மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.076.திருவேதவனம்
3.076.திருவேதவனம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
வேதவனம் என்பது வேதாரணியம். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
3614 | கற்பொலிசு
ரத்தினெரி கானினிடை இற்பலி கொளப்புகுது மெந்தைபெரு மற்பொலி கலிக்கடன் மலைக்குவ விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை |
3.076.1 |
பருக்கைக் கற்கள் மிகுந்த, பாலைவனம் போன்ற வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும், பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும்.
3615 | பண்டிரை பயப்புணரி
யிற்கனக கொண்டுகயி றிற்கடைய வந்தவிட வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் வெண்டிரைகள் செம்பவள முந்துகடல் |
3.076.2 |
முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய பாற்கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3616 | காரியன்மெல்
லோதிநதி மாதைமுடி நாரியொரு பான்மகிழு நம்பருறை தேரியல் விழாவினொலி திண்பணில வேரிமலி வார்குழனன் மாதரிசை |
3.076.3 |
மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய, கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது. நீண்ட மாடங்களையுடைய வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம் என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம் கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3617 | நீறுதிரு மேனியின்
மிசைத்தொளிபெ ஏறியுல கங்கடொறும் பிச்சைநுக ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி வேறுதிசை யாடவர்கள் கூறவிசை |
3.076.4 |
சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை ஒளி பொருந்தப் பூசியவர். இடபவாகனத்தில் ஏறியவர். ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில் இயற்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன், வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய திருவேதவனம் ஆகும்.
3618 | கத்திரிகை
துத்திரி கறங்குதுடி எத்தணை யுலப்பில்கரு வித்திர ஒத்தற மிதித்துநட மிட்டவொரு மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் |
3.076.5 |
கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக்குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3619 | மாலைமதி
வாளரவு கொன்றைமலர் காலையி லெழுந்தகதிர் தாரகை சோலையின் மரங்க டொறு மிண்டியின வேலையொலி சங்குதிரை வங்கசுற |
3.076.6 |
மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளி பொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண் மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின் ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய, கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3620 | வஞ்சகம
னத்தவுணர் வல்லரண தஞ்சக மவித்தவம ரர்க்கமர கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ் விஞ்சுக வியக்கர்முனி வக்கண |
3.076.7 |
வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3621 | முடித்தலைகள்
பத்துடை முருட்டுரு அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை கெடுத்தலை நினைத்தற மியற்றுதல் விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் |
3.076.8 |
கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய், முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணைபுரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3622 | வாசமலர்
மேவியுறை வானுநெடு கூசுதல்செ யாதவம ணாதரொடு காசுமணி வார்கனக நீடுகட வீசுவலை வாணரவை வாரிவிலை |
3.076.9 |
நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும், மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலைபேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
3623 | மந்தமுர
வங்கடல் வளங்கெழுவு வெந்தபொடி நீறணியும் வேதவன சந்தமிவை தண்டமிழி னின்னிசை பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் |
3.076.11 |
மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க சீகாழிப்பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞானசம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடு பவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.076.திருவேதவனம் , திருவேதவனம், என்னும், சிவபெருமான், வேதவனமே, வீற்றிருந்தருளும், திருத்தலமாகும், ஒலிக்கின்ற, ஒளியும், தலமாவது, பொருந்திய, அழகிய, விளங்கும், ஒலியும், திருமுறை, நறுமணம், ஒலிக்க, பெண்கள், கமழும், தன்மையுடைய, அணிந்த, வீற்றிருக்கும், பெரிய, மனத்தையுடைய, பேசும், தலம், இனிய, திருமேனியின், இடம், கடலலைகள், தேவாரப், பிச்சை, உடைய, பதிகங்கள், மெல்லிய, ஊன்றி, கூந்தலையுடைய, நீண்ட, அலைகள், தேவர்கள், மூன்றாம், கொண்டு, திருச்சிற்றம்பலம்