மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.011.திருப்புனவாயில்
3.011.திருப்புனவாயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புனவாயிலீசுவரர்.
தேவியார் - கருணையீசுவரியம்மை.
2910 |
மின்னியல்
செஞ்சடை வெண்பிறை யன்விரி பன்னிய நான்மறை பாடியா டிப்பல அன்னமன் னந்நடை யாளொ டும்மம புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன |
3.011.1 |
மின்னல் போன்று ஒளிரும் சிவந்த சடைமுடியும், வெண்மையான பிறைச்சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரிநூலும் கொண்டு, அடிக்கடி ஓதப்படும் நான்கு வேதங்களையும் பாடியாடிப் பல திருத்தலங்கட்கும் சென்று, அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமானது, புன்னை மலர்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்கும் திருப்புனவாயில் ஆகும்.
2911 | விண்டவர்
தம்புர மூன்றெரித் துவிடை வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன |
3.011.2 |
பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி, வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாவது, தாழையும், புலிநகக் கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில் ஆகும்.
2912 | விடையுடை
வெல்கொடி யேந்தினா னும்விறற் புடைபட வாடிய வேடத்தா னும்புன தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் படைவல னேந்திய பால்நெய்யா டும்பர |
3.011.3 |
இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும், வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும் கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, கொன்றை மாலை அணிந்து, ஒளியுடைய மழுப்படையை வலக்கையிலே ஏந்தி, பாலாலும், நெய்யாலும் திருமுழுக்காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும் பரம்பொருள் ஆவான்.
2913 | சங்கவெண்
தோடணி காதினா னுஞ்சடை அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ பொங்கர வம்மணி மார்பினா னும்புன பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர |
3.011.4 |
திருப்புனவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வெண்சங்கினாலாகிய தோடணிந்த காதுடையவன். தாழ்ந்த நீண்ட சடையுடையவன். உள்ளங்கையில் நெருப்பு ஏந்தியவன். சீறிப் படமாடும் பாம்பை ஆபரணமாக அணிந்த மார்புடையவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்திலே பசிய கண்களையுடைய வெண்ணிற இடபவாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மேலான பரம்பொருள் ஆவான்.
2914 | கலிபடு
தண்கடல் நஞ்சமுண் டகறைக் புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை |
3.011.5 |
ஒலிக்கின்ற குளிர்ச்சியான பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் கறுத்த கண்டத்தை உடையவன் சிவபெருமான். புலித்தோலை ஆடையாகவும், பாம்பை அரையில் கச்சாகவும் கட்டியவன். அவன் திருப்புனவாயில் என்னும் தலத்தில், ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையோடு, எருக்கு, ஊமத்தம் ஆகிய மலர்களையும், மெலிந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் சடையில் சூடி இடப வாகனத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
2915 | வாருறு
மென்முலை மங்கைபா டநட காருறு கொன்றைவெண் டிங்களா னுங்கனல் போருறு வெண்மழு வேந்தினா னும்புன சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ |
3.011.6 |
கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவி பாட, அதற்கேற்ப நடனம் ஆடி, கார்காலத்தில் மலர்கின்ற கொன்றைமலரையும், வெண்ணிறத் திங்களையும் சடையிலே சூடி, நெருப்புப் போன்று ஒளிர்கின்ற போர் செய்யப் பயன்படும் வெண்மழுப்படையைக் கையில் ஏந்தித் திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவலோகநாதனாகிய சிவபெருமான் தன் அடியார்கட்குச் சீருறு செல்வம் அருள்வான்.
2916 | பெருங்கடல்
நஞ்சமு துண்டுகந் துபெருங் திருத்திள மென்முலைத் தேவிபா டந்நட பொருந்தலர் தம்புர மூன்றுமெய் துபுன இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிடர் |
3.011.7 |
சிவபெருமான், பெரிய பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட நஞ்சை உண்டு மகிழ்ந்தவன். சுடுகாட்டில் இளமென் முலையுடைய உமாதேவி பாட நடனமாடியவன். பகையசுரர்களின் புரம் மூன்றையும் அம்பு எய்து அழித்தவன். திருப்புனவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் தொழுபவர்கட்கு எவ்விதத் துன்பமும் இல்லை.
2917 | மனமிகு
வேலனவ் வாளரக் கன்வலி வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன |
3.011.8 |
செருக்குடைய மனம் உடையவனும், வேல், வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு, அழகும், பெருமையுமுடைய கயிலை மலையால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, அவனுடைய பழம்புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகுற விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமான திருப்புனவாயில் ஆகும்.
2918 | திருவளர் தாமரை மேவினா னும்திகழ் கருநிற வண்ணனும் காண்பரி யகட நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன |
3.011.9 |
அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனும், விளங்கும் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள கருநிறத் திருமாலும் காண்பதற்கரியவன் சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட ஒலிக்கின்ற சுரிசங்குகளும், சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும் திருப்புனவாயில் ஆகும்.
2919 | போதியெ
னப்பெய ராயினா ரும்பொறி சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை |
3.011.10 |
புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள் மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த திருப்புனவாயிலில் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும் நீங்கும்.
2920 | பொற்றொடி
யாளுமை பங்கன்மே வும்புன கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் அற்றமில் பாடல்பத் தேத்தவல் லார்அருள் |
3.011.11 |
பொன் வளையலணிந்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்புனவாயில் என்னும் தலத்தை வேதாகமங்களைக் கற்றவர்கள் தொழுது போற்றுமாறு கடல் வளமிக்க சீகாழியில் அவதரித்த நற்றமிழ் ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் இறையருளைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.011.திருப்புனவாயில் , திருப்புனவாயில், சிவபெருமான், என்னும், வாயிலில், வாயிலே, ஆகும், னும்புன, வீற்றிருந்தருளும், எழுந்தருளியுள்ள, திருத்தலத்தில், திருமுறை, ஒலிக்கின்ற, தண்புன, வெண்ணிற, ஆவான், திருப்புனவாயிலில், பாம்பை, குளிர்ந்த, மல்கிய, நிறைந்து, அழகிய, நற்றமிழ், செல்வம், உமாதேவி, அவன், பரம்பொருள், சூடி, சீருறு, நஞ்சை, நடனம், போன்று, உமாதேவியோடு, இறைவன், வெண்பிறை, திருச்சிற்றம்பலம், மூன்றாம், தேவாரப், பதிகங்கள், பொன், தம்புர, மலர்ந்துள்ள, கொன்றையந், உடையவனுமான, இடமாவது, எழுந்தருளியிருக்கும், தபுன, பகையசுரர்களின், இடபவாகனத்தில், கொன்றை