மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.037.திருப்பிரமபுரம்
3.037.திருப்பிரமபுரம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3190 | கரமுனம்மல ராற்புனன்மலர் பரமனூர்பல பேரினாற்பொலி வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம் பிரமனூர்பிர மாபுரத்துறை |
3.037.1 |
யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது. பக்தர்களும், சித்தர்களும் போற்றி வணங்க, அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்யவல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து, மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக.
3191 | விண்ணிலார்மதி சூடினான்விரும் உண்ணநன்பலி பேணினானுல பெண்ணினார்திரு மேனியான்பிர அண்ணலாரரு ளாளனாயமர் |
3.037.2 |
இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர். விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர். உலகத்து உயிர்கட்கு உடம்பும், உயிருமானவர். மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும், திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார்.
3192 | எல்லையில்புக ழாளனும்மிமை பல்லையார்தலை யிற்பலியது தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் மல்லையம்பொழி றேன்பில்கும்பிர |
3.037.3 |
இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர். தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர். பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர். அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தௌந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட, வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார்.
3193 | அடையலார்புரம் சீறியந்தண பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர றொடையலார்நறுங் கொன்றையான்றொழி இடையிலார்சிவ லோகமெய்துதற் |
3.037.4 |
பகையசுரர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து, அந்தணர்கள் போற்றி வணங்க, உமா தேவியோடு, பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான். இடையீடில்லாதவர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு, நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து, அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக.
3194 | வாயிடைம்மறை யோதிமங்கையர் போயிடம்மெரி கானிடைப்புரி பேயொடுங்குடி வாழ்வினான்பிர றாயிடைப்பொரு டந்தையாகுமென் |
3.037.5 |
இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன். தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று, சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன். பேய்க் கணங்களுடன் கூடி வாழ்பவன். திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே, பெற்ற தாயும், தந்தையும், மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன்.
3195 | ஊடினாலினி யாவதென்னுயர் கோடிநீயுழல் கின்றதென்னழ பீடுநேர்ந்தது கொள்கையான்பிர ஏடுநேர்மதி யோடராவணி |
3.037.6 |
உயர் நெஞ்சமே! என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவபெருமான். தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன். திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும், மலரை ஒத்த பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக.
3196 | செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில ஐயனாண்டகை யந்தணனரு பெய்யுமாமழை யானவன்பிர வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந் |
3.037.7 |
இறைவன் சிவந்த திருமேனியுடையவன். வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன். சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன். அளவில்லா ஆற்றலும், எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன். அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன். பெய்யும் மழைபோன்றவன். திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக!
3197 | கன்றொருக்கையி லேந்திநல்விள சென்றொருக்கிய மாமறைப்பொரு அன்றரக்கனைச் செற்றவன்னடி பின்றருக்கிய தண்பொழிற்பிர |
3.037.8 |
ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும், தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும், அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும், திருமுடியையும் தேடியும் காணாதவராயினர். அப்பெருமான் அருள் தன்மையும், ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான்.
3198 | உண்டுடுக்கைவிட் டார்களும்முயர் பண்டடக்கு சொற்பேசும்அப்பரி தண்டொடக்குவன் சூலமுந்தழன் கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர |
3.037.9 |
உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும், மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள். உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர். அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா. வீணை,அக்குமாலை, சூலம், நெருப்பு, பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான். அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக!
3199 | பித்தனைப்பிர மாபுரத்துறை மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன் பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை |
3.037.10 |
பித்தனும், திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில், ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.037.திருப்பிரமபுரம் , மாபுரத்துறை, போற்றி, வீற்றிருந்தருளும், கொண்டு, திருமுறை, வழிபடுவீர்களாக, ஆகிய, திருப்பிரமபுரம், சிவபெருமானே, திருப்பிரமபுரத்து, சிவபெருமான், என்பதை, வழிபடும், சிவபெருமானின், அவன், இறைவன், அருளிச், மாமறைப்பொரு, ஆற்றலும், நீங்க, ஞானசம்பந்தன், சிவபெருமானை, என்ன, திருப்பிரமாபுரத்தில், பெற்ற, விளங்குபவன், வேதங்களை, கோயிலில், வணங்க, வேண்டும், அருள், தேவாரப், பேணியே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தலைவன், மூன்றாம், இறைவர், பிரமனின், வீற்றிருந்தருளுகின்ற, தூவி, மலர்களைத், அருளைப், செய்து, சோலைகளையுடைய