ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.025.திருமுதுகுன்றம்
7.025.திருமுதுகுன்றம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
249 |
பொன்செய்த மேனியினீர் புலித்
முன்செய்த மூவெயிலும் மெரித் மின்செய்த நுண்ணிடையாள் பர என்செய்த வாறடிகேள் அடி |
7.025.1 |
பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை அரையில் உடுத்தவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு!
250 |
உம்பரும் வானவரும் முட செம்பொனைத் தந்தருளித் திக வம்பம ருங்குழலாள் பர எம்பெரு மான்அருளீர் அடி |
7.025.2 |
எம் பெருமானிரே, நீர், முன்பு, வானத்தில் உள்ள தேவர்களும், அவர்கட்குமேல் உள்ள 'அயன், மால்' என்பவர்களும் கண்டுநிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர்; இப்பொழுது, மணம் பொருந்திய கூந்தலையுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலி கின்றாள்; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும்.
251 |
பத்தா பத்தர்களுக் கருள் முத்தா முக்கணனே முது மைத்தா ருந்தடங்கண் பர அத்தா தந்தருளாய் அடி |
7.025.3 |
எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே, அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே, இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே, மூன்று கண்களையுடையவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, என் அப்பனே, மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய. 'பரவை' என்னும் பெயரினளாகிய இவள், பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
252 |
மங்கையொர் கூறமர்ந்தீர் மறை திங்கள் சடைக்கணிந்தீர் திக கொங்கைநல் லாள்பரவை குணங் அங்கண னேயருளாய் அடி |
7.025.4 |
உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே, சடையின்கண் சந்திரனை அணிந்தவரே, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, கண்ணோட்டம் உடையவரே, தனங்கள் அழகியாளும், யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும், 'பரவை' என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும்.
253 |
மையா ரும்மிடற்றாய் மரு செய்யார் மேனியனே திக பையா ரும்மரவே ரல்கு ஐயா தந்தருளாய் அடி |
7.025.5 |
மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே, பகைவரது மூன்று ஊர்களை எரித்த, செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, தலைவனே, பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினையுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள்; ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு, செம்பொன்னைத் தந்தருள்.
254 |
நெடியான் நான்முகனும் மிர முடியால் வந்திறைஞ்ச முது படியா ரும்மியலாள் பர யடிகேள் தந்தருளீர் அடி |
7.025.6 |
திருமாலும், பிரமனும், சூரியனும், இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, தலைவனே, பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும், "பரவை" என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
255 |
கொந்தண வும்பொழில்சூழ் குளிர் வந்தண வும்மதிசேர் சடை பந்தண வும்விரலாள் பர அந்தண னேயருளாய் அடி |
7.025.7 |
கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும், மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுது குன்றத்தையுடையவனே, அந்தணனே, பந்து பொருந்திய விரலை உடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய்.
256 |
முரசார் வந்ததிர முது விரைசே ருங்குழலாள் பர அரசே தந்தருளாய் அடி |
7.025.8 |
மழுப் பொருந்திய கையை யுடையவனே, பதினெண் கணங்களும் புடை சூழவும், முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, எல்லா உலகிற்கும் அரசனே, நறுமணம் பொருந்திய கூந்தலையுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
257 |
ஏத்தா திருந்தறியேன் இமை மூத்தாய் உலகுக்கெல்லா முது பூத்தா ருங்குழலாள் பர கூத்தா தந்தருளாய் கொடி |
7.025.9 |
தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே, எல்லா உயிர்கட்கும் மூத்தவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, கூத்துடையானே, உன்னை யான் பாடாமல் இருந்தறியேன்; ஆதலின், மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள்முன்னே, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
258 |
பிறையா ருஞ்சடையெம் பெரு முறையால் வந்தமரர் வணங் மறையார் தங்குரிசில் வயல் இறையார் பாடல்வல்லார்க் கௌ |
7.025.10 |
தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை, அந்தணர் தலைவனும், வயல்களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன், 'பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய்' என்று வேண்டிப்பாடிய, இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.025.திருமுதுகுன்றம் , யேன்இட், அடியேனது, டளங்கெடவே, திருமுதுகுன்றத்தில், விரும்பி, என்னும், பொருந்திய, பரவை, இவள், வையிவள், முன்னே, தந்தருள், செம்பொன்னைத், ஆகிய, துன்பங், இருப்பவனே, தன்முகப்பே, பெயரினளும், நிறைந்த, வந்து, கெடுமாறு, தந்தருளாய், முது, துன்பங்கெடுமாறு, பெரிய, கூந்தலையுடையவளும், குன்ற, விளங்குகின்ற, மமர்ந்தவனே, ழும்முது, பெயரினளுமாகிய, திருமுதுகுன்றம், திருமுறை, உடையவளும், ருங்குழலாள், குன்றமர்ந்தீர், தலைவனே, மூன்று, யுடையவனே, யான், எல்லா, னேயருளாய், மேலும், இந்திரனும், ஆதலின், உள்ள, தோலை, உடையவரே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஏழாம், தேவாரப், நன்கு, முன்பு, முட்டுப்பாட்டினால், வேண்டும், பொருள், வாடுகின்றாள், இருப்பவரே, அழகு