இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.048.திருவெண்காடு
2.048.திருவெண்காடு
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
1982 | கண்காட்டு
நுதலானுங் பெண்காட்டு முருவானும் பண்காட்டு மிசையானும் வெண்காட்டி லுறைவானும் |
2.048.1 |
வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்; கையில் கனல் ஏந்தியவன்; உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன் பிறையணிந்த சடைமுடியினன்; பண்ணில் இறைவடிவானவன்; பயிரை வளர்க்கும் மேகமானவன்; விடைஏந்திய கொடியை உடையவன்.
1983 | பேயடையா
பிரிவெய்தும் வாயினவே வரம்பெறுவ வேயனதோ ளுமைபங்கன் தோய்வினையா ரவர்தம்மைத் |
2.048.2 |
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.
1984 | மண்ணொடுநீ
ரனல்காலோ எண்ணில்வரு மியமான பெண்ணினொடாண் பெருமையொடு விண்ணவர்கோன் வழிபடவெண் |
2.048.3 |
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை, எண்திசை, பெண், ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாகக்கி கொண்டு எழுந்தருளியுள்ளான்.
1985 | விடமுண்ட
மிடற்றண்ணல் மடல்விண்ட முடத்தாழை தடமண்டு துறைக்கெண்டை கடல்விண்ட கதிர்முத்தம் |
2.048. 4 |
நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.
1986 | வேலைமலி
தண்கானல் மாலைமலி வண்சாந்தால் மேலடர்வெங் காலனுயிர் ஆலமிடற் றானடியா |
2.048. 5 |
கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.
1987 | தண்மதியும்
வெய்யரவுந் ஒண்மதிய நுதலுமையோர் பண்மொழியால் அவன்நாமம் வெண்முகில்சேர் கரும்பெணைமேல் |
2.048. 6 |
தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக் கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.
1988 | சக்கரமாற்
கீந்தானுஞ் அக்கரைமே லசைத்தானும் மிக்கதனுக் கருள்சுரக்கும் முக்குளநன் குடையானு |
2.048. 7 |
திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.
1989 | பண்மொய்த்த
வின்மொழியாள் உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் விண்மொய்த்த பொழில்வரிவண் |
2.048. 8 |
பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.
1990 | கள்ளார்செங்
கமலத்தான் ஒள்ளாண்மை கொளற்கோடி வெள்ளானை தவஞ்செய்யு றுள்ளாடி யுருகாதா |
2.048. 9 |
தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ் செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.
1991 | போதியர்கள்
பிண்டியர்கள் பேதையர்க ளவர்பிறிமின் வேதியர்கள் விரும்பியசீர் றோதியவர் யாதுமொரு |
2.048.10 |
போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோக மரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரை களைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.
1992 | தண்பொழில்சூழ்
சண்பையர்கோன் விண்பொலிவெண் பிறைச்சென்னி பண்பொலிசெந் தமிழ்மாலை மண்பொலிய வாழ்ந்தவர்போய் |
2.048. 11 |
குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறை மதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.048.திருவெண்காடு , சிவபிரான், உறையும், எழுந்தருளிய, பொருந்திய, திருவெண்காட்டில், உடைய, திருமுறை, திருவெண்காடு, மண்பொலிய, அடியவர், னுறைகோயில், கோயில், வெண்காடே, வீற்றிருக்கும், பண்ணிசை, சிறந்த, செய்யும், வேதியர்கள், காட்டானென், வெள்ளானை, தவம், இறைவன், இனிய, எழுந்தருளியுள்ளான், உமையம்மையை, கொண்ட, வெண்காட்டு, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், இரண்டாம், தேவாரப், அடைந்து, ஆகிய, நிழலைக், அடியில், கொண்டு, தனது, ஆகியனவாகவும், விளங்கும், குளிர்ந்த