ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.023.திருமறைக்காடு
6.023.திருமறைக்காடு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
2317 | தூண்டு சுடரனைய சோதி கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் |
6.023.1 |
மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியின னாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய் (வழியாய்) விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான்.
2318 | கைகிளரும் வீணை வலவன் கண்டாய் மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய் பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய் வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய் |
6.023.2 |
கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான்.
2319 | சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய் நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய் சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய் |
6.023.3 |
மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய், திரிபுரங்களைத் தீ மடுத்தவனாய், நிலம் அதனைச் சூழ்ந்தநீர், தீ, காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய், உருவமும் உருவம் அற்ற நிலையும் உடைய வனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான்.
2320 | கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய் புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய் வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய் வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் |
6.023.4 |
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய், வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய், வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான்.
2321 | மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய் |
6.023.5 |
மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.
2322 | ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய் கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய் வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய் |
6.023.6 |
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான்பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்.
2323 | வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய் பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய் மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் |
6.023.7 |
மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன்.சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத்தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன்.
2324 | அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய் மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் |
6.023.8 |
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன்பயக்கும் தௌந்த தேனாய், நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய், உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய், திருவெண்காட்டில் உறைபவனாய், நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான்.
2325 | மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் பால விருத்தனு மானான் கண்டாய் மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் |
6.023.9 |
எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய், முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய், கல்லால மரநிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய், ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரியபவள மலைபோன்ற உருவினனாய், கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய், மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான்.
2326 | அயனவனும் மாலவனும் அறியா வண்ணம் துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று பெயரவர்க்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய் மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய் |
6.023.10 |
மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன். இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளிவீசும் விரலால் அழுத்தியவன். தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன். அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன். அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.023.திருமறைக்காடு , மணாளன், தானே, கண்டாய், டுறையும், கண்டாய்மறைக்காட், மறைக்காட்டுள், உள்ளான், உறையும், உடைய, திருமுறை, பயக்கும், அண்ணல், திருமறைக்காடு, உறைகின்ற, தலைவனாய், முதல்வன், சிறந்த, போல்வான், தலைவன், மானான், இராவணன், அவனுக்கு, நான்மறையும், அடியார்களுக்கு, துயரங்களைத், கொண்ட, முதலிய, பொருந்திய, செய்தான், வேண்டுவார், உகந்தருளியிருக்கும், பழைய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஆறாம், தேவாரப், தன்னை, விளக்குக், திருமாலும், பெரிய, காட்சி, பிரமனும், மிக்க, வடிவினனாய், அணிந்தவனாய், வழங்குகின்றான்