இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.081.திருவேணுபுரம்
2.081.திருவேணுபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருவேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2346 | பூதத்தின்
படையினீர் ஓதத்தி னொலியொடு வேதத்தி னிசைபாடி பாதத்தீர் வேணுபுரம் |
2.081. 1 |
பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே! நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.
2347 | சுடுகாடு
மேவினீர் உடையாடை யதுகொண்டீ அடையாள மதுகொண்டீ படையாள்வீர் வேணுபுரம் |
2.081. 2 |
சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே, அருள் வழங்கும் அடையாளமாக உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.
2348 | கங்கைசேர்
சடைமுடியீர் திங்களோ டிளவரவந் மங்கையோர் கூறுடையீர் பங்கயஞ்சேர் வேணுபுரம் |
2.081. 3 |
கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச் செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக உடையவரே, நீர் மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்த தடாகங்களும் வயல்களும் சூழ்ந்த வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.
2349 | நீர்கொண்ட
சடைமுடிமே ஏர்கொண்ட கொன்றையினோ சீர்கொண்ட மாளிகைமேற் கார்கொண்ட வேணுபுரம் |
2.081. 4 |
கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக நீண்ட பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய ஊமத்தை மலர் ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர் மாளிகைகளின்மேல் ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.
2350 | ஆலைசேர்
தண்கழனி சோலைசேர் வண்டினங்க காலையே புகுந்திறைஞ்சிக் பாலையாழ் வேணுபுரம் |
2.081. 5 |
கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை உடையதும், சோலைகளில் வண்டுகள் தேனுண்டு இசை பாடி மகிழ்விப்பதும், காலை நேரங்களில் இனிய மொழிகள் பேச்சுமகளிர் ஆலயம் வந்து கைகூப்பித் தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினது மாகிய வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய் எழுந்தருளும் பதியாகக் கொண்டுள்ளீர்.
2351 | மணிமல்கு
மால்வரைமேன் துணிமல்கு கோவணத்தீர் பணிமல்கு மறையோர்கள் தணிமல்கு கோயிலே |
2.081. 6 |
மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது உமையம்மை யோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை உடுத்தவரே, சுடுகாட்டில் ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர் தொண்டில் விருப்புடைய அந்தணர்கள் அன்புடன் வணங்க வேணுபுரத்தில் விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக் குரிய கோயில் எனக் கொண்டு அமர்ந்துள்ளீர்.
2352 | நீலஞ்சேர்
மிடற்றினீர் கோலஞ்சேர் விடையினீர் ஆலஞ்சேர் கழனி கோலஞ்சேர் கோயிலே |
2.081. 7 |
நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே, நீண்டு சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை உடையவரே, கொடிய காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய கழனிகளை உடைய அழகிய வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால் விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய கோயில் எனக் கொண்டு அமர்ந்துள்ளீர்.
2353 | இரைமண்டிச்
சங்கேறுங் விரைமண்டு முடிநெரிய கரைமண்டிப் பேரோதங் விரைமண்டு வேணுபுர |
2.081. 8 |
சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு கரைகளில் ஏறி இளைப்பாறும் கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள இலங்கையர் மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே, நீர் ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய மணம் மிக்க வேணுபுரத்தையே நுமக்குரிய பதியாகக் கொண்டு அமர்ந்து பெருமையால் சிறந்து விளங்குகின்றீர்.
2354 | தீயோம்பு
மறைவாணர்க் போயோங்கி யிழிந்தாரும் பாயோங்கு மரக்கலங்கள் சேயோங்கு வேணுபுரஞ் |
2.081. 9 |
முத்தீயோம்பும் அந்தணர்கட்கு முதல்வனாகிய பிரமன், திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் காணுதற்கு அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!, நீர், அலைகளால் மோதப் பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு வளர்ந்த மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே நுமக்குரிய வளமையான பதியாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2355 | நிலையார்ந்த
வுண்டியினர் புனலயானா ரறவுரையைப் நிலையாகப் பேணீநீ விலையாக வாட்கொண்டு |
2.081. 10 |
பெருமானே! நீர், நின்றுண்ணும் இயல்பினராய இழிந்த சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட் படுத்தாது உம் பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும் விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக விரும்பியுள்ளீர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.081.திருவேணுபுரம் , பதியாகக், நீர், உடையவரே, வேணுபுரம், கொண்டு, அழகிய, நுமக்குரிய, வேணுபுரத்தைப், கொண்டுள்ளீர், கொண்டீரே, திருவேணுபுரம், மிக்க, கொண்ட, கொண்டவரே, திருமுறை, மணம், மலர், கோயிலே, விளங்குகின்றீர், வேணுபுரத்தையே, சாக்கியர்கள், வேணுபுரத்தில், கோயில், எனக், நீண்டு, அமர்ந்துள்ளீர், விரைமண்டு, கோலஞ்சேர், கடலை, அருள், கொன்றை, வந்து, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், இரண்டாம், தேவாரப், பாடி, திருவடிகளை, அந்தணர்கள், பாலையாழ், கங்கையணிந்த, உமையம்மையை, சுடுகாட்டில், கழனிகளை