இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.102.திருச்சிரபுரம்
2.102.திருச்சிரபுரம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2572 | அன்ன
மென்னடை யரிவையோ டினிதுறை மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் பொன்னின் மாமல ரடிதொழு மடியவர் |
2.102. 1 |
அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும், ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும். வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளியிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடிகளைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார்.
2573 |
கோல மாகரி யுரித்தவ ராவொடு சாலப் பூண்டுதண் மதியது சூடிய போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் |
2.102. 2 |
அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு, பன்றிப்பல், இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண்மதி சூடிய சங்கரனாரும், தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும், பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும்.
2574 |
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் கானத் தேதிரி வேடனா யமர்செயக் தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை |
2.102. 3 |
பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும், வண்டுகள் பூந்தேனைத் தேர்ந்து திரியும் மலர்மனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடுவினைக்குற்றங்கள் குறுகா.
2575 |
மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க் |
2.102. 4 |
மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும், தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள் புரிபவரும், சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப்பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா.
2576 |
பாரு நீரொடு பல்கதி ரிரவியும் ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு |
2.102. 5 |
மண், நீர், பல கதிர்களை உடைய இரவி, தண்மதி, ஆகாயம், வாயு, ஒளிபொருந்திய கனல் வேள்வித் தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய, ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார்.
2577 | ஊழி
யந்தத்தி லொலிகட லோட்டந்திவ் ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ |
2.102. 6 |
ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து அருட்கடலே! எந்தையே என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணிபுரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய, யாழ்போலும் மொழியினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழுதெழ வல்வினைகள் அடையா.
2578 | பேய்கள்
பாடப்பல் பூதங்கள் துதிசெயப் வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட சாய்க டான்மிக வுடையதண் மறையவர் தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் |
2.102. 7 |
பேய்கள் பாடவும், பலபூதங்கள் துதிக்கவும், பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில், மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும், பல்வகை உயிர்கட்கும் அவ்வற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார்.
2579 |
இலங்கு பூண்வரை மார்புடை யிராவண கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன் குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு |
2.102. 8 |
விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலைபோலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை மலையை நிலைகுலையச் செய்து பெயர்த்தபோது அதனைக் கண்டு தம் திருவடிவிரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல்களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றினிடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா.
2580 |
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க் பண்டு கண்டது காணவே நீண்டவெம் கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ |
2.102. 9 |
வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும், பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா.
2581 |
பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும் செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின் வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை |
2.102. 10 |
மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும், உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும், அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய, எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங்களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப்பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும்.
2582 | பரசு பாணியைப்
பத்தர்க ளத்தனைப் நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் |
2.102.11 |
மழுவேந்திய கையனை, பக்தர்கள் தலைவனை, படப்பாம்பு, என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை, முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை, மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை, தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.102.திருச்சிரபுரம் , ஆகிய, உடைய, விளங்கும், சிரபுரத், செய்து, வினைகள், சூழ்ந்த, சிரபுரந், சிரபுரத்தில், அழகிய, திருமுறை, மறையவர், சிரபுரம், தொழுதெழ, கண்டு, வண்டுகள், திருச்சிரபுரம், பெருமானார், பதிகங்கள், தேவாரப், ஓடிவந்து, சரண்புக, எழுந்தருளிய, அடையா, தண்புனல், புரந்தொழு, பேய்கள், சிரபுரத்தைத், சுடுகாட்டில், தேவர், நிமலனை, பெருமானைப், வல்லவர், அணிந்த, சமணரும், இரண்டாம், மார்புடை, கிளறியும், பறித்த, யடையாவே, காலனை, போலத், வினையொடும், தொழவினை, பெரிய, சூடிய, மலர், உறையும், இனிதாக, உமையம்மையோடு, தண்மதி, தோன்றிய, அவன், திருச்சிற்றம்பலம், குறுகா, தலைவரும், அவனை, டினிதுறை, சிரபுரத்து, மடியவர், குறுகாவே, வெண்பிறை