ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.054.திருவதிகைவீரட்டம்
5.054.திருவதிகைவீரட்டம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
1612 | எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்ட லரிடு வார்வினை மாயுமால் கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ ரட்ட னாரடி சேரு மவருக்கே. |
5.054.1 |
கன்னற்கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாண்மலர்களாகிய தேனவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும்.
1613 | நீள மாநினைந் தெண்மல ரிட்டவர் கோள வல்வினை யுங்குறை விப்பரால் வாள மாலிழி யுங்கெடி லக்கரை வேளி சூழ்ந்தழ காயவீ ரட்டரே. |
5.054.2 |
வட்டமாகவும், பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர், தம்மை இடைவிடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர்.
1614 | கள்ளி னாண்மல ரோரிரு நான்கு கொண்டு உள்கு வாரவர் வல்வினை யோட்டுவார் தௌளு நீர்வயல் பாய்கெடி லக்கரை வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே. |
5.054.3 |
தௌளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான், தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக் கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார்.
1615 | பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே. |
5.054.4 |
செறிந்த குளிர்நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே, எட்டுவகைப்பட்ட பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார்.
1616 | தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன் தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர் மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை வேன லானை யுரித்தவீ ரட்டரே. |
5.054.5 |
மீன்களை உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும், ஆனை உரித்தவருமாகிய பெருமான், தேன் உடைய அழகிய போதுகளாகிய எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர்.
1617 | ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே. |
5.054.6 |
வன்மை உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும், வேழத்தின் உரியைப் போத்தவருமாகிய பெருமானே, இதழி(ஏழி) யாகிய கொன்றை மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி நீக்குவார்.
1618 | உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத் திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே. |
5.054.7 |
மலைகளினின்று வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும், நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஆகம நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின் அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர்.
1619 | ஓலி வண்டறை யொண்மல ரெட்டினால் காலை யேத்த வினையைக் கழிப்பரால் ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை வேலி சூழ்ந்தழ காயவீரட்டரே. |
5.054.8 |
மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும், வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தே வந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர்.
1620 | தாரித் துள்ளித் தடமல ரெட்டினால் பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் மூரித் தெண்திரை பாய்கெடி லக்கரை வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே. |
5.054.9 |
வலிமை உடையதாய்த் தௌந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான், மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார்.
1621 | அட்ட புட்ப மவைகொளு மாறுகொண் டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந் தட்டு மாறுசெய் கிற்பவ திகைவீ ரட்ட னாரடி சேரு மவர்களே. |
5.054.10 |
திருவதிகைவீரட்டனார் திருவடி சேரும் அடியார்கள், அட்டபுட்பங்களை விதிமுறைப்படி கொண்டு அட்ட மூர்த்தியும், ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால் அனைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.054.திருவதிகைவீரட்டம் , லக்கரை, ரட்டரே, கொண்டு, பாய்கின்ற, வீரட்டத்தில், பாய்கெடி, உள்ள, இட்டு, திருவதிகை, வல்வினை, எட்டுவகைப்பட்ட, எட்டு, பெருமானே, உடைய, தீர்ப்பவர், ஆவர், தண்புனல், மலர்களால், கெடிலக்கரையில், திருமுறை, பெருமான், கெடில, கரையில், வந்து, திருவதிகைவீரட்டம், யுங்கெடி, சூழ்ந்தழ, திருவதிகைவீரட்டத்தில், அடியார்களின், அட்ட, குளிர்புனல், வகைப்பட்ட, ரெட்டினால், அடியார்களுடைய, சூழ்ந்து, வந்திழி, நதியின், யொண்மல, எழுந்தருளியிருப்பவரும், எழில், உள்ளதும், எழுந்தருளியிருக்கும், எழுந்தருளியிருப்பவராகிய, மலர்களை, வினைகள், திருச்சிற்றம்பலம், காயவீ, சேரு, னாரடி, சேவடி, வார்வினை, ரட்ட, தம்மை, பதிகங்கள், மலர்களைக், வல்வினைகளை, ஓட்டுவார், தேன், நூல்கள், யோட்டுவார், தேவாரப், ஐந்தாம், மூன்றொடோ