இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.056.திருவிடைமருதூர்
2.056.திருவிடைமருதூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
2070 | பொங்குநூன்
மார்பினீர் தங்குசெஞ் சடையினீர் எங்குமெழிலார் மறையோர்கண் மங்குல்தோய் கோயிலே |
2.056.1 |
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம்கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.
2071 | நீரார்ந்த
செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர் போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர் ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீ ரிடைமருதில் சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. |
2.056. 2 |
கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க் கருவி யாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.
2072 | அழன்மல்கு
மங்கையில் சுழன்மல்கு மாடலீர் எழின்மல்கு நான்மறையோர் பொழில்மல்கு கோயிலே |
2.056. 3 |
நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்.
2073 | பொல்லாப்
படுதலையொன் வில்லாற் புரமூன்றும் எல்லாக் கணங்களும் செல்வாய கோயிலே |
2.056.4 |
பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2074 | வருந்திய
மாதவத்தோர் பொருந்திய தைப்பூச திருந்திய நான்மறையோர் பொருந்திய கோயிலே |
2.056. 5 |
பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித் தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2075 | சலமல்கு
செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர் வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர் இலமல்கு நான்மறையோ ரினிதாவேத்த விடைமருதில் புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே. |
2.056. 6 |
பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி, பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2076 | புனமல்கு
கொன்றையீர் புலியினதளீர் பொலிவார்ந்த சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர் இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில் கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. |
2.056. 7 |
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள் விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2077 | சிலையுய்த்த
வெங்கணையாற் தலைபத்துந் திண்டோளு இலைமொய்த்த தண்பொழிலும் நலமொய்த்த கோயிலே |
2.056. 8 |
மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2078 | மறைமல்கு
நான்முகனு கறைமல்கு கண்டத்தீர் அறைமல்கு வண்டினங்க நிறைமல்கு கோயிலே |
2.056. 9 |
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2079 | சின்போர்வைச்
சாக்கியரும் துன்பாய கட்டுரைகள் இன்பாய வந்தணர்க அன்பாய கோயிதேல |
2.056. 10 |
பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2080 | கல்லின்
மணிமாடக் நல்ல அருமறையான் எல்லி யிடைமருதில் சொல்லு வார்க்குங் |
2.056.11 |
கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.056.திருவிடைமருதூர் , அழகிய, கோயிலே, இடைமருதில், நீர், இருப்பிடமாகக், கோயிலை, கொண்டுள்ளீர், உடையவரே, விடைமருதில், பொருந்திய, உள்ள, முறையால், நான்மறையோர், கோயிலாக, கோயிலாகக், பெருமானே, திருவிடைமருதூர், சூழ்ந்த, கண்டத்தீர், திருமுறை, கோயிலையே, கங்கை, முறையாலேத்த, கொண்டு, கோயிலாகப், ஆடுபவரே, வந்து, இரண்டாம், தைப்பூச, ளிடைமருதில், அந்தணர்கள், நான்மறையோ, ஏத்தும், கட்டுரைகள், கழுமலத்தார், நற்றமிழ், ஞானசம்பந்தன், சமணரும், சாக்கியரும், நுமது, யிடைமருதில், நும், மாதவத்தோர், பதிகங்கள், ஒன்றை, பூதங்கள், அணிந்த, வெண்மழு, சேர்ந்தீரே, செஞ்சடையீர், வெண்மழுவொன், கோயிலாகச், கொண்டவரே, திருச்சிற்றம்பலம், முப்புரங்களை, எரித்தவரே, போற்ற, செஞ்சடையை, சோலைகள், பொலிந்தீரே, நிறைந்த, தேவாரப்