ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.029.திருக்குருகாவூர்
7.029.திருக்குருகாவூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெள்ளிடையப்பர்.
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
289 |
இத்தனை யாமாற்றை பித்தனே யென்றுன்னைப் முத்தினை மணிதன்னை வித்தனே குருகாவூர் |
7.029.1 |
எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன்; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை, 'பித்தன்' என்று இகழ்ந்து பேசுவர்; அஃது அவ்வாறாக, நீ, முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ!
290 |
ஆவியைப் போகாமே வாவியிற் கயல்பாயக் காவியுங் குவளையுங் மேவிய குருகாவூர் |
7.029.2 |
வாவிகளில் கயல்மீன்கள் துள்ள, குளத்திலும், நீர்மடைகளிலும், கருங்குவளையும், செங்குவளையும், தாமரையும், செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய்!
291 |
பாடுவார் பசிதீர்ப்பாய் ஒடுநன் கலனாக காடுநல் லிடமாகக் வேடனே குருகாவூர் |
7.029.3 |
தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க, உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே, காடே சிறந்த அரங்காய் இருக்க, செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும், பிறவாற்றால் துதிக்கின்றவரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து, நோயைப் பற்றறுப் பாயன்றோ!
292 |
வெப்பொடு பிணியெல்லாந் ஒப்புடை யொளிநீலம் அப்படி யழகாய மெய்ப்படு குருகாவூர் |
7.029.4 |
ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற, மலர்களையுடைய பொய்கைகளில், மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற, அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ, என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய்!
293 |
வரும்பழி வாராமே சுரும்புடை மர்க்கொன்றைச் அரும்புடை மலர்ப்பொய்கை விரும்பிய குருகாவூர் |
7.029.5 |
வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும், பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே, அரும்புகளையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும், பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீயன்றோ, எனக்கு வருதற்பாலதாய பழிவாராமல் தடுத்து, என்னை ஆட்கொண்டாய்!
294 |
பண்ணிடைத் தமிழொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் மண்ணிடை யடியார்கள் விண்ணிடைக் குருகாவூர் |
7.029.6 |
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, பரவெளியின்கண் உள்ள நீ, இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண்யாதொரு துன்பமும் தோன்றாதவாறு, பண்ணின்கண் இனிமையைப் போன்றும், பழத்தின்கண் சுவையைப் போன்றும், கண்ணின்கண் மணியைப் போன்றும், மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ!
295 |
போந்தனை தரியாமே நோந்தன செய்தாலும் சாந்தனை வருமேலுந் வேந்தனே குருகாவூர் |
7.029.7 |
இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயர்ய்ப் போந்தவன் நீயேயன்றோ! ஆதலின், இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.
296 |
மலக்கில்நின் னடியார்கள் சலச்சல மிடுக்குடைய கலக்குவான் வந்தாலுங் விலக்குவாய் குருகாவூர் |
7.029.8 |
அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக்களைபவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும், மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும், அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ!
297 |
படுவிப்பாய் உனக்கேயாட் தொடுவிப்பாய் துகிலொடுபொன் கெடுவிப்பாய் அல்லாதார்க் விடுவிப்பாய் குருகாவூர் |
7.029.9 |
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும், நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பத்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும், முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும், நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ!
298 |
வளங்கனி பொழின்மல்கு விளங்கொளி குருகாவூர் இளங்கிளை யாரூரன் உளங்குளிர் தமிழ்மாலை |
7.029.10 |
வளப்பம் மிகுந்த சோலைகளையும், நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற, வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, சிங்கடிக்குத் தங்கையாகிய, 'வனப்பகை' என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன், மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை, அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.029.திருக்குருகாவூர் , திருக்குருகாவூர், குருகாவூர், கோயிலில், வெள்ளடைக், வெள்ளடை, நீயன்றே, எழுந்தருளியிருப்பவனே, என்னை, போன்றும், உள்ள, தவிர்த்தென்னை, திருமுறை, நீயேயன்றோ, வாராமே, உடைய, நீயன்றோ, யான், எனக்கு, மலர்களையும், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், தேவாரப், வரும், தமிழ்மாலை, வனப்பகை, ஏழாம், உனது, மிக்க, நீக்கி, சிறந்த, உன்னை, நிற்கும், பூக்கள், உடையவனே, அடியார்களது, பொய்கைகளில், மலர்ப்பொய்கை, யாட்கொண்டாய், ஆகிய