இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.079.திருவாரூர்
2.079.திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2324 | பவனமாய்ச்
சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079. 1 |
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தேய்த்துப்பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2325 | தந்தையார்
போயினார் தாயாரும் போயினார் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079.2 |
ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக் கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!
2326 | நிணங்குடர்
தோனரம் பென்புசே ராக்கைதா குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் வணங்குவார் வானவர் தானவர் வைகலு அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079.3 |
நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2327 | நீதியால்
வாழ்கிலை நாள்செலா நின்றன வாதியா வாதலா னாளுநா ளின்பமே சாதியார் கின்னரர் தருமனும் வருணர்க ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079. 4 |
நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்ன. தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2328 | பிறவியால்
வருவன கேடுள வாதலாற் துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் மறவனீ மார்க் மே நண்ணினாய் தீர்த்தநீர் அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079. 5 |
நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2329 | செடி
கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த் கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079. 6 |
முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2330 | ஏறுமால்
யானையே சிவிகையந் தளகமீச் மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079.7 |
நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தற்காலிகமாகப் பெறும் துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக் கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2331 | என்பினாற்
கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் அன்பனா ரூர்தொழ துய்யலா மையல்கொண் |
2.079. 8 |
நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2332 | தந்தைதாய்
தன்னுடன் றோன்றினார் புத்திரர் பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் வெந்தநீ றாடியா ராதியார் சோதியார் எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079. 9 |
நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத் தௌந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2333 | நெடியமால்
பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் |
2.079.10 |
நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்னவடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்றுவரை தேடிக் காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம் போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
2334 | பல்லிதழ்
மாதவி யல்லிவண் டியாழ்செயுங் நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை சொல்லவே வல்லவர் நீதிலா ரோதநீர் |
2.079.11 |
பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லிவருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.079.திருவாரூர் , கொண்டு, மையல்கொண், டஞ்ச, னெஞ்சே, நெஞ்சே, துய்யலா, அஞ்சாதே, உய்யலாம், ரூர்தொழு, ஆரூர், தொழுதால், மையல், னாயே, முக்கண், ஆகிய, இறைவனைத், கொண்ட, நோய்கள், திருமுறை, திருவாரூர், மனம், பெரிய, வாயில், யேத்து, அகப்பட்ட, அடிகளா, இறைவனை, அடிகளைத், மாதவி, புத்திரர், உய்தி, நல்லவே, முடியினரும், கமழும், அழகிய, மணம், வானவர், சென்று, போயினார், தாமும், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், இரண்டாம், தேவாரப், தந்தை, கல்லது, கருதி, போற்றும், துன்பம், நாள்தோறும், குணங்கள், நின்றன, பிறவியால்