ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.045.திருஆமாத்தூர்
7.045.திருஆமாத்தூர்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர்.
தேவியார் - அழகியநாயகியம்மை.
456 |
காண்டனன் காண்டனன் காரிகை ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் பூண்டனன் பூண்டனன் பொய்யன்று மீண்டனன் மீண்டனன் வேதவித் |
7.045.1 |
அடியேன், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை, உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்; அவனுக்கு அடிமை பூண்டேன்; அடிமையைப் பலகாலும் செய்தேன்; இவை பொய்யல்ல; இன்னும் சொல்லுவேன்; கேண்மின்; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன்.
457 |
பாடுவன் பாடுவன் பார்ப்பதி தேடுவன் தேடுவன் திண்ணனப் ஆடுவன் ஆடுவன் ஆமாத் கூடுவன் கூடுவன் குற்றம |
7.045.2 |
யான், இவ்வுலகிற்குத் தலைவனாகிய, திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, அவனது திருவடியைக் கருதிப் பாடுவேன்; உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன்; தேடிக்கண்டு, என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன்; கூடிய களிப்பினால் ஆடுவேன்.
458 |
காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி |
7.045.3 |
திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன், அன்று காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன்; அன்று, கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை அழித்தவன்; எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன்; எம்பெருமாட்டியை ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன்.
459 |
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் |
7.045.4 |
யான், என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளியுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன்; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன்; இனி, வெளியே, திருவொற்றியூரிற் புகுந்து, 'சங்கிலி' என்பாளது மெல்லிய தோளையும், பெரிய தனங்களையும் பொருந்தினேன்; இவ்விருவாற்றானும், இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன்; இது, திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனது திருவருள்.
460 |
வென்றவன் வென்றவன் வேள்வியில் சென்றவன் சென்றவன் சில்பலிக் நின்றவன் நின்றவன் நீதி அன்றவன் அன்றவன் செய்யருள் |
7.045.5 |
திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன்; சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற் சென்றவன்; நீதியிற் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன்; தன்னை அடைந்தார்க்கு அருள்செய்தல், அடைந்த அன்றேயாகின்றவன்.
461 |
காண்டவன் காண்டவன் காண்டற் நீண்டவன் நீண்டவன் நாரணன் ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் பூண்டவன் பூண்டவன் மார்பிற் |
7.045.6 |
திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், தன் அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன்; திருமாலும் பிரமனும் தேட, அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன்; ஆமாத்தூரையும் ஆண்டவன்; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன்; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன்.
462 |
எண்ணவன் எண்ணவன் ஏழுல கண்ணவன் கண்ணவன் காண்டும்என் பெண்ணவன் பெண்ணவன் மேனியொர் அண்ணவன் அண்ணவன் ஆமாத் |
7.045.7 |
திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் ஏழுலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன்; தன்னை, 'காண்போம்' என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன்; திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன்; பொருந்திய தலைக்கோலத்தை உடையவன்; அடையத் தக்கவன்.
463 |
பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் மின்னவன் மின்னவன் வேதத்தி அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் என்னவன் என்னவன் என்மனத் |
7.045.8 |
திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், அடியார்களுக்குப் பொன்போல்பவனாய் உள்ளவன்; பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன்; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை உடையவன்; எனக்கு உரிமையுடையவன்; அவனை, யான் என்மனத்தில் அன்பால் நினைந்து இன்பமுற்றிருப்பேன்;
464 |
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் நாடுவன் நாடுவன் நாபிக்கு மாடுவன் மாடுவன் வன்கை ஆடுவன் ஆடுவன் ஆமாத் |
7.045.9 |
யான், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன்; அவனை, உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன்; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன்; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன்.
465 |
உற்றனன் உற்றவர் தம்மை பற்றினன் பற்றினன் பங்கயச் அற்றனன் அற்றனன் ஆமாத்தூர்மேயான் பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் |
7.045.10 |
யான், மீட்டும் மீட்டும் பிறவாமைப் பொருட்டு, உற்றாரை நீங்கி, உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன்; திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனது, தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே செல்ல அவற்றைத் துணையாகப் பற்றினேன்; அதனால் துன்பங்கள் நீங்கப்பெற்றேன்; அதன்பின். அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும் பெற்றேன்.
466 |
ஐயனை அத்தனை ஆளுடை மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு மையனை மையணி கண்டனை பொய்யொன்று மின்றிப் புலம்புவார் |
7.045.11 |
யாவர்க்கும் தலைவனும், தந்தையும், என்றும் உள்ளவனும், மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அநுபவப் பொருளாய் விளங்குகின்ற தூயவனும், திருவருள் மேகமானவனும், மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாமாத்தூரை ஆளுதலுடைய இறைவனை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய பாடல்களை, வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடுகின்றவர், அப்பெருமானது பொன்போலும் திருவடிகளை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.045.திருஆமாத்தூர் , திருவாமாத்தூரில், ஆமாத், எழுந்தருளியுள்ள, யான், உள்ள, எழுந்தருளியிருக்கின்ற, தலைவன், தேடுவன், ஆடுவன், தூர்எம், ஆண்டவன், அவனை, ஆமாத்தூர், பூண்டவன், உள்ளவன், திருமுறை, சென்றவன், நின்றவன், திருஆமாத்தூர், வென்றவன், நீண்டவன், கடவுளாய், சிறிதும், காண்டவன், தன்னை, கண்ணவன், அண்ணவன், பெண்ணவன், எண்ணவன், பொன்னவன், திருவடிகளை, பிடித்து, மாடுவன், பற்றினன், அற்றனன், மீட்டும், பெற்றனன், நால்விரல், நாடுவன், உடையவன், அன்பால், மின்னவன், அன்னவன், என்னவன், ஐயனை, மடிகளே, ஆர்ந்தனன், அவனுக்கு, மீண்டனன், பாடுவன், கூடுவன், தேடுவேன், இறைவனை, பூண்டனன், ஆண்டனன், தேவாரப், ஏழாம், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், காண்டனன், ஆடுவேன், காய்ந்தவன், சங்கிலி, சார்ந்தனன், பொருளை, தலைவனது, வேள்வியில், திருவருள், சென்று, சேர்ந்தனன், ஆய்ந்தவன், பாய்ந்தவன், ஏய்ந்தவன், அன்று, ஓர்ந்தனன், அன்றவன்