இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.087.திருநறையூர்
2.087.திருநறையூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
2410 | நேரிய
னாகுமல்ல னொருபாலு மேனி நீரியல் காலுமாகி நிறைவானு மாகி ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நாரியொர் பாகமாக நடமாட வல்ல |
2.087. 1 |
ஊர்கள் தோறும் சென்று, பிச்சையேற்று உலகங்கள் போற்ற நல்குவதை உண்டு. முற்காலத்தே சுடலையில் மாதொருபாகனாக நடனமாடவல்ல, நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவபெருமான், நுண்ணியன். பேருருவினன். தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன். நீர், காற்று, முதலான ஐம்பூத வடிவினன்.
2411 | இடமயி
லன்னசாயன் மடமங்கை தன்கை கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர் நடமயி லாலநீடு குயில்கூவு சோலை |
2.087. 2 |
பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும், புகழ் நீடிய குயில்கள் கூவவும், விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான், இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து, மூவெயில்களைச் செந்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன். இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான்.
2412 | சூடக
முன்கைமங்கை யொருபாக மாக ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு நாடக மாகவாடி மடவார்கள் பாடும் |
2.087. 3 |
இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன். பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று, மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த, இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன்.
2413 | சாயனன்
மாதொர்பாகன் விதியாய சோதி ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன் தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் |
2.087. 4 |
தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற, சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவனாகிய அவன், அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்டவன். எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி. சிவகதியாக நிற்கும் கடவுள். என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன். இருண்ட கண்டத்தினன். தாயெனத் தலையளி செய்யும் தலைவன்.
2414 | நெதிபடு
மெய்யெமைய னிறைசோலை சுற்றி அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன் மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் |
2.087. 5 |
வளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல்களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன், சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் எமக்குத் தலைவன் நினைறந்த சோலைகள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் அமரர்க்குத் தலைவன். அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன். பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன்.
2415 | கணிகையொர்
சென்னிமன்னு மதுவன்னி கொன்றை பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு அணுகிய வேதவோசை யகலங்க மாறின் நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து |
2.087.6 |
அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன். கங்கை தங்கிய முடி மீது வன்னி, கொன்றைமலர் முதலின பொருந்திய சடையினை உடையவன். வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங்கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன். தன்னை அணுகிய வேதங்களின் ஓசை, அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன்.
2416 | ஒளிர்தரு
கின்றமேனி யுருவெங்கு மங்க மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும் துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு |
2.087. 7 |
தேன் துளிக்கும் சோலைகளையும், கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும், வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வானளாவிய, மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட, கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன். விடம் பொருந்திய கண்டத்தினன்.
2417 | அடலெரு
தேறுகந்த வதிருங் கழற்கள் கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் தாளனைத்து முடிபத் திறுத்தும் நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல |
2.087. 8 |
இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத் தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக் கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன். அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன். கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன்.
2418 | குலமலர்
மேவினானும் மிகுமாய னாலும் றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச நலமலர் சிந்தவாச மணநாறு வீதி |
2.087. 9 |
சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்துதலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும், எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி, தீயாய் ஓங்கிய பெரியோன், விளங்கும் சடைமுடியை உடையவன்.
2419 | துவருறுகின்ற
ஆடை யுடல்போர்த் துழன்ற கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட |
2.087. 10 |
தவம் நிறைந்த பத்தர்கள், சித்தர்கள், மறைவல்லோர் விரும்பி வழிபடவும், மாதர்கள் முறையாகப் பாடி அடையவும், நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன், துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடையோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன். அவன் விளங்கும் சடைமுடி உடையோன்.
2420 | கான லுலாவி
ஓதம் எதிர்மல்கு காழி ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று |
2.087. 11 |
ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமையில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடிகளைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை, குற்றமற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.087.திருநறையூர் , விளங்கும், நறையூரின், நறையூரில், னவனே, நம்ப, வந்து, இறைவன், தலைவன், எழுந்தருளிய, நம்பனாகிய, உடைய, பொருந்திய, நின்று, திருமுறை, அவன், உடையவன், திருநறையூர், பாயும், சென்னிமன்னு, அணுகிய, தன்னை, தொண்டர்கள், தேவாரப், அதிர்பட, பதிகங்கள், நிற்கும், அருள், கண்டத்தினன், விகிர்தன், மாடவீடுகளையும், பெருமான், துகந்த, பாடி, கடந்து, வல்லவர், இரண்டாம், பொழிலின், ஒளிதரும், தோன்றிய, சடையன், சிலபல, சித்தர்கள், பேணும், சூழ்ந்த, புகழ், அப்பெருமான், கையில், மடவார்கள், சென்று, சோலை, வமரர்க், போற்ற, மைந்தன், மருவும், தோறும், நம்பனவனே, கடவுள், நின்ற, செல்வன், மலையின்கண், உண்டு, சோதி, ஏத்த, வல்ல, பாகமாக, வருபவன், திருச்சிற்றம்பலம், தவம்