இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.059.சீகாழி
2.059.சீகாழி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2102 | நலங்கொண்
முத்து மணியும் அணியுந் கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் வலங்கொண் மழுவொன் றுடையாய் விடையா அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா |
2.059. 1 |
அழகிய முத்துக்கள், மணிகள் அணிகலன்கள் ஆகியவற்றை நீர்ப் பெருக்குடைய கடலின் மரக்கலங்கள் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் ஆரவாரமுடைய காழிப்பதியில் வெற்றிவிளைக்கும் மழு ஒன்றை ஏந்தியவனே! விடையூர்தியனே! என ஏத்தி மலர்மாலை முதலியன சூட்டி வழிபட வல்லாரைத் தீர்தற்கரிய நோய்கள் அடையா.
2103 | ஊரா
ருவரிச் சங்கம் வங்கங் காரா ரோதங் கரைமே லுயர்த்துங் நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே. |
2.059.2 |
ஊர்தலை உடைய கடற் சங்குகளை மரக்கலங்கள் கடல் ஓதநீர் வழியே கொண்டு வந்து கரையில் சேர்க்கும் கலிக்காழியில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையனே! நெற்றிக்கண்ணா! என்று பல முறையும் அவனது பேர் ஆயிரமும் பிதற்றப் பிணிகள் தீரும்.
2104 | வடிகொள்
பொழிலின் மழலை வரிவண் கடிகொள் போதிற் றென்ற லணையுங் முடிகொள் சடையாய் முதல்வா வென்று அடிகை தொழுவார்க் கில்லை யல்ல |
2.059. 3 |
திருத்தமான சோலைகளில் மழலையாய் வரி வண்டுகள் இசை பாட மணம் கமழும் மலர்களில் படிந்து தென்றல் 122 வீதிகளை அடைந்து மணம் பரப்பி இதம் செய்யும் கலிக்காழியில் எழுந்தருளிய முடிகொள் சடையாய்! முதல்வா என்று தவம் முயன்று ஏத்தி அவன் அடிகளைத் தொழுவார்க்கு அல்லல் அவலம் ஆகியன இல்லை.
2105 | மனைக்கே
யேற வளஞ்செய் பவளம் கனைக்குங் கடலு ளோத மேறுங் பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியா நினைக்க வல்ல வடியார் நெஞ்சி |
2.059. 4 |
ஆரவாரிக்கும் கடலின் ஓதம் பவளங்களையும் முத்துக்களையும் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்து வளம் செய்யும் கலிக் காழிப்பதியுள் எழுந்தருளிய, பனை போன்ற கையை உடைய யானையை ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே! பெரியாய் என விரும்பிப் பேணி நினைக்க வல்ல நெஞ்சினை உடையார் நன்னெஞ்சுடையார் ஆவர்.
2106 | பரிதி
யியங்கும் பாரிற் சீரார் கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் சுருதி மறைநான் கான செம்மை கருதி யெழுமின் வழுவா வண்ணந் |
2.059. 5 |
கதிரவன் உலாவரும் உலகின்கண், சிறப்புமிக்க தொண்டுகளோடு சுருதிகளை அறிந்த விண்ணோரும் மண்ணோரும் விரும்பி வழிபடும் கலிக்காழியுள் மேவிய செவிவழியாகக் கேட்டு ஓதப்பெறும் நான்கு வேதங்களான செம்மையைத் தருபவனை நினைந்து, அவனை வழிபட, எழுந்தால் தவறாது உங்கள் துன்பங்கள் தீரும்.
2107 | மந்த
மருவும் பொழிலி லெழிலார் கந்த மருவ வரிவண் டிசைசெய் பந்த நீங்க வருளும் பரனே சிந்தை செய்வார் செம்மை நீங்கா |
2.059. 6 |
தென்றல் தவழும் பொழிலின்கண் எழுச்சியோடு தேனை உண்டு மணம் பொருந்தியனவாய் வரி வண்டுகள் இசை செய்யும் கலிக்காழியில் விளங்கும், பந்தங்கள் நீங்க அருளும் பரனே! என ஏத்தி அவனைச் சிந்தையில் நினைவார், செம்மை நீங்காதிருப்பர்.
