இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.046.திருநாலூர்த்திருமயானம்
2.046.திருநாலூர்த்திருமயானம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1960 | பாலூரு
மலைப்பாம்பும் மேலூருஞ் செஞ்சடையான் நாலூர் மயானத்து மாலூருஞ் சிந்தையர்பால் |
2.046. 1 |
பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.
1961 | சூடும்
பிறைச்சென்னிச் ஆடும் பறைசங் நாடுஞ் சிறப்போவா பாடுஞ் சிறப்போர்பாற் |
2.046. 2 |
பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா.
1962 | கல்லா
னிழன்மேவிக் றெல்லா வறனுரையும் நல்லார் தொழுதேத்தும் சொல்லா தவரெல்லாஞ் |
2.046.3 |
கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.
1963 | கோலத்தார்
கொன்றையான் நீலத்தார் கண்டத்தான் ஞாலத்தார் சென்றேத்தும் சூலத்தா னென்பார்பாற் |
2.046. 4 |
அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர் மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா.
1964 | கறையார்
மணிமிடற்றான் பிறையார் வளர்சடையான் நறையார் பொழில்புடைசூழ் இறையானென் றேத்துவார்க் |
2.046. 5 |
விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும்.
1965 | கண்ணார்
நுதலான் பண்ணார் மறைபாடி நண்ணார் புரமெய்தான் நண்ணா தவரெல்லாம் |
2.046. 6 |
கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார்.
1966 | கண்பாவு
வேகத்தாற் பெண்பாவு பாகத்தான் நண்பார் குணத்தோர்கள் எண்பாவு சிந்தையார்க் |
2.046. 7 |
நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத் தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறை வதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.
1967 | பத்துத்
தலையோனைப் வைத்து மலையடர்த்து நத்தி னொலியோவா அத்த னடிநினைவார்க் |
2.046. 8 |
பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா.
1968 | மாலோடு
நான்முகனும் நேட வளரெரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள் நாலோடு மாறங்கம் பாலோடு நெய்யாடி |
2.046. 9 |
திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம்.
1969 | துன்பாய
மாசார் புன்பேச்சுக் கேளாதே நண்பாற் சிவாயவெனா இன்பா யிருந்தானை |
2.046. 10 |
துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு சிவாய என்னும் மந்திரத்தைக் கூறிக்கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்பவடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.
1970 | ஞாலம்
புகழ்காழி நாலு மறையோதும் சீலம் புகழாற் கேலும் புகழ்வானத் |
2.046. 11 |
உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞான சம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.046.திருநாலூர்த்திருமயானம் , நாலூர், மயானத்தில், மயானத்து, ஆடும், விளங்கும், இறைவன், திருமுறை, பொருந்திய, ஆகிய, இன்பம், திருநாலூர்த்திருமயானம், சிவபெருமான், மயானத்தை, நான்முகனும், கீழ், மயானத்தெம், அவனை, புகழ், பிறை, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், இரண்டாம், மார்பினனும், திருவடிகளை, இன்னருளால், எழுந்தருளிய, மயானத்தைப், மயானத்தைச்