ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.091.திருவெறும்பியூர்
6.091.திருவெறும்பியூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
2983 | பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன் தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத் அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.1 |
தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய செவ்விதாகிய தமிழினது இலக்கணத்தை அறியேனும், கவிபுனைய மாட்டேனும், எண்ணாயும் திருத்தம்பெற்ற கலைகளாயும் நிற்கும் தன்னையும் தன் கூறுபாடுகளையும் அறிதற்குரிய விதியிலேனுமாகிய எனக்கு அவற்றைக் காட்டினவனும், அடைந்தேனைத் தாய் தந்தையரைப் போல அன்பாய்த் தொடர்ந்து ஆளாகக் கொண்டவனும், அழகிய எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன்.
2984 | பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப் விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் தௌந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.2 |
படிகமணியின் ஒளியுள்பதித்து விளங்கிய மாணிக்க ஒளியினனும், பசுபதியும், பாசுபத வேடத்தவனும், அறை கூவிப் போருக்கு எழுந்த சலந்தரனை அழித்தவனும், வேதியனும், விண்ணவனும், பொருந்தி வையத்தை அளந்த திருமாலும், நான்முகனும் ஆனவனும், துன்பந்துடைக்கும் ஆரமுது ஆனவனும் அவனே ஆமாறு அறிந்தமையால் என் உள்ளம் தௌந்து எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகும் சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன்.
2985 | கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக் உருவையண்டத் தொருமுதலை யோத வேலி மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.3 |
கருத்திற்குக் கருவானவனும், மனத்தில் நிலைத்த கருத்தானவனும் ஞானப்பெருஞ்சுடர் ஆனவனும், அமரர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்து தோத்திரிக்கும் அழகிய வடிவினனும், உலகத்திற்கு ஒப்பற்ற வித்தானவனும், அலையையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகில் நிறைந்தவனும், முதல், இடை, இறுதியாகிய தொழில்களை இயற்றுபவனும், மலரின் மணத்தை வென்ற குழலினை உடைய உமையம்மையை உடம்பில் பாகமாக வைத்தவனும், மயானத்து ஆடும் மாசிலாமணியும் திரு எறும்பியூர் மலைமேல் வாசம் செய்யும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.
2986 | பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும் புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப் உமிழும்அம் பொற்குன்றத்தை முத்தின் தூணை திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.4 |
அம்புகளைத் தூவி ஆற்றல் மிக்க அரக்கர் களுடைய மூன்று புரங்களையும் பாழ்படுத்த பரஞ்சுடரும், தன்னை விரும்பிப் புகழும் அன்பர்க்கு இன்பத்தை மகிழ்ந்தளிக்கும் அமுதமும், தேனும், புண்ணியனும், புவனிமுழுதும் வெளிப்பட ஒளி உமிழும் அழகிய பொற் குன்றமும், முத்தின் தூணும் உமையவளின் தலைவ னும், எறும்பியூர் மலைமேல் திகழ்வதும் இமையோர்கள் ஏத்துவதும் ஆகிய மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.
2987 | பாடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம் நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம் சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.5 |
பூதங்கள் பலவும் சேர்ந்து பலமுறையும் பாடுதற்கு இயையக் கூத்தாடுபவனும், கூரிய வாயினை உடைய சூலத்தைக் கையிற் கொண்டு எதிர்ப்படும் போரை வெல்லுதல் மிக வல்ல நிமலனும், நின்மலனும், அயன் அன்னமாய் மேலே உயர்ந்து சென்றும் மால் பூமியை அகழ்ந்து சென்றும் காணமுடியாதபடி ஒளியாக நீண்டு எங்கும் பரவினவனும், அழகிய மலர்களைக் கொண்டு முனிகணங் களால் ஏத்தப்பட்டுப் புகழ்மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செஞ்சுடருமாகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.
