முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.008.திருஆவூர்ப்பசுபதீச்சரம்
1.008.திருஆவூர்ப்பசுபதீச்சரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
76 |
புண்ணியர் பூதியர் பூதநாதர் கண்ணிய ரென்றென்று காதலாளர் விண்ணுயர் மாளிகை மாடவீதி பண்ணியல் பாடல றாதவாவூர்ப் |
1.008.1 |
அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும், மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்றதும், எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, நாவே தொழுது பாடுவாயாக.
77 |
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் அத்திய ரென்றென் றடியரேத்தும் தொத்திய லும்பொழில் மாடுவண்டு பத்திமைப் பாடல றாதவாவூர்ப் |
1.008.2 |
அடியவர்கள், முத்திச் செல்வத்தை உடையவர் என்றும், மூப்புஇலர் என்றும், மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும், முக்கண்ணர் என்றும், தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும், போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும், கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.
78 |
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் தெங்குயர் சோலைசே ராலைசாலி பங்கய மங்கை விரும்புமாவூர்ப் |
1.008.3 |
சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும், பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வானவரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர், உயரமாக, வளர்ந்த தென்னஞ் சோலைகளும், கரும்பாலைகளும், செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவுதரும் வயல்களை உடையதும், பொய்கைகள் சூழ்ந்ததும், திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற ஆவூர்ப்பசுபதீயீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
79 |
தேவியொர் கூறின ரேறதேறுஞ் ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் பூவிய லும்பொழில் வாசம்வீசப் பாவியல் பாடல றாதவாவூர்ப் |
1.008.4 |
உமாதேவியை ஒரு பாதியாக உடையவர், இடபவாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர், என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர், பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதி யீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.
80 |
இந்தணை யுஞ்சடை யார்விடையார் வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் கொந்தணை யுங்குழ லார்விழவிற் பந்தணையும் விர லார்தமாவூர்ப் |
1.008.5 |
திங்கள் தங்கும் சடையினரும், விடையை ஊர்தியாக உடையவரும், என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும், தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான், நிலைபெற்று விளங்கும் ஊர், பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும், திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.
81 |
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் சுற்றிய வாசலின் மாதர்விழாச் பற்றிய கையினர் வாழுமாவூர்ப் |
1.008.6 |
அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும், நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும், தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும், ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், பிறர்க்கில்லாத நெற்றிக் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக் காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவி பாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க, அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக.
82 |
நீறுடை யார்நெடு மால்வணங்கு கூறுடை யாருடை கோவணத்தார் தாறுடை வாழையிற் கூழைமந்தி பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் |
1.008.7 |
திருவெண்ணீற்றை அணிந்தவரும், திருமாலால் வணங்கப் பெறுபவரும், நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும், தம்மை நினைவார் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவரும், கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான், மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர், குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத் தாற்றில் உண்ணத் தகுதியான பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
83 |
வெண்டலை மாலை விரவிப்பூண்ட வண்டமர் பூமுடி செற்றுகந்த கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் |
1.008.8 |
வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும், வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம், எங்கும் வளம் ஓங்கியதும், தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று கைகளைக் கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாத்தி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
84 |
மாலு மயனும் வணங்கிநேட சீல மறிவரி தாகிநின்ற கோல விழாவி னரங்கதேறிக் பாலென வேமொழிந் தேத்துமாவூர்ப் |
1.008.9 |
திருமாலும் பிரமனும் வணங்கித் தேட, அவர்கட்குச் சோதிப் பிழம்பாய்நீண்டு தோன்றிய, அறிதற்கு அரியராய் விளங்கும் செம்மையராகிய சிவபிரான் எழுந்தருளிய ஊர், அழகிய விழாக் காலங்களில் கொடியிடைப் பெண்கள் அரங்கின்கண் ஏறி ஆடவர்களோடு கூடிப் பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
85 |
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் |
1.008.10 |
பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப்பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.
86 |
எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கொண்டினி தாவிசை பாடியாடிக் |
1.008.11 |
எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும், அழகிய ஆவூரில் பழ அடியார்களால்போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.008.திருஆவூர்ப்பசுபதீச்சரம் , பசுபதி, யீச்சரம், பாடுநாவே, நாவே, பாடுவாயாக, ஆகிய, அதனைப், சிவபிரான், எழுந்தருளிய, என்றும், எனவும், பாடல, உடையவரும், தொழுது, தம்மை, திருமுறை, ஆவூர்ப், பசுபதியீச்சரமாகும், உடைய, ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, மகளிர், பற்றிய, அடியவர், விளங்கும், திருஆவூர்ப்பசுபதீச்சரம், றாதவாவூர்ப், இடைவிடாது, நிறைந்த, உடையவர், எங்கும், ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும், புகழ்ந்து, விழாக், காலங்களில், பெண்கள், இடம், தோன்றிய, அழகிய, பற்றியும், மாதரும், உறையும், சாக்கியர்கள், பழங்களை, பயிலுமாவூர்ப், மலர்களைச், பெறுபவரும், பாடல், பாடல்கள், லும்பொழில், விளங்குபவர், சோலைகளால், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், வண்டுகள், பாடும், கூந்தலை, இசையோடு, பாடி, உடையதும், பிறவி, அதனைத், ருந்தவூராம், மக்கள்