மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.069.திருக்காளத்தி
3.069.திருக்காளத்தி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்.
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.
3537 | வானவர்கள் தானவர்கள் வாதைபட தானமுது செய்தருள் புரிந்தசிவன் ஏனமிள மானினொடு கிள்ளைதினை கானவர்த மாமகளிர் கனகமணி |
3.069.1 |
தேவர்களும், அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை, தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால், பன்றிகள், இளமான்கள், கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும், இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும்.
3538 | முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள் கதிர்மணியின் வளரொளிக ளிருளகல |
3.069.2 |
மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான். அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர். எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை, எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும், பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும்.
3539 | வல்லைவரு காளியைவ குத்துவலி கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் பல்பலவி ருங்கனி பருங்கிமிக கல்லதிர நின்றுகரு மந்திவிளை |
3.069.3 |
தாரகன் இழைத்த துன்பம் கண்டு, விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி, வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை, பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி, ஒரே கூட்டமாய் மொய்த்து, மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும்.
3540 | வேயனைய தோளுமையொர் பாகமது தூயமதி சூடிசுடு காடினட வாய்கலச மாகவழி பாடுசெய்யும் காய்கணை யினாலிடந் தீசனடி |
3.069.4 |
மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் ஏறி, சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி,சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர், தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி, இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும்.
3541 | மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை |
3.069.5 |
மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற, அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து, பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய, அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன், கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும்.
3542 | பாரகம் விளங்கிய பகீரத டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை வாரத ரிருங்குறவர் சேவலின் காரகி லிரும்புகை விசும்புகமழ் |
3.069.6 |
பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன், பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர, அவனுக்கு அருள்செய்து, பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெடிய வழிகளையுடைய கானக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப் பெரித்த, கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும்.
3543 | ஆருமெதி ராதவலி யாகிய ஈரும்வகை செய்தருள் புரிந்தவ ஊருமர வம்மொளிகொண் மாமணி காரிருள் கடிந்துகன கம்மென |
3.069.7 |
தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத, வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்து சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று, பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும்.
3544 | எரியனைய சுரிமயி ரிராவணனை பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் வரியசிலை வேடுவர்க ளாடவர்க கரியினொடு வரியுழுவை யரியினமும் |
3.069.8 |
நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு, தன் அழிகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி, பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால், யானைகளும், வரிகளையுடைய புலிகளும், சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும்.
3545 | இனதளவி லிவனதடி யிணையுமுடி தனதுருவ மறிவரிய சகலசிவன் புனவர்புன மயிலனைய மாதரொடு கனகமென மலர்களணி வேங்கைக |
3.069.9 |
குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள்
3546 | நின்றுகவ ளம்பலகொள் கையரொடு நன்றியறி யாதவகை நின்றசிவன் குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர் கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை |
3.069.10 |
நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும், உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை, நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும்.
3547 | காடதிட மாகநட மாடுசிவன் மாடமொடு மாளிகைக ணீடுவளர் நாடுபல நீடுபுகழ் ஞானசம் பாடலொடு பாடுமிசை வல்லவர்க |
3.069.11 |
சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி, மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்தள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும், பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர். அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.069.திருக்காளத்தி , ளத்திமலையே, வீற்றிருந்தருளும், சிவபெருமான், திருக்காளத்தி, மேவுமலை, மலையாகும், தன்னைவினவில், திருக்காளத்திமலையாகும், என்னும், கொண்டு, மிகுந்த, செய்த, வலிமை, திருமுறை, யாடுகா, தாரகன், பெரிய, கரிய, தன்னை, நெடிய, விளங்கிய, கூறிவினவில், விளையாடுகின்ற, அருள்செய்த, மூங்கில்கள், பதிகங்கள், தோன்றிய, திருச்சிற்றம்பலம், செய்தருள், தேவாரப், பன்றிகள், இருள், புரிந்தசிவன், உள்ள, சிறப்புடைய, மூன்றாம்