இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.097.சீகாழி
2.097.சீகாழி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2518 |
நம்பொருள் நம்மக்களென்று அம்பர மடைந்துசால உம்பர்நாத னுத்தமன் நம்பன்மேவு நன்னகர் |
2.097. 1 |
நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர் அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
2519 |
பாவமேவு முள்ளமோடு ஏவமான செய்துசாவ தீவமாலை தூபமுஞ் தேவதேவன் மன்னுமூர் |
2.097.2 |
பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறைவனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர் சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர் தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக.
2520 | சோறுகூறை யின்றியே கேறுசுற்ற மௌகவே ஆறுமோர் சடையினான் நாறுதேன் மலர்ப்பொழில் |
2.097. 3 |
உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப் பதியை அடைவீர்களாக.
2521 | நச்சிநீர்
பிறன்கடை உச்சிவம் மெனும்முரை பிச்சர்நச் சரவரைப் இச்சைசெய்யு மெம்பிரான் |
2.097. 4 |
பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் நாளை நண்பகற்போதில் வருக எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடுபாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
2522 |
கண்கள்காண் பொழிந்துமேனி உண்கிலாமை செய்துநும்மை விண்குலாவு தேவருய்ய கண்கள்மூன் றுடையவெம் |
2.097.5 |
கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத்தேவர் உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ணராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக.
2523 |
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் எல்லையில் பிணக்கினிற் பல்லில்வெண் டலையினிற் கொல்லையேற தேறுவான் |
2.097.6 |
துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
2524 |
பொய்மிகுத்த வாயராய்ப் ஐமிகுத்த கண்டரா மைமிகுத்த மேனிவா பைமிகுத்த பாம்பரைப் |
2.097. 8 |
மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக
2525 |
காலினோடு கைகளுந் ஏலவார் குழலினா மாலினோடு நான்முகன் நீலமேவு கண்டனார் |
2.097.9 |
கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.
2526 |
நிலைவெறுத்த நெஞ்சமோடு முலைவெறுத்த பேர்தொடங்கி ப தலைபறித்த கையர்தேரர் சிலைபிடித் தெயிலெய்தான் |
2.097. 10 |
பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலானோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக.
2527 | தக்கனார்
தலையரிந்த அக்கினோ டரவசைத்த ஒக்கஞான சம்பந்தன் மிக்கவின்ப மெய்திவீற் |
2.097. 11 |
தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.097.சீகாழி , சேர்மினே, அடைவீர்களாக, அழகிய, காழிப்பதியை, தன்முனம், சிவபிரானது, ஆகிய, நீர், திருமுறை, முன்னம், அன்பு, எழுந்தருளிய, காழியை, சீகாழி, முன்னமே, அரையில், பொருந்திய, பேசும், கட்டிய, பொறாமையோடு, புதல்வர்கள், முன்னரே, திருந்துகாழி, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், இரண்டாம், நலங்கொள்காழி, செய்து, மலர்ப்பொழில், செய்யும், தேவர், நான்முகன்