முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.072.திருக்குடந்தைக்காரோணம்
1.072.திருக்குடந்தைக்காரோணம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதர்.
தேவியார் - தேனார்மொழியம்மை.
776 |
வாரார்கொங்கை மாதோர்பாக நீரார்கங்கை திங்கள்சூடி கூரார்மழுவொன் றேந்தியந்தண் காரார்கண்டத் தெண்டோளெந்தை |
1.072.1 |
திருக்குடமூக்கில் விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய், எட்டுத் தோள்களோடு விளங்கும் எந்தையாராகிய இறைவர், கச்சணிந்த கொங்கைகளை உடைய பார்வதி தேவியை ஒருபாகமாக் கொண்டு, நீண்ட சடைமிசை நீர் மயமான கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடி, இயல்பான இருவிழிகளோடு நெற்றியில் ஒற்றைக் கண்ணுடையவராய் கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி, அழகிய தண்ணளி செய்யும் குழகராய் விளங்குகின்றார்.
777 |
முடியார்மன்னர் மடமான்விழியார் படியார்பவள வாயார்பலரும் கொடியார்விடையார் மாடவீதிக் கடியார்சோலைக் கலவமயிலார் |
1.072.2 |
மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளைய மான் போன்ற விழியினை உடைய மகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப் பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவராவார்.
778 |
மலையார்மங்கை பங்கரங்கை குலையார்தெங்கு குளிர்கொள்வாழை முலையாரணிபொன் முளைவெண்ணகையார் கலையார்மொழியார் காதல்செய்யுங் |
1.072.3 |
மட்டைகளோடும் குலைகளோடும் கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த அழகமைந்த குடமூக்கு என்னும் திருத்தலத்தில், பொன்னணிகள் விளங்கும் தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை போன்ற நெற்றியையும் இசைக்கலை சேர்ந்த மொழியையும் உடைய மகளிர் பலரால் விரும்பப்படும் காரோணத்து இறைவர் மலை மங்கை பங்கர்; அழகிய கையில் அனல் ஏந்தியவர்.
779 |
போதார்புனல்சேர் கந்தமுந்திப் தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி மாதார்மங்கை பாகமாக காதார்குழையர் காளகண்டர் |
1.072.4 |
நீர் நிலைகளில் தோன்றும் தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப் பொலிவெய்த, அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த சோலைகளாலும் எழிலார்ந்த காடு களாலும் சூழப்பெற்றதாய் விளங்கும் அழகிய தண்மையான குட மூக்கில் விளங்கும் காரோணம் எனப் பெயர் பெறும் கோயிலில் எழுந்தருளிய இறைவர், காதல் நிறைந்த உமையம்மை பாகராக மனைகள் தோறும் பலி ஏற்பவர். காதில் குழை அணிந்தவர். காளம் என்னும் நஞ்சினைக் கண்டத்தே கொண்டவர்.
780 |
பூவார்பொய்கை யலர்தாமரைசெங் தேவார்சிந்தை யந்தணாளர் கூவார்குயில்க ளாலுமயில்க காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் |
1.072.5 |
சிவபிரான், தெய்வத்தன்மை நிறைந்த மனத்தினராகிய அந்தணர்கள் அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை நிலங்களில் பூத்த மல்லிகை முல்லை முதலிய மணமலர்களையும் கொண்டு தனது புகழைக் கூறித் திருவடிகளைப் போற்ற, கூவும் குயில்கள் ஆடும் மயில்கள், இன்சொல் பேசும் கிளிப்பிள்ளைகள் ஆகிய பறவைகளை உடையதும், பணியாளர்களால் காக்கப் பெறுவதுமாகிய பொழிலால் சூழப்பெற்ற அழகிய குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.
781 |
மூப்பூர்நலிய நெதியார்விதியாய் கோப்பார்பார்த்த னிலைகண்டருளுங் தீர்ப்பாருடலி லடுநோயவலம் காப்பார்கால னடையாவண்ணங் |
1.072.6 |
குடமூக்கிலுள்ள காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்துவந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய் நின்று நம்மைக் காப்பவர். முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோத்து முப்புரங்களை அழித்தவர். அருச்சுனன் செய்த தவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதக் கணை வழங்கியருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையா வண்ணம் காப்பவர்.
782 |
ஊனார்தலைகை யேந்தியுலகம் மானார்தோலார் புலியினுடையார் தேனார் மொழியார் திளைத்தங்காடித் கானார்நட்ட முடையார்செல்வக் |
1.072.7 |
விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில் நடனம் புரிபவர்.
783 |
வரையார்திரடோண் மதவாளரக்க விரையார்பாத நுதியாலூன்ற உரையார்கீதம் பாடக்கேட்டங் கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் |
1.072.8 |
கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க, அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாம கானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.
784 |
கரியமாலுஞ் செய்யபூமே அரியவண்டந் தேடிப்புக்கு தெரியவரிய தேவர்செல்வந் கரியகண்டர் காலகாலர் |
1.072.9 |
செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர்.
785 |
நாணாரமணர் நல்லதறியார் பேணார்தூய்மை மாசுகழியார் சேணார்மதிதோய் மாடமல்கு கோணாகரமொன் றுடையார்குடந்தைக் |
1.072.10 |
சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறியாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாட வீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.
786 |
கருவார்பொழில்சூழ்ந்
தழகார்செல்வக் திருவார்செல்வ மல்குசண்பைத் உருவார்செஞ்சொன் மாலையிவைபத் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் |
1.072.11 |
அடர்த்தியால் கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய செல்வக் காரோணத்து இறைவரைத் தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக் கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.072.திருக்குடந்தைக்காரோணம் , காரோ, ணத்தாரே, விளங்கும், குடமூக்கில், இறைவர், உடைய, என்னும், அழகிய, காரோணத்து, பொருந்திய, நிறைந்த, கூடிய, திருமுறை, நீர், கருநிறம், தாமரை, திருக்குடந்தைக்காரோணம், சூழ்ந்த, காரோணத்தில், கழுநீர், பூத்த, அணிந்தவர், தண்மையான, முதலிய, தேனார், திகழுங், உள்ள, மிக்க, செல்வம், மனைகள், வருத்தும், குழகர், வினைகள், காப்பவர், முல்லை, மயில்கள், ஏந்தி, பரவிப், குடந்தைக், பிறை, கொண்டு, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், குடந்தை, திருத்தலத்தில், மகளிர், மேல், போற்ற, மான், ஆகிய, மணம், கமழும், கையில்