ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.039.திருத்தொண்டத்தொகை
7.039.திருத்தொண்டத்தொகை
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார் திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத் தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை உள்ளத்தால் வணங்கி "இவர்களுக்குநானடியே"னாகும்படி பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் "தில்லைவாழ் பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று முதலடி எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம்.
393 |
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் |
7.039.1 |
இல்லை
394 |
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன் |
7.039.2 |
இல்லை
395 |
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன் செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் |
7.039.3 |
இல்லை
396 |
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன் |
7.039.4 |
இல்லை
397 |
வம்பறா வரிவண்டு மணநாற மலரும் எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் |
7.039.5 |
இல்லை
398 |
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே சீரகொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் |
7.039.6 |
இல்லை
399 |
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் |
7.039.7 |
இல்லை
400 |
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன் |
7.039.8 |
இல்லை
401 |
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் |
7.039.9 |
இல்லை
402 |
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் |
7.039.10 |
இல்லை
403 |
மன்னியசீர் மறைநாவன் நீன்றவூர்ப் பூசல் தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் |
7.039.11 |
இல்லை
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.039.திருத்தொண்டத்தொகை , அடியேன், அடியார்க்கும், கடியேன், அம்மானுக், இல்லை, ஆரூரில், ஆரூரன், காளே, திருமுறை, வேல்நம்பி, மடியேன், திருத்தொண்டத்தொகை, எல்லார்க்கும், காடவர்கோன், திருமேனி, உலகாண்ட, செம்மையே, திருநீல, பதிகங்கள், தேவாரப், ஏழாம், திருச்சிற்றம்பலம், திருவாரூர்ப், தில்லைவாழ், பரமசிவம், அந்தணர்தம்