ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.035.திருப்புறம்பயம்
7.035.திருப்புறம்பயம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதேசுவரர்.
தேவியார் - கரும்படுசொல்லம்மை.
351 |
அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி தங்கி னோமையும் இன்ன தென்றிலர் கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் பொங்கு மால்விடை ஏறி செல்வப் |
7.035.1 |
மனமே, ஆறங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது திருவாறைமேற்றளியினின்றும் புறப்பட்டு வந்து திருவின்னம்பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம்செய்யத்தக்கது இன்னது என்று தௌவித்தாரில்லை; ஆதலின், வானவர்கள் தம் நிலையினும் மேன்மேல் உயர்தற் பொருட்டு இரவெல்லாங் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற, அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது, செல்வம் நிறைந்த திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; புறப்படு.
352 |
பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும் நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும் மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம் புதிய பூமலர்ந் தெல்லி நாறும் |
7.035.2 |
அறியாமையுடைய மனமே, நாம் வாழ்கின்ற ஊரும், மணந்த மனைவியரும், பெற்ற மக்களும், பிற சுற்றத்தாரும், தேடிய பொருளும், அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர்; அதனால், என்றும் உடன் தொடர்ந்தும் வாரார். ஆதலின், அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி; இனி நாம், சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும், மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; புறப்படு.
353 |
புறந்தி ரைந்து நரம்பெழுந்து தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு புறம்ப யத்துறை பூத நாதன் |
7.035.3 |
மனமே, தோல் திரைந்து, நரம்புகள் வெளித் தோன்றி, வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய நினைப்பது பயனில்லாததாம்; இதனை நீ அறிவையாயின், நாம் இளமையிலே செய்து ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக, புறத்திலே அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; என்னைப் பிறழ்வியாது, விரையப் புறப்படு.
354 |
குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள் மற்றொரு ருவ்வரைப் பற்றி லேன்மற புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி |
7.035.4 |
அறியாமையுடைய மனமே, பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியாற் குற்றி, அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும், முறையில் நிற்கும் ஒருவரை முறையின்றிப் பகைத்து, அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து வருத்தும்; இது திண்ணம்; ஆதலின், அவைபோல்வன நிகழாதிருத்தற்கு உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன்; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய, இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; அவனை நினைந்து புறப்படு.
355 |
கள்ளி நீசெய்த தீமை யுள்ளன தௌளி தாஎழு நெஞ்ச மேசெங்கண் துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல் புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் |
7.035.5 |
மனமே, நீ வஞ்சித்துச் செய்த தீமையால் உளவாகிய பாவமும் நீங்கும்படி, இடபத்தையுடைய சிவலோகனது ஊராகிய, வெள்ளிய இளமையான வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரைப் பூக்களின் மேல், புள்ளிகளையுடைய நண்டுகள் பள்ளி கொள்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கத் தௌவுடையையாய்ப் புறப்படு. விகுதியாதல் பிற்கால முறைமை. அப்பண்புப் பெயர் பண்பியின் மேல் நின்றது. ஈண்டுக் குறித்த பாவம் தமக்கு உளதாகத் துணிந்திலராயினும், 'உளதாயிருப்பின், அவையும் நீங்குமாறு வணங்குவோம்' என்று அருளினார், அஃது ஒன்றே அதற்குப் பயனாகாமையின்.
356 |
படையெ லாம்பக டாரஆளிலும் கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து புடையெ லாமணம் நாறு சோலைப் |
7.035.6 |
அறியாமை பொருந்திய மனமே, யானைகள் நிரம்பியிருக்க, பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும். அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும், முடிவில் எல்லாம், தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும்; ஆதலால், நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர்தலாலும், பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும், எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலைகளையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; அவைகளைப் பற்றிக் கவலைகொள்ளாது புறப்படு.
357 |
முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து என்னை நீதியக் காதெ ழும்மட அன்னச் சேவலோ டூடிப் பேடைகள் புன்னைக் கன்னி களக்கரும்பு |
7.035.7 |
அறியாமையையுடைய மனமே, ஒருவர் முற்பிறப்பிற் செய்த வினை, இப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின், அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பே, எமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய அன்னப் பேடைகள், அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டு, பின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம்; என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு.
358 |
மலமெ லாமறும் இம்மை யேமறு சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள் கலமெ லாங்கடல் மண்டு காவிரி புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும் |
7.035.8 |
மனமே, இப்பிறப்பிற்றானே மலங்கள் யாவும் நீங்கும்; மறு பிறப்பிற்கு வாயிலாக வலிய வினைகள் வந்து அடைய மாட்டா; ஆதலின், நீ துன்பத்தை விட்டொழி; எங்கள் சங்கரன் வந்து தங்கியிருக்கும் ஊராகிய, காவிரிநதி என்கின்ற நங்கை முழுக ஓடுகின்ற, கடலிற் காணப்படுவது போல நாவாய்கள் மிகுந்து காணப்படுகின்ற கங்கைநதியின் நீர் போலும் நீர், வயல்களிலெல்லாம் மிகப்பாய்ந்து பொன் போலும் செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம்.
359 |
பண்ட ரீயன செய்த தீமையும் கண்ட ரீயன கேட்டி யேற்கவ தொண்ட ரீயன பாடித் துள்ளிநின் புண்ட ரீகம லரும் பொய்கைப் |
7.035.9 |
அறியாமையையுடைய மனமே, முற்பிறப்பில் நீக்குதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும், அச்செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின், தேவர்கள் அரிய பல தொண்டுகளைச் செய்து பாடியும், குதித்து நின்று ஆடியும் தொழுகின்ற, தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகளை யுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; கவலையுறாமல் புறப்படு.
360 |
துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந் அஞ்சி யூரன் திருப்பு றம்பயத் நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு வஞ்சி யாதுரை செய்ய வல்லவர் |
7.035.10 |
இறந்தும், பின்பு பிறந்தும், அதன் பின் வளர்ந்தும் சுழலுதல் நீங்காத மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு அஞ்சி, நம்பியாரூரன், 'திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம்' என்று நெஞ்சினாலே நினைத்து, ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள், அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.035.திருப்புறம்பயம் , புறம்ப, மனமே, போதுமே, யந்தொழப், திருப்புறம்பயத்தை, வணங்கச், புறப்படு, செல்வோம், வந்து, நெஞ்சமே, செய்த, நெஞ்ச, ஆதலின், நாம், செய்து, வாழும், பின்பு, எல்லாம், மணம், திருமுறை, பெற்ற, இம்மை, கொண்டு, ழுமட, ரீயன, ஊராகிய, நின்று, திருப்புறம்பயம், பள்ளி, மேல், மலர்கின்ற, கொள்ளும், நீங்கும்படி, பாவமும், பயத்தை, கண்ட, போலும், அரிய, துஞ்சி, அஞ்சி, நீர், நங்கை, பேடைகள், வீசுகின்ற, அறியாமையையுடைய, திருப்புறம், தாமரைப், லாதெ, வந்த, தாந்தொழும், தொழுகின்ற, மக்களும், வாழ்க்கையும், வானவர், தேவர்கள், ஏழாம், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், மகிழும், அறியாமையுடைய, பாவங்களும், நான், மும்பறை, யும்படி, உடைய, அஃது, வாழ்கின்ற, பற்றிக், செய்ய, வாளை