முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.074.திருப்புறவம்
1.074.திருப்புறவம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
798 |
நறவநிறைவண் டறைதாக்கொன்றை சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் புறவமுறைவண் பதியாமதியார் இறைவன்அறவ னிமையோரேத்த |
1.074.1 |
தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்ப நலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும் பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித் துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
799 |
உரவன்புலியி னுரிதோலாடை விரிவிவிரிபூங் கச்சாவசைத்த பொருவெங்களிறு பிளிறவுரித்துப் இரவும்பகலு மிமையோரேத்த |
1.074.2 |
மிக்க வலிமையை உடையவனும், புலியினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர் செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.
800 |
பந்தமுடைய பூதம்பாடப் கந்தமல்கு குழலிகாணக் அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் எந்தம்பெருமா னிமையோரேத்த |
1.074.3 |
எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
801 |
நினைவார்நினைய
வினியான்பனியார் கனையார்விடையொன் றுடையான்கங்கை புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் எனையாளுடையா னிமையோரேத்த |
1.074.4 |
என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
802 |
செங்கணரவு நகுவெண்டலையு தங்குசடையன் விடையனுடையன் பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் எங்கும்பரவி யிமையோரேத்த |
1.074.5 |
சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளைய வெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கி எழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.
803 |
பின்னுசடைகள் தாழக்கேழ அன்னநடையார் மனைகடோறு புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் என்னையுடையா னிமையோரேத்த |
1.074.6 |
என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப் பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.
804 |
உண்ணற்கரிய நஞ்சையுண் விண்ணிற்பொலிய வமுதமளித்த பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் எண்ணிற்சிறந்த விமையோரேத்த |
1.074.7 |
யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
805 |
விண்டானதிர வியனார்கயிலை றிண்டோளுடலு முடியுநெரியச் புண்டானொழிய வருள்செய்பெருமான் எண்டோளுடையா னிமையோரேத்த |
1.074.8 |
எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலை மலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத் தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
806 |
நெடியானீடா மரைமேலயனும் படியாமேனி யுடையான்பவள பொடியார்கோல முடையான்கடல்சூழ் இடியார்முழவா ரிமையோரேத்த |
1.074.9 |
திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல்உறையும் நான்முகனும் தேடிக் காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.
807 |
ஆலும்மயிலின் பீலியமண கோலும்மொழிக ளொழியக்குழுவுந் போலும்வடிவு முடையான்கடல்சூழ் ஏலும்வகையா லிமையோரேத்த |
1.074.10 |
ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடைய சிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
808 |
பொன்னார்மாட நீடுஞ்செல்வப் மின்னாரிடையா ளுமையாளோடு தன்னார்வஞ்செய் தமிழின்விரக பன்னாள்பாடி யாடப்பிரியார் |
1.074.11 |
அழகு பொருந்திய உயர்ந்த மாட வீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப் பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.074.திருப்புறவம் , புறவம், டிருந்தானே, என்னும், வுமையோ, உமையம்மையோடு, பதியாக, கொண்டு, வீற்றிருந்தருள்கிறான், உடைய, சீகாழியைத், பதியாகக், அழகிய, சூழப்பட்ட, னிமையோரேத்த, இமையோர், ஏத்த, இறைவன், பொருந்திய, திருப்புறவம், தனக்குரிய, வீற்றிருந்தருள்கின்றான், கடலால், நிறைந்த, விடை, திருமுறை, சிவபிரான், தன்னை, தனது, இமையவர், கடல், முடையான்கடல்சூழ், தோன்றிய, அவ்விறைவன், சீகாழிப், சிறிதே, ஆகிய, அவன், அழகு, தான், ஒலிக்கும், கொன்றை, வண்டுகள், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், உறையும், சீகாழியையே, திங்கள், என்னை, குளிர்ந்த, வணங்க, தேவர்கள், உடையவனாய்