2108 | புயலார்
பூமி நாம மோதிப் கயலார் கண்ணார் பண்ணா ரொலிசெய் பயில்வான் றன்னைப் பத்தி யாரத் முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற |
2.059. 7 |
மேகங்களால் வளம் பெறும் மண்ணுலகில் வாழும் கயல் போலும் விழிகளை உடைய பெண்கள் இறைவன் திருப்பெயர்களைப் புகழ் பொருந்த இசையோடு ஓதி ஒலி செய்யும் கலிக்காழியுள் விளங்கும் அப்பெருமானை அன்பு மேலிடத் தொழுது ஏத்த முயல்வார் மேல் கொடிய கூற்றுவன் வந்தடையான்.
2109 | அரக்கன்
முடிதோள் நெரிய வடர்த்தா கரக்க கில்லா தருள்செய் பெருமான் பரக்கும் புகழான் றன்னை யேத்திப் பெருக்கு மின்பந் துன்பமான |
2.059. 8 |
இராவணனின் முடி, தோள் ஆகியன நெரிய அடர்த்தருளிய, தன் அடியவர்கட்கு மறைக்காமல் அருளைச் செய்யும் பெருமான் எழுந்தருளிய கலிக்காழியை அடைந்து உலகம் முழுதும் பரவிய அப்புகழாளனை ஏத்திப் பணிவார்க்கு இன்பங்கள் பெருகும், துன்பந்தரும் பிணிகள் போம்.
2110 | மாணா
யுலகங் கொண்ட மாலு காணா வண்ண மெரியாய் நிமிர்ந்தான் பூணார் முலையாள் பங்கத்தானைப் கோணா நெஞ்ச முடையார்க் கில்லைக் |
2.059. 9 |
பிரமசாரி வடிவினனாகி உலகை அளந்து கொண்ட திருமாலும் நான்முகனும் காணா வண்ணம் எரியுருவாய் நிமிர்ந்தான் உறையும் கலிக்காழியை அடைந்து அணிகலன்பூண்ட தனங்களைக் கொண்ட அம்பிகை பாகனைப் புகழ்ந்து போற்றித் திருகல் இல்லாத மனமுடைய அடியவர்க்குக் குற்றம் இல்லை.
2111 | அஞ்சி
யல்லல் மொழிந்து திரிவா கஞ்சி காலை யுண்பார்க் கரியான் தஞ்ச மாய தலைவன் றன்னை துஞ்ச லில்லா நல்ல வுலகம் |
2.059. 10 |
அச்சத்துடன் துன்பம் தரும் பேச்சுக்களை மொழிந்து திரியும் சமணர்களாகிய அறிவிலிகளுக்கும் காலையில் கஞ்சியையுண்டு திரியும் தேரர்களுக்கும் அறிதற்கு அரியவன் உறையும் கலிக்காழியை அடைந்து தஞ்சமாக அடைதற்குரிய அத்தலைவனை நினைபவர்கள் இறப்பும் பிறப்பும் வாராத பேரின்ப உலகம் பெறுவர்.
2112 | ஊழி
யாயபாரி லோங்கு காழி யீசன் கழலே பேணுஞ் றாழு மனத்தா லுரைத்த தமிழ்க வாழி நீங்கா வானோ ருலகின் |
2.059. 11 |
உலக முடிவில் அழிவதான இம்மண்ணுலகில் அழியாது மிதந்த உயர் செல்வம் உடைய காழியில் எழுந்தருளிய ஈசனின் திருவடிகளைப் பேணும் ஞானசம்பந்தன் பணிவான உள்ளத்தோடு உரைத்த தமிழ் மாலையாகிய இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான வாழ்வுடைய வானோர் உலகில் மகிழ்ந்துறைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.059.சீகாழி , எழுந்தருளிய, கலிக்காழிப், செய்யும், கொண்டு, உடைய, அடைந்து, கலிக்காழியில், சடையாய், திருமுறை, செம்மை, ஏத்தி, மணம், தீரும், கலிக்காழி, சீகாழி, கலிக்காழியை, வந்து, கொண்ட, திரியும், நிமிர்ந்தான், கலிக்காழியுள், உறையும், நீங்க, பரனே, மொழிந்து, விளங்கும், கருதி, உலகம், றன்னை, காணா, பெருமான், முயல்வார், நெரிய, நீங்கா, தென்றல், மரக்கலங்கள், கரையில், சேர்க்கும், கடலின், திருச்சிற்றம்பலம், இரண்டாம், தேவாரப், பதிகங்கள், வழிபட, பிணிகள், இல்லை, நினைக்க, வல்ல, ஆகியன, வண்டுகள், வரிவண், முடிகொள், முதல்வா, வளம்