இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாது, அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும், அவர்கள் என்னைப் பற்றவரின், பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கியருளாய்.
699 |
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக் ஆடிய அழகா அருமறைப் பொருளே தேடிய வானோர் சேர்திரு முல்லை பாடிய அடியேன் படுதுயர் களையாய் |
7.069.2 |
உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, 'இறைவனே, நீ எங்குள்ளாய்?' என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய்.
700 |
விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய் பண்பநின் அடியேன் படுதுயர் களையாய் |
7.069.3 |
விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே, சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக் திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.
701 |
பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய் |
7.069.4 |
பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில், புள்ளிகளையும், கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு, அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.
702 |
சந்தன வேருங் காரகிற் குறடுந் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் வந்திழி பாலி வடகரை முல்லை பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் |
7.069.5 |
சந்தன மரத்தின் வேரையும், கரிய அகிலினது கட்டையினையும், மென்மையான மயில் இறகினையும், யானையின் தந்தத்தையும், முத்துக் குவியல்களையும், பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும், பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, மாசில்லாத மணி போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.
703 |
மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய |
7.069.6 |
மாற்றாது வழங்கும் வள்ளலே, வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே, திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, யான் பொய்யையே பேசி, குற்றங்களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின், யான் பெற்ற பேறு, மற்று யார் பெற வல்லார்! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன்; அது, தவறுடைத்தே. ஆயினும், அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின், அடியேன் வேறொரு துணை இல்லேன்; ஆதலின், அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய்.
704 |
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் பணியது செய்வேன் படுதுயர் களையாய் |
7.069.7 |
அழகு பொருந்திய சிவந்த வாயினையும், வெள்ளிய பற்களையும், கரிய நீண்ட கூந்தலையும், சிறந்த மயில் போலும் சாயலையும், அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும், அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.
705 |
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் |
7.069.8 |
யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திருவெண்ணெய்நல்லூரில் வந்து, நாய்போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட சம்புவே, வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற, பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட, பசிய பொன்போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.
706 |
மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் கட்டுவான் வந்த காலனை மாளக சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் பட்டனே அடியேன் படுதுயர் களையாய |
7.069.9 |
தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல், அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை, அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே, செல்வத்தையுடைய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே, சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.
707 |
சொல்லரும் புகழான் தொண்டை மான் களிற்றைச் டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் |
7.069.10 |
சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய, 'தொண்டைமான்' என்னும் அரசன், எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை, படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து, பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெள்ளை விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.
708 |
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும் நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி |
7.069.11 |
நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி, அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய, அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும், மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள், நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.069.திருவடமுல்லைவாயில் , அடியேன், தாபரஞ், சுடரே, பாசுப, உயிர்களைக், உள்ளவனே, படுதுயர், காப்பவனே, திருமுல்லை, மேலான, ஒளியாய், திருமுல்லைவாயிலில், யான், நீக்கியருளாய், துன்பத்தை, படுகின்ற, எழுந்தருளியிருப்பவனே, களையாய், வாயிலாய், உனது, முல்லை, வந்து, பொருந்திய, செல்வனே, அழகிய, உடைய, எழுந்தருளியிருக்கின்ற, கரிய, இறைவனே, திருமுறை, அரிய, அன்று, பாடிய, சூழ்திரு, திருவடமுல்லைவாயில், எனக்கு, களையாய, சோலை, வாயிலில், சூழ்ந்த, தருகின்ற, வல்லார், செய்தேன், வள்ளலே, பெற்ற, பதிகங்கள், தாமரை, அந்த, சந்தன, பவளக், என்னை, மயில், தேவாரப், அவன், அவனது, ஏழாம், மலர்மேல், வந்த, கண்ட, மூப்பும், பகலும், சம்புவே, இன்றி, வாயிற், நலங்களையும், தேன், விருப்பால், கண்டு, திரிவேன், வெருவிட, திருப்புகழ், தேடிய, சோலைகள், கூடிய, உமையவள், பொருளே, கொண்ட, வணங்கித், விருப்பத்தோடு, திருச்சிற்றம்பலம், தமிழால், அருள்செய்யாய், திருப்புகழை, தலைவனே, துதிக்கின்ற, செய்தும், யானையை, செல்வமும், நல்ல