முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.042.திருப்பேணுபெருந்துறை
1.042.திருப்பேணுபெருந்துறை
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர்.
தேவியார் - மலையரசியம்மை.
448 |
பைம்மா நாகம் பன்மலர் கொன்றை செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் அம்மா னோக்கிய வந்தளிர் மேனி பெம்மா னல்கிய தொல்புக ழாளர் |
1.042.1 |
திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று ஐயம் இடுகஎன்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர்.
449 |
மூவரு மாகி யிருவரு மாகி பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் சாவம தாகிய மால்வரை கொண்டு தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் |
1.042.2 |
குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார்.
450 |
செய்பூங் கொன்றை கூவிள மாலை கொய்பூங் கோதை மாதுமை பாகங் கைபோ னான்ற கனிகுலை வாழை பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல் |
1.042.3 |
யானையின் கை போன்ற நீண்ட வாழைக் குலையில் பழுத்த பழங்களிலும், காய்த்த குலைகளிலும், கமுக மரங்களின் பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர், கொன்றைப்பூமாலை, கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று, பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர்.
451 |
நிலனொடு வானும் நீரொடு தீயும் புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த நலனொடு தீங்குந் தானல தின்றி மலனொடு மாசு மில்லவர் வாழும் |
1.042.4 |
நிலம், வானம், நீர், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய், ஐந்து புலங்களை வென்றவராய், பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும் இறைவர், திருவெண்ணீறு அணிந்து நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய், மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும் அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர்.
452 |
பணிவா யுள்ள நன்கெழு நாவின் துணியார் தங்க ளுள்ளமி லாத அணியார் நீல மாகிய கண்டர் மணிவாய் நீலம் வாய்கமழ் தேறன் |
1.042.5 |
அரிசிலாற்றின் அலைகள் மோதும் கரையில் அமைந்ததும், நீல மணி போலும் நிறம் அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய பேணு பெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர்.
453 |
எண்ணார் தங்கள் மும்மதிள் வேவ விண்ணோர் சாரத் தன்னருள் செய்த பண்ணார் பாட லாட லறாத பெண்ணா ணாய வார்சடை யண்ணல் |
1.042.6 |
திருப்பேணுபெருந்துறை இறைவர் தம்மை மதியாதவரான, அசுரர்களின் முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில் வன்மை காட்டிய எந்தையாராவர். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர். இசை நலம் கெழுமிய பாடல்களோடு, ஆடி மகிழும் பசுபதியாய ஈசனும் ஆவர். ஒரு பாகம் பெண்ணுமாய், ஒரு பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியுடைய தலைவராவர்.
454 |
விழையா ருள்ள நன்கெழு நாவில் பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற் தழையார் மாவின் றாழ்கனி யுந்தித் குழையார் சோலை மென்னடை யன்னங் |
1.042.7 |
தழைத்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின் கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள்கூடி விளங்கும் திருப்பேணுபெருந்துறை இறைவர், விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்கண் தம் வினைகெட, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதிவரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவர்.
455 |
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த மன்ன னொல்க மால்வரை யூன்றி முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த அன்னங் கன்னிப் பேடை யொடாடி |
1.042.8 |
ஆண் அன்னம் கன்னிமையுடைய பெண் அன்னத்தோடு ஆடியும், கூடியும் மகிழும் பேணு பெருந்துறை இறைவர், அழகிய கடற்கரைச் சோலைகளும், வெண்மையான கடல் அலைகளும் சூழ்ந்துள்ளதும், நாற்புறங்களிலும் கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை மலையைக் கால் விரலால் ஊன்றி, அவனுடைய சிறந்த வலிமையுடைய, மார்பும், தோள்களும் வலிமை குன்றுமாறு செய்து பின் அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய மூர்த்தியாவார்.
456 |
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட உள்வா யல்லி மேலுறை வானு முள்வாய் தாளின் தாமரை மொட்டின் கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங் |
1.042.9 |
முட்களையுடைய தண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங் கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும், நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர்.
457 |
குண்டுந் தேருங் கூறைக ளைந்துங் மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை |
1.042.10 |
இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும், தேரர்களாகிய புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண்தவம் புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை விரும்புமின். யோக தண்டம், பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார்.
458 |
கடையார் மாட நன்கெழு வீதிக் நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் படையார் சூலம் வல்லவன் பாதம் உடையா ராகி உள்ளமு மொன்றி |
1.042.11 |
வாயில்களையுடைய மாட வீடுகள் நன்கமைந்த வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும், அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.042.திருப்பேணுபெருந்துறை , ருந்துறை, இறைவர், யாரே, திருப்பேணுபெருந்துறை, விளங்கும், பேணு, பெருந்துறை, நன்கெழு, வாழும், திருமுறை, ராகி, அழகிய, பாகம், நிறைந்த, செய்த, ஆகிய, மூர்த்தி, மல்குபெ, கொன்றை, பொருந்திய, கொண்டு, தாமரை, ஆவர், மனம், வழிபட, அமைந்த, நன்மை, தங்கள், சூழ்ந்து, கண்டு, பேணுபெருந்துறையில், தேவர், தேனும், கலந்து, சூலம், கடல், சோலைகளும், மகிழும், தலைவராவர், நிறம், சோலை, மூவிலை, பொருகடல், காட்டிய, செய்யும், வெண்மையான, மலர், ஆகியவற்றை, அணிந்து, ஐயம், பெரிய, பேணுபெ, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், நாகம், பாகமாகக், கொண்ட, பெருமானார், நீண்ட, தேன், பொய்ம்மைகள், தேவர்கள், மால்வரை, தலைவர், மாகி, பாவங்கள், நின்று, அரிசிலாற்றின்