2988 | கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர் ஊர்பலவுந் திரிவானை ஊர தாக பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.6 |
கரிய மேகமாய் நீரைப் பொழிபவனும், முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுபவனும், விரைந்த நடையுடைய விடை ஒன்றை ஊர்ந்து ஊர்பலவும் திரிபவனும், தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஆள்பவனும், ஓங்காரமாகிய ஒரெழுத்தையே பெயராக உடையவனும், நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோரால் மந்திரம் கூறித் துதிக்கப்பட்டுப் புகழ் மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செழுஞ்சுசுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன்.
2989 | 2764.மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப் ஆண்டானை அறிவரிய சிந்தை யானை கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.091.9 |
இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய், கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய், ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய், சுடுகாட்டில் ஆடுபவனாய், என் உள்ளத்தில் இடம் பெற்று, அதனை விடுத்துநீங்காது, என்னை அடிமை கொண்டானாய், தன் உள்ளத் திருப்பதனைப் பிறர்அறிய இயலாதவனாய், அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.
2990 | அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன் செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.8 |
அறத்தைத் தெரியாதவரும், ஊத்தை வாயினரும், அறிவில்லாத சிந்தையினரும் ஆரம்பவாதத்தை உடையவரும் ஆகிய சமணக் குண்டரோடும் கூடி, அரன் திருவடிகளை மறந்து, பழக்கத்தால் என்னை அறியாது அவற்றை நினைத்தலையும் ஒருநாளும் செய்யாது அறிவற்றேன். வாழ்வெல்லாம் பயனில்லாத வாழ்வாய் ஒழியவும், மண்மேற்பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழியவும் இறுதியிற் சிலகாலம் ஈசன் பேர் பிதற்றிச் சிறப்புமிக்க அடிமைக் கூற்றில் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும், செழுஞ் சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப் பெற்றேன்.
2991 | அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச் செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.9 |
அறிவால் விளங்குகின்ற மனத்தானும், அறி வார்க்கு அல்லாமல் அறிவில்லாதாரது ஆற்றலால் சிறிதும் அறியப் படாதவனும், புள்ளிகள் விளங்கும் கொடிய பாம்பினைக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும் புண்ணியனும், அலைகள் மோதும் கடலில் தோன்றிய நஞ்சுண்ட அடையாளம் திகழும் மிடற்றவனும், இதழ்களும் தேனும் உடைய கொன்றைப் பூக்களைக் கொண்டு திகழும் சடையானும், மடைகள் தோறும் மென்மையுடைக் கமலப் பூக்கள் செறிந்து விளங்கும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.
2992 | அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று இருந்தவனை யேழுலகு மாக்கி னானை திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் |
6.091.10 |
ஆற்றல் மிக்க அரக்கன் அரியதவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து பெரிய கயிலை மலையை எடுக்க அவன் திண்ணிய தோள்கள் ஒடிந்து நசுங்கி ஆற்றல் அழிந்து பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்தானாகப்பின் முன்கை நரம்பினை எடுத்து வீணை நரம்பாகக் கொண்டு இசைத்துக் கீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்திருந்தவனும், ஏழுலகங்களையும் படைத்தவனும், எம் தலைவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், அழகிய எறும்பியூர் மலை மேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.091.திருவெறும்பியூர் , பெற்றேன், சென்றடையப், கத்தைச்செழுஞ்சுடரைச், மாணிக்கமும், நான், ஆகிய, மாணிக், நானே, யூர்மலைமேல், சிவபெருமானை, மலைமேல், எறும்பியூர், சென்று, செழுஞ்சுடரும், கொண்டு, அழகிய, திகழும், அடையப், மிக்க, ஆனவனும், திருமுறை, உடைய, பெருமானை, ஆற்றல், வாளா, திருவெறும்பியூர், நிற்கும், சென்றும், விளங்கும், கீதம், பொழிந்த, நீரைப், ஒழியவும், யானை, செறிந்து, என்னை, பாசுபத, திருச்சிற்றம்பலம், கொண்டவனும், பதிகங்கள், தேவாரப், ஆறாம், மன்னும், சலந்தரனை, தேனும், முத்தின், முழுதும், மேல், புண்ணியனும்