மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.065.திருக்கச்சிநெறிக்காரைக்காடு
3.065.திருக்கச்சிநெறிக்காரைக்காடு
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காரைத்திருநாதஈசுவரர்.
தேவியார் - காரார்குழலியம்மை.
3492 | வாரணவு முலைமங்கை பங்கினரா போரணவு மழுவொன்றங் கேந்திவெண் காரணவு மணிமாடங் கடைநவின்ற நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் |
3.065.1 |
சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன். திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன். மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும், பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில், நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான்.
3493 | காரூரு மணிமிடற்றார் கரிகாட ஊரூரன் பலிக்குழல்வா ருழைமானி தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் |
3.065.2 |
சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார். கொள்ளிகள் கரிந்த சுடு காட்டிலிருப்பவர், பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார். மான்தோலை ஆடையாக உடுத்தவர். அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த, மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
3494 | கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோ டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா ரான்வெள்ளை ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில் நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே |
3.065.3 |
ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர். குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு, கங்கை, பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர். வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார். மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார். திருநீற்றையும் அணிந்துள்ளார்.
3495 | பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப் மறைநவின்ற பாடலோ டாடலராய் சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.4 |
பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க, பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும், ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார். அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந் தருளுகின்றார்.
3496 | அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில் நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.5 |
சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர், குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு, கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி, பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர். அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
3497 | பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று வின்மலையி னாண்கொளுவி வெங்கணையா நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.6 |
தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க, நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும், ஒரு நொடியில், மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த, இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
3498 | புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை எற்றொழியா வலைபுனலோ டிளமதிய பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார் நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.7 |
சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும், கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து, ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு, பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர். தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர். நெற்றிக்கண்ணையுடையவர். அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
3499 | ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார் ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.8 |
ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான். அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், சுற்றிய வயல்களும், மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும், நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
3500 | ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற் மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ பூண்டாரு மோரிருவ ரறியாமைப் நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.9 |
சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு. உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார். இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளையுடைய பாம்போடு, அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர். திருமால், பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர். அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
3501 | குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண் வண்டாருங் குழலாளை வரையாகத் கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் |
3.065.10 |
விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும், மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து, வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள்.
3502 | கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் பெண்ணாருந் திருமேனிப் பெருமான தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் |
3.065.11 |
கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும், தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி, குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.065.திருக்கச்சிநெறிக்காரைக்காடு , நெறிக்காரைக், கலிக்கச்சி, காட்டாரே, சிவபெருமான், காரைக்காட்டில், திருக்கச்சிநெறிக், வீற்றிருந்தருளுகின்றார், ஒலிமிக்க, கொண்டு, அப்பெருமான், திருமேனியில், அழகிய, திருமுறை, வீற்றிருந்தருளும், உமாதேவியைத், திருக்கச்சிநெறிக்காரைக்காடு, திருக்கச்சி, அணிந்தவர், வண்டுகள், நெறிக், அணிந்துள்ளார், வலிய, குன்றாத, சூழ்ந்த, வில்லாகக், மேருமலையை, மலரையும், அணிந்து, பாம்பை, திரிவார், மலர்ப்பொய்கை, பாகமாகக், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், மூன்றாம், தேவாரப், நீர், மலர்கள், வீதிகளையுடைய, நிறைந்த, நீண்ட, குளங்களையுடைய, பூத்துள்ள, கொண்டவர்