மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.001.கோயில்
3.001.கோயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
2801 | ஆடி னாய்நறு
நெய்யொடு பால்தயிர் நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே பாடி னாய்மறை யோடுபல் கீதமும் சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே |
3.001.1 |
நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப்பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞான வெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறியகொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர்பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.
2802 | கொட்ட
மேகம ழும்குழ லாளொடு
கூடி னாய்எரு தேறி னாய்நுதற் நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ |
3.001.2 |
நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப்பட்டம் அணிந்தவனே, பூதகணங்கள் இசைபாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே, (அறிதற்கரிய) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ? கூறியருள்க.
2803 | நீலத்
தார்கரி யமிடற் றார்நல்ல சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் கோலத் தாய்அரு ளாய்உன காரணம்கூறுதுமே |
3.001.3 |
நீலநிறத்தைப் பொருந்திய கரிய திருக்கழுத்தினர் (திருநீலகண்டர்). அழகிய நெற்றிக்கண்ணினர். திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடிபூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம்.
2804 | கொம்ப
லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கம்ப லைத்தெழு காமுறு காளையர் அம்பலத்துறை வான்அடி யார்க்கடையாவினையே |
3.001.4 |
பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக்கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான்,(நடராசாப் பெருமான்), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப்போன்ற உடற்கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக் கூத்தாடும் முழுமுதல்வன் அடியவர்க்கு வினைத்தொடர்பு இல்லை.
2805 | தொல்லை
யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே |
3.001.5 |
திரிபுரத்தை எரித்தொழிக்க மலையில்லால் தீக்கணையை எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீலமணிபோலக் கறுத்த திருக்கழுத்தினனே! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே! தில்லை வாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும்.
2806 | ஆகந்
தோய்அணி கொன்றை யாய்அனல் பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே |
3.001.6 |
திருமேனியில் தோய்த்த அழகிய கொன்றை மாலையையுடையவனே! தீ ஏந்திய திருக்கையனே! தேவதேவனே! அம்பிகைபாகமுடைய பகவனே! பலி ஏற்றுத்திரியும் பாண்டரங்கக் கூத்தனே! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே! மழுவாளை ஏந்தியவனே! நச்சுத் தீயையுடைய அரவக்கச்சணிந்த திருவரையினனே! உன் அடியவரை வினைகள் அடையா. (ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.)
2807 | சாதி
யார்பளிங் கின்னொடு வெள்ளிய வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள் ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே |
3.001.7 |
நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே, விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது; வருத்தா தொழியும்.
2808 | வேயி
னார்பணைத் தோளியொ டாடலை தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே |
3.001.8 |
மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திரு நடங்கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.
2809 | தாரி
னார்விரிகொன்றை யாய்மதி தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள் சீரி னால்வழி பாடொழி யாததோர் ஏரி னால் அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே |
3.001.9 |
மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய தேர்களாலே பொலிவு நிறையப் பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத்தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம். ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு.
2810 | வெற்ற
ரையுழல் வார்துவர் ஆடைய மற்ற வருல கின்னவ லம்மவை மாற்றகில்லார் கற்ற வர்தொழு தேத்துசிற் றம்பலம் உற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே |
3.001.10 |
ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர். சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி (ஆன்மலாபம்) கொள்ளவல்லவராவர்.
2811 | நாறு
பூம்பொழில் நண்ணிய காழியுள் ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள் ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே |
3.001.11 |
மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும், வேதசிவாகமங்களையுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப்புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை சையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர். (தி.3ப.6பா.11; தி.3ப.31பா.11; தி.3ப.52பா.11.)
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.001.கோயில் , றம்பலம், அழகிய, உடைய, சேவடி, லால்கழற், நிறைந்த, கைகளால், இல்லை, தேத்துசிற், கைதொழ, பொருந்திய, திருமுறை, கழலணிந்த, சூடியவனே, தில்லைதன்னுள், திருச்சிற்றம்பலத்தைத், திருச்சிற்றம்பலம், கோயில், கொன்றை, திரிபுரத்தை, தாங்கும், எய்தவனே, ஊறும், சொன்னவையும், பண்டரங்கா, வல்ல, தில்லை, தொழுது, விரும்பியவனே, திருக், விளங்குகின்ற, விகிர்தனே, தில்லையுள், வாரணி, அங்கை, விரும்பினவனே, பாண்டரங்கக், கூத்தனே, ஏத்தும், செம்மை, திருச்சிற்றம்பலத்தை, வழிபடும், வாழ்பவனே, தொல்லை, வினை, தில்லைவாழந்தணர், நறுமணம், மூன்றாம், தேவாரப், பதிகங்கள், யாதசிற், கூடி, நல்ல, நின், சேவடியைக், வார்சடையான், செய்து, ஆகிய, சேர்த, மேவிய, வாழும், அந்தணர், திருச்சிற்றம்பலத்தே, பெற்ற