மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.078.திருவேதிகுடி
3.078.திருவேதிகுடி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்.
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.
3635 | நீறுவரி
யாடரவொ டாமைமன ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ தாறுவிரி பூகமலி வாழைவிரை வேறுபிரி யாதுவிளை யாடவள |
3.078.1 |
திருநீற்றினையும், வரிகளையுடைய ஆடும் பாம்பையும், ஆமையோட்டையும், அக்குமணியையும், எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார். அவர் இட பவாகனத்தில் ஏறுவார். யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும், பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச, மடுக்களில் ஆணும், பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும், வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும்.
3636 | சொற்பிரிவி
லாதமறை பாடிநட, மற்புரி புயத்தினிது மேவுவரெந் துற்பரிய நஞ்சமுத மாகமு வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக |
3.078.2 |
சிவபெருமான் இசையும், சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவர். முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரியவல்ல தோளில் இனிதாக அணிவார். நாள்தோறும் தேவர்கள் வணங்க, உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர். பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம்.
3637 | போழுமதி
பூணரவு கொன்றைமலர் வாழுநதி தாழுமரு ளாளரிரு சூழுமிர வாளர்திரு மார்பில்விரி வேழவுரி போர்வையினர் மேவுபதி |
3.078.3 |
சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர். பாம்பு, கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்த, அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர். விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர். தேவ லோகத்திலுள்ள மகளிரும், ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர். அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். புலித் தோலாடை அணிந்தவர். அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும்.
3638 | காடர்கரி
காலர்கனல் கையரனன் தோடர்தெரி கீளர்சரி கோவணவ பாடலுடை யார்களடி யார்கண்மல வேடமொளி யானபொடி பூசியிசை |
3.078.4 |
சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர். யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர். நெருப்பைக் கையில் ஏந்தியவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர். தூய உடம்பினர். காதில் தோட்டை அணிந்தவர். கிழிந்த ஆடை அணிந்தவர். சரிந்த கோவணத்தை அணிந்தவர். பசுவேறி வரும் கோலத்தையுடையவர். அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது, தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து, மலரால் அர்ச்சித்து வணங்கி, சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
3639 | சொக்கர்துணை
மிக்கவெயி லுக்கற தக்கவருள் பக்கமுற வைத்தவர கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் |
3.078.5 |
சிவபெருமான் மிக்க அழகுடையவன். கோபத்தால். சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது, அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது, மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும், மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும், தேவர்களை போற்றும் ஒலியும் கொண்டு, தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும், துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
3640 | செய்யதிரு
மேனிமிசை வெண்பொடி தையமிடு மென்றுமட மங்கையொ வையம்விலை மாறிடினு மேறுபுகழ் |
3.078.6 |
சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப் போர்த்தவர். 'பிச்சையிடுங்கள்' என்று இளமைவாய்ந்த உமா தேவியாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும், மிகுந்த புகழும், குறையாத பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும் போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
3641 | உன்னியிரு
போதுமடி பேணுமடி துன்னியொரு நால்வருட னானிழ கன்னியரொ டாடவர்கண் மாமணம் மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய |
3.078.7 |
காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
3642 | உரக்கநெ
ருப்பெழநெ ருக்கிவரை அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை |
3.078.8 |
கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும், தோள்களையும், நெஞ்சிலும், கரத்திலும் நெருப்புப்போல வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து, பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும், நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய, இளங்கொடி போன்ற பெண்களும், ஆடவர்களும், நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ, அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
3643 | பூவின்மிசை
யந்தணனொ டாழிபொலி தேவுமிவ ரல்லரினி யாவரென பாவலர்க ளோசையியல் கேள்விய மேவரிய செல்வநெடு மாடம்வளர் |
3.078.9 |
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன்,
3644 | வஞ்சமணர்
தேரர்மதி கேடர்த தஞ்சமென வென்றுமுண ராதவடி அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ் |
3.078.10 |
வஞ்சனையுடைய சமணர்களும், புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள். இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக் கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று, அறுவகைச் சமய நூற்பொருள்களை ஆராய்ந்து, ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி, கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும்.
3645 | கந்தமலி
தண்பொழினன் மாடமிடை பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க அந்தவுல கெய்தியர சாளுமது |
3.078.11 |
நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும், அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர். மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.078.திருவேதிகுடி , சிவபெருமான், திருவேதிகுடி, வேதிகுடியே, வீற்றிருந்தருளும், அணிந்தவர், திருத்தலமாகும், என்னும், கொண்டு, திருமுறை, யானையின், ஆகும், நறுமணம், கமழும், அருளிய, விளங்குகின்ற, செய்து, ஆடவர்களும், ஒலியும், ஆகிய, இடமாவது, போற்றும், அடியார்கள், அவன், வெற்றி, திருச்சிற்றம்பலம், விளையாடும், பதிகங்கள், தேவாரப், மூன்றாம், தோலை, உரித்து, போர்த்தவர், சிவந்த, அழகிய, கொன்றைமலர், தலம், மேனி