இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.022.திருக்குடவாயில்
2.022.திருக்குடவாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1699 | திகழுந்
திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவாயின் மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 1 |
குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான்.
1700 | ஓடுந்
நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் குழகன் குடவா யில்தனில் நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 2 |
குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறைமதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன்.
1701 | கலையான்
மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022.3 |
குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன்.
1702 | சுலவுஞ்
சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடம் குலவுங் குழகன் குடவா யில்தனில் நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 4 |
குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன்.
1703 | என்றன்
உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவா யில்தனில் நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 5 |
குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன்.
1704 | அலைசேர்
புனலன் அனலன் அமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிரும் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 6 |
குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன்.
1705 | அறையார்
கழலன் அழலன் இயலின் பறையாழ் முழவும் மறைபா டநடம் குறையா அழகன் குடவா யில்தனில் நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. |
2.022. 7 |
குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங் கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன்.
1706 | வரையார்
திரள்தோள் அரக்கன் மடியவ் வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. |
2.022. 8 |
மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான்.
1707 | பொன்னொப்
பவனும் புயலொப் பவனும் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவா யில்தனில் மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. |
2.022. 9 |
குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன்.
1708 | வெயிலின்
நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பால் குயிலன் குழகன் குடவா யில்தனில் உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. |
2.022. 10 |
குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன்.
1709 | கடுவாய்
மலிநீர் குடவா யில்தனில் நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத் தடமார் புகலித் தமிழார் விரகன் வடவார் தமிழ்வல் லவர்நல் லவரே. |
2.022. 11 |
வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குடவாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை, நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியின னாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.022.திருக்குடவாயில் , பெருங்கோ, பெருங்கோயிலில், குடவா, விளங்கும், பெருமான், யில்தனில், குடவாயிலில், யில்நிலா, யவனே, எழுந்தருளிய, குழகன், ஏந்தியவன், உடைய, இறைவன், உடையவன், வரையார், திருமுறை, ஆவான், தவனே, திருக்குடவாயில், குடவாயில், அமைந்த, அழகன், கூடிய, கயிலைமலை, மீண்டும், பவனும், மகிழ்ந்துறையும், மகிழும், யில்மகிழ்ந், தபிரான், என்னும், பதிகங்கள், தலத்தில், திருமால், திருச்சிற்றம்பலம், நிலையார், தேவாரப், இரண்டாம், நிலவும், அணிந்தவன்