மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.091.திருவடகுரங்காடுதுறை
3.091.திருவடகுரங்காடுதுறை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர்.
தேவியார் - சடைமுடியம்மை.
3778 | கோங்கமே
குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை வேங்கையே ஞாழலே விம்முபா ஓங்குமா காவிரி வடகரை வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா |
3.091.1 |
கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
3779 | மந்தமா
யிழிமதக் களிற்றிள சந்தமா ரகிலொடு சாதியின் உந்துமா காவிரி வடகரை எந்தையா ரிணையடி யிமையவர் |
3.091.2 |
சிறு அளவில் மதம் சொரியும் யானைக் கன்றுகளின் தந்தங்களையும், நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் ஆகிய பயன்தரக்கூடிய மரங்களையும் விழும்படி மோதி, அலைகளால் அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைத் தேவர்கள் தொழுது எழும் தன்மையர்.
3780 | முத்துமா
மணியொடு முழைவள எத்துமா காவிரி வடகரை மத்தமா மலரொடு மதிபொதி சித்தமா மடியவர் சிவகதி |
3.091.3 |
முத்து, மணி, குகைகளின் அருகில் வளரும் சந்தனமரம் இவற்றை வாரி, தள்ளி மோதும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பெருமை மிகுந்த பொன்னூமத்த மலரோடு, சந்திரனையும் அணிந்து உள்ள சடைமுடி உடைய தலைவரான சிவபெருமானைச் சித்தத்தால் வழிபடும் அடியவர்கள் சிவகதி பெறுவது உறுதி.
3781 | கறியுமா
மிளகொடு கதலியின் எறியுமா காவிரி வடகரை மறியுலாங் கையினர் மலரடி குறியினா ரவர்மிகக் கூடுவார் |
3.091.4 |
உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும் கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும் குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம் உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன் மகிழ்ந்திருப்பர்.
3782 | கோடிடைச்
சொரிந்ததே னதனொடுங் காடுடைப் பீலியுங் கடறுடைப் ஓடுடைக் காவிரி வடகரை பீடுடைச் சடைமுடி யடிகளா |
3.091.5 |
மரக்கிளைகளில் சொரிந்த தேனோடு, மேகம் பெய்த முன்னீரும் கலக்கக் காட்டில் வசிக்கும் மயிலின் பீலியும், மலைச்சாரலில் விளையும் பண்டங்களும் உந்தித் தள்ளி ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை, பெருமையுடைய சடைமுடியுடைய தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டுள்ளார்.
3783 | கோலமா
மலரொடு தூபமுஞ் வாலியார் வழிபடப் பொருந்தினார் ஆலுமா காவிரி வடகரை நீலமா மணிமிடற் றடிகளை |
3.091.6 |
அழகிய நறுமலர்களுடன், தூபமும், சந்தனமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட்டதும், இனிய மாங்கனிகளை அடித்து அசைந்துவரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானை நினைத்து போற்ற வல்லவர்களின் வலிய தீவினைகள் யாவும் தீரும்.
3784 | நீலமா
மணிநிறத் தரக்கனை வாலினாற் கட்டிய வாலியார் ஏலமோ டிலையில வங்கமே ஆலியா வருபுனல் வடகரை |
3.091.8 |
நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும்.
3785 | பொருந்திறற்
பெருங்கைமா வுரித்துமை பெருந்திறத் தநங்கனை யநங்கமா வருந்திறற் காவிரி வடகரை அருந்திறத் திருவரை யல்லல்கண் |
3.091.9 |
போர்செய்யும் தன்மையுடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சுமாறு உரித்து வியப்படையும்படி செய்தவர் சிவபெருமான். அவர் பெருந்திறமை மிக்க மன்மதனின் உடல் அழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்த பெருமையுடையவர். பலவிதப் பொருட்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான், பிரமனம், திருமாலும் தம்மைத் தேடித் துன்புறச்செய்து நெருப்பு மலையாய் ஓங்கி ஒளிர்ந்த தலைவராவார்.
3786 | கட்டமண்
டேரருங் கடுக்கடின் பிட்டர்தம் மறவுரை கொள்ளலும் எட்டுமா காவிரி வடகரை சிட்டனா ரடிதொழச் சிவகதி |
3.091.10 |
கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான கட்டுப்பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.
3787 | தாழிளங்
காவிரி வடகரை போழிள மதிபொதி புரிதரு காழியா னருமறை ஞானசம் கோழையா வழைப்பினுங் கூடுவார் |
3.091.11 |
பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வட கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.091.திருவடகுரங்காடுதுறை , வடகரை, காவிரியின், குரங்காடுதுறை, என்னும், காவிரி, யடைகுரங், காடுதுறை, திருத்தலத்தில், வடகரையிலுள்ள, வீற்றிருந்தருளும், வாலியார், சடைமுடி, சிவகதி, பெறுவது, வடகரையில், திருமுறை, சிவபெருமானின், தள்ளி, திருவடிகளைத், அடித்துவரும், சிவபெருமான், திருவடகுரங்காடுதுறை, சடைமுடியுடைய, ஓடிவரும், நீடுவா, கூடுவார், மூன்றாம், னுலகினூடே, நீலமா, கட்டிய, பெரிய, வாலினாற், போற்றி, கலந்துநுந்தி, வழிபடப், உள்ள, தொழுது, மலரொடு, யடிகளா, ஆகிய, விரும்பி, மதிபொதி, திருச்சிற்றம்பலம், கொண்டு, தலைவரான, தேவாரப், பதிகங்கள், இவற்றை, அடியவர்கள்