இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.110.திருமாந்துறை
2.110.திருமாந்துறை
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராவணேசுவரர்.
தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை.
2659 |
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை அம்பொன் நேர்வரு காவிரி வடகரை எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் |
2.110. 1 |
வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்.
2660 |
விளவு தேனொடு சாதியின் பலங்களும் அளவி நீர்வரு காவிரி வடகரை துளவ மான்மக னைங்கணைக் காமனைச் அளக வாணுதல் அரிவைதன் பங்கனை |
2.110. 2 |
விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில், மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை, அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம்.
2661 |
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் ஓடு நீர்வரு காவிரி வடகரை வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் கேடி லாமணி யைத்தொழல் அல்லது |
2.110. 3 |
தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந்துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம்.
2662 |
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை கலவி நீர்வரு காவிரி வடகரை அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் மலையை வானவர் கொழுந்தினை அல்லது |
2.110. 4 |
இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம்.
2663 |
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி ஓங்கி நீர்வரு காவிரி வடகரை பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் |
2.110. 5 |
கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர்.
2664 |
பெருகு சந்தனங் காரகில் பீலியும் பொருது காவிரி வடகரை மாந்துறைப் பரிவி னாலிருந் திரவியும் மதியமும் மருத வானவர் வழிபடு மலரடி |
2.110. 6 |
சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள், மருத்துக்கள் அன்போடு வழிபடும் திருவடிகளை வணங்குவோம்.
2665 |
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் இறவில் வந்தெறி காவிரி வடகரை கறவ னாகிய கூற்றினைச் சாடிய நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் |
2.110.7 |
மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந்தவனும், மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம்.
2666 |
மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட உந்தி நீர்வரு காவிரி வடகரை நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை சிந்தி யாமனத் தாரவர் சேர்வது |
2.110.8 |
மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை, நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர்.
2667 |
நீலமாமணி நித்திலத் தொத்தொடு ஆலி யாவரு காவிரி வடகரை மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் |
2.110.9 |
நீல மணிகளையும், முத்துக்களையும், மலர்களையும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள். நம்மைக் கூற்றுவன் நலியான்.
2668 |
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நன்று மாங்கனி கதலியின் பலங்களு ஒன்றி நேர்வரு காவிரி வடகரை அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது |
2.110. 10 |
சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர். நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக்கனி, நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது.
2669 |
வரைவ ளங்கவர் காவிரி வடகரை சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் |
2.110. 11 |
மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்தனாய், சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத்தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.110.திருமாந்துறை , காவிரி, வடகரை, மாந்துறை, மாந்துறையில், முதலிய, நீர்வரு, வடகரையில், அடித்துவரும், திருமாந்துறை, உள்ள, இறைவனை, மலர், வரும், திருமுறை, மரங்களை, வானவர், மாங்கனி, மாந்துறைப், கோங்கு, வணங்குதல், ஆகிய, மலரடி, திருவடிகளைப், கூற்றுவன், தேரரும், நாணலின், எழுந்தருளிய, தீநெறி, மல்லிகை, தேன், மந்திகள், வழிபடும், அறியோம், சுரபுன்னை, பதிகங்கள், திருவடிகளை, மலர்களையும், செய்வோமே, மாதவி, திருச்சிற்றம்பலம், நிரந்துந்தி, தேவாரப், அன்றி, நேர்வரு, அல்லது, விளங்கும், முத்துக்களையும், இரண்டாம், மரங்களின், அறியோமே