இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.040.திருப்பிரமபுரம்
2.040.திருப்பிரமபுரம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1895 | எம்பிரா
னெனக்கமுதம் தம்பிரா னாவானுந் கம்பமா கரியுரித்த வம்புலாம் பொழிற்பிரம |
2.040. 1 |
எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான், அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி, இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும் வானவனே யாவான்.
1896 | தாமென்றும்
மனந்தளராத் காமென்று சரண்புகுந்தார் ஓமென்று மறைபயில்வார் காமன்றன் னுடலெரியக் |
2.040. 2 |
உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம் எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற காமனின் உடலை எரியச் செய்த கண்ணுதலோனே யாவான்.
1897 | நன்னெஞ்சே
யுனையிரந்தேன் உன்னஞ்செய் திருகண்டாய் அன்னஞ்சேர் பிரமபுரத் பன்னஞ்சீர் வாயதுவே |
2.040. 3 |
நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே பார்.
1898 | சாநாளின்
றிம்மனமே கோனாளுந் திருவடிக்கே தேனாளும் பொழிற்பிரம நாநாளு நன்னியமஞ் |
2.040. 4 |
மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவி வருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக.
1899 | கண்ணுதலான்
வெண்ணீற்றான் பெண்ணிதமா முருவத்தான் விண்ணுதலாத் தோன்றியசீர்ப் எண்ணுதலாஞ் செல்வத்தை |
2.040.5 |
நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர் பல உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம்.
1900 | எங்கேனும்
யாதாகிப் கிங்கேயென் றருள்புரியும் கொங்கேயு மலர்ச்சோலைக் சங்கேயொத் தொளிர்மேனிச் |
2.040. 6 |
தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும்.
1901 |
சிலையதுவெஞ் சிலையாகத் இலைநுனைவேற் றடக்கையன் அலைபுனல்சூழ் பிரமபுரத் நிலையுடைய பெருஞ்செல்வம் |
2.040. 7 |
மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல் வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால் வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம்.
1902 | எரித்தமயிர்
வாளரக்கன் நெரித்தருளுஞ் சிவமூர்த்தி உரித்தவரித் தோலுடையான் தரித்தமன மெப்போதும் |
2.040.8 |
எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன் தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.
1903 | கரியானும்
நான்முகனுங் அரியானாம் பரமேட்டி றெரியாதா னிருந்துறையுந் உரியார்தா மேழுலகும் |
2.040. 9 |
திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவர்.
1904 | உடையிலார்
சீவரத்தார் முடையிலார் வெண்டலைக்கை பெடையிலார் வண்டாடும் சடையிலார் வெண்பிறையான் |
2.040. 10 |
உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப் பெயர் பெறுவர்.
1905 | தன்னடைந்தார்க்
கின்பங்கள் கன்னடைந்த மதிற்பிரம முன்னடைந்தான் சம்பந்தன் பொன்னடைந்தார் போகங்கள் |
2.040. 11 |
தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.040.திருப்பிரமபுரம் , ஆகிய, விளங்கும், திருமுறை, பிரமபுரத், பிரமபுரத்தில், சிவபிரான், அவன், ஏந்திய, பிரமபுரத்துள், சூழ்ந்த, நல்ல, பொழிற்பிரம, திருப்பிரமபுரம், உடைய, தேவாரப், பொருந்திய, பெருஞ்செல்வம், புரத்துறையுஞ், இரண்டாம், போகங்கள், அடைந்த, பெருமானின், பெறுவர், நீறணிந்த, தக்காரே, பதிகங்கள், தேன், தன்னை, உலகில், யாவான், யானையை, மணம், எக்காலத்தும், பயிலும், கொண்டு, பொழில், அரிய, திருச்சிற்றம்பலம், வானவனே, விடையேறி