ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.091.தனி
5.091.தனி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1964 | ஏயி லானையெ னிச்சை யகம்படிக் கோயி லானைக் குணப்பெருங் குன்றினை வாயி லானை மனோன்மணி யைப்பெற்ற தாயி லானைத் தழுவுமென் ஆவியே. |
5.091.1 |
தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக்கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.
1965 | முன்னை ஞான முதல்தனி வித்தினைப் பின்னை ஞானப் பிறங்கு சடையனை என்னை ஞானத் திருளறுத் தாண்டவன் தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. |
5.091.2 |
பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும், என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.
1966 | ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள் ஞானத் தால்தொழு வேனுனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாயுனை நானுந் தொழுவனே. |
5.091.3 |
சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன்.
1967 | புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர் குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே. |
5.091.4 |
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழுவினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?
1968 | மலையே வந்து விழினும் மனிதர்காள் நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல் தலைவ னாகிய ஈசன் தமர்களைக் கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே. |
5.091.5 |
மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தன் நிலையில் நின்று கலங்காதீர்கள். அவ்வாறு கலங்குவீர்களேயானால் ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகளே கொன்றுவிடும்.
1969 | கற்றுக் கொள்வன வாயுள நாவு இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் எற்றுக் கோநம னால்முனி வுண்பதே. |
5.091.6 |
திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன;தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவையெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு?
1970 | மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி இனிது சாலவு மேசற்ற வர்கட்கே. |
5.091.7 |
மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.
1971 | என்னை யேது மறிந்தில னெம்பிரான் தன்னை நானுமுன் ஏது மறிந்திலேன் என்னைத் தன்னடி யானென் றறிதலும் தன்னை நானும் பிரானென் றறிந்தெனே. |
5.091.8 |
முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம்பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்றுபெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன்.
1972 | தௌளத் தேறித் தௌந்துதித் திப்பதோர் உள்ளத் தேற லமுத வொளிவெளி கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே. |
5.091.10 |
மிக்குத் தௌந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.091.தனி , ஞானத், தன்னை, ஞானத்தால், திருமுறை, நானும், தால்தொழு, என்னை, ஆகிய, நின்று, நிலையில், வந்து, மலையே, ஈசன், மனிதர்களே, அறிந்திலேன், என்னைத், கொள்வன, புழுவுக், ஐந்தாம், தலைவன், இல்லாதவன், பின்னை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், உன்னை, ஞானிகள், தேவாரப், பிறங்கு