மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.067.திருப்பிரமபுரம்
3.067.திருப்பிரமபுரம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3514 | சுரருலகு
நரர்கள்பயி றரணிதல புரமெரிய விரவுவகை சரவிசைகொள் வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை |
3.067.1 |
தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும், மனிதர்கள் வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய, காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான். எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த, வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு ஓதி, அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச் சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது.
3515 | தாணுமிகு வாணிசைகொ
டாணுவியர் கோணுநுத னீணயனி கோணில்பிடி ஏணுகரி பூணழிய வாணியல்கொண் வேணுவினை யேணிநகர் காணிறிவி |
3.067.2 |
தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட, நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார். வளைந்த நெற்றியையும், நீண்ட கண்களையு முடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை எடுத்தாள். மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும், வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்தால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு, தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும். சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்தபெயர் வேணுபுரம் என்பது.
3516 | பகலொளிசெய்
நகமணியை முகைமலரை ககலமலி சகலகலை மிகவுரைசெய் பகைகளையும் வகையிலறு முகவிறையை புகவுலகு புகழவெழி றிகழநிக |
3.067.3 |
சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த நாகரத்தினத்தையும், அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும் திருத்தலமாகும். தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர் பெற்றது.
3517 | அங்கண்மதி கங்கைநதி வெங்கணர துங்கமலர் தங்குசடை யங்கிநிக வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர் வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர |
3.067.4 |
அழகிய சந்திரனும், கங்கை நதியும், கொடிய பாம்புகளும், அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர், எங்கள் இறைவராகிய சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும்.
3518 | ஆணியல்பு காணவன வாணவியல் தூணியற நாணியற வேணுசிலை பாணியமர் பூணவருண் மாணுபிர பாணியுல காளமிக வாணின்மலி |
3.067.5 |
விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு, அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி, அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும், அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும், வில்நாண் அறுபடவும், வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத் துணித்தவர். அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச் செய்யும் மற்போர் செய்யவர, அவனுக்கு அருள்புரிந்தவர், பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக (பொருளாக) உள்ள சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது காலாந்தரத்தில் பிரளயகால வெள்ளமானது உலகம் முழுவதையும் மூழ்கச் செய்ய, ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில் தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும். பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர்.
3519 | நிராமய பராபர புராதன றிராவுமெ திராயது பராநினை அராமிசை யிராதெழி றராயர தராயனை விராயெரி பராய்மிகு |
3.067.6 |
இறைவன் நோயற்றவன். அனைத்துப் பொருட்கட்கும் மேலான பரம்பொருள். மிகப்பழமையானவன். பராவுசிவன் என்று இரவும், பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற பழமை யானவன். தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும் அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இரணியாக்கனால் கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை, திருமால் பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும்.
3520 | அரணையுறு முரணர்பலர் மரணம்வர கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரவமுது விரவவிடல் புரளமுறு சிரமரன சரணமவை பரவவிரு |
3.067.7 |
மும்மதில்களை அரணாகக் கொண்ட திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட, காயங்கள் முதலான உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால் அராவப்பட்டஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும், தன்னைச் சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப் போனும், யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும், உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, எல்லோராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில், தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அந்தத் தலையானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில் பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும்.
3521 | அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் |
3.067.8 |
தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம் காற்பெருவிரலை ஊன்றி, பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம் பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு நீண்ட வாழ்நாளும், ஒளிபொருந்திய வாளும் அருளியவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வேதங்கட்கும், தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி, முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே, புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும் நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும் ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும்.
3522 | விண்பயில மண்பகிரி வண்பிரம கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் |
3.067.9 |
சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து ஆகாயத்தில் சென்றும், மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப் படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப் பிளந்து சென்றும் காணப்பெறாது, கண்ணால் பற்றக்கூடிய ஒளி நீங்க, நுண்ணிய பொருளாக, இனிய கீர்த்தியைக் கொண்ட அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மண்ணின் நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு இறந்து விண்ணுலகை அடைய, துருவாச முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும்.
3523 | பாழியுறை வேழநிகர் பாழமணர் ஏழினிசை யாழின்மொழி யேழையவள் கீழிசைகொண் மேலுலகில் வாழரசு காழியசில் காழிசெய வேழுலகி |
3.067.10 |
பாழியில் தங்கும், யானையை ஒத்த சமணர்களும், கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும், மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும், மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று, தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும்.
3524 | நச்சரவு கச்செனவ சைச்சுமதி மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு மச்சமத நச்சிமத மச்சிறுமி கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க |
3.067.11 |
நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும்.
3525 | ஒழுகலரி தழிகலியி லுழியுலகு முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் |
3.067.12 |
நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.067.திருப்பிரமபுரம் , சிவபெருமான், வீற்றிருந்தருளும், என்னும், திருத்தலமாகும், இடமாவது, தான், அழகிய, கொண்ட, செய்த, வளைந்த, திருமுறை, வந்த, கொண்டு, ஆகும், திருமால், இடம், அப்பெருமான், அஞ்சி, திருப்பிரமபுரம், வாழ்கின்ற, தேவர்கள், பெற்ற, அவனுக்கு, வாச்சியமாக, பொருளாக, எனப்படும், மறைகட்கு, பன்றி, எடுத்து, மேலுலகில், சண்பை, குற்றம், விரும்பும், போற்றப்படும், நீங்க, சென்றும், பாடிப், அருள், மொண்பொழிய, வேடன், அழியுமாறு, எனப், நீண்ட, பதிகங்கள், தேவாரப், இந்திரன், வடிவம், துதித்தலால், வலிமை, துன்புறுத்திய, சரணடைந்து, பிரமன், சூரபதுமனுக்கு, ஒளிந்து, திருச்சிற்றம்பலம், பெயர், கரணங்களின், வரும், மூன்றாம், புகழ்மிக்க, வேணுபுரம், வந்து, பெருமான், வாழும்