முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.015.திருநெய்த்தானம்
1.015.திருநெய்த்தானம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
152 |
மையாடிய கண்டன்மலை கையாடிய கேடில்கரி செய்யாடிய குவளைம்மலர் நெய்யாடிய பெருமானிடம் |
1.015.1 |
கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலை மகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக.
153 |
பறையும்பழி பாவம்படு பிறையும்புன லரவும்படு அறையும்புனல் வருகாவிரி நிறையும்புனை மடவார்பயில் |
1.015.2 |
காவிரி வடகரை மேல் உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என வினை முடிபு காண்க. ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில் விளங்குவதும், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்; பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.
154 |
பேயாயின பாடப்பெரு வேயாயின தோளிக்கொரு தாயாகிய வுலகங்களை நேயாடிய பெருமானிடம் |
1.015.3 |
ஊழிக் காலத்து, பேய்கள் பாட, மகா நடனம் ஆடிய பெருமானும், மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய உமை யம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும், அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய் போன்ற தலைவனும், அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக.
155 |
சுடுநீறணி யண்ணல்சுடர் நடுநள்ளிருள் நடமாடிய கடுவாளிள வரவாடுமிழ் நெடுவாளைகள் குதிகொள்ளுயர் |
1.015.4 |
சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள் செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும், கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும் இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்வீராக.
156 |
நுகராரமொ டேலம்மணி பகராவரு புனல்காவிரி நிகரான்மண லிடுதண்கரை நகரானடி யேத்தந்நமை |
1.015.5 |
நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வது போல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.
157 |
விடையார் கொடி யுடையவ்வணல் உடையார்நறு மாலைசடை புடையேபுனல் பாயும்வயல் அடையாதவ ரென்றும்அம |
1.015.6 |
இடபக் கொடியை உடைய அண்ணலும், மணம் கமழும் மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும், அருகிலுள்ள கண்ணிகளிலும் வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம் என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும் வீட்டுலகம் அடையார்.
158 |
நிழலார்வயல் கமழ்சோலைகள் தழலானவ னனலங்கையில் கழலானடி நாளுங்கழ தொழலாரவர் நாளுந்துய |
1.015.7 |
பயிர் செழித்து வளர்தலால் ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானத்தில், தழல் உருவில் விளங்குபவனும் அனலைத் தன் கையில் ஏந்தியவனும் அழகிய வீரக் கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய அடியவர் எந்நாளும் துயரின்றி மற்றவர்களால் தொழத்தக்க நிலையினராவர்.
159 |
அறையார்கட லிலங்கைக்கிறை இறையாரமு னெடுத்தானிரு நிறையார்புனல் நெய்த்தானன்நல் கறையார்கதிர் வாளீந்தவர் |
1.015.8 |
அழகிய கயிலாய மலையைத் தன் இருபது முன் கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஓசை கெழுமிய கடல் சூழ்ந்த இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான் திருவடிகளை ஏத்துதலே, ஒருவற்கு அடையத்தக்க கதியாம்.
160 |
கோலம்முடி நெடுமாலொடு சீலம்மறி வரிதாயொளி காலம்பெற மலர்நீரவை ஞாலம்புக ழடியாருடல் |
1.015.9 |
அழகிய முடியை உடைய திருமாலும், கொய்யத்தக்க தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர் சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடல் சார்ந்த உறும் நோய்கள் நலியா. .
161 |
மத்தம்மலி சித்தத்திறை புத்தரவர் சொன்னம்மொழி நித்தம்பயில் நிமலன்னுறை சித்தம் முடை யடியாருடல் |
1.015.10 |
சித்தத்தில் செருக்குடையவரும், சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற சிவபிரான் உறையும் நெய்த்தானத்தை வணங்கிப் போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத் துன்புறுத்தும் நோய்கள் அடையா.
162 |
தலமல்கிய புனற்காழியுட் நிலமல்கிய புகழான்மிகு பலமல்கிய பாடல்லிவை சிலமல்கிய செல்வன்னடி |
1.015.11 |
தலங்களில் சிறந்த புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத் தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவவல்லவர் சீலம் நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.015.திருநெய்த்தானம் , உடைய, நெய்த்தானம், சிவபிரான், ஆகிய, னீரே, நெய்த்தானமெ, நிறைந்த, யாவே, அழகிய, தேத்தும், விளங்கும், பெயரைச், காவிரி, திருவடிகளை, வரும், திருமுறை, சொல்வீராக, திருநெய்த்தானம், பெருமான், சூழ்ந்த, அடையா, புனல், நெய்த்தானப், நோய்கள், இருபது, மணம், அடியவர், நாள்தோறும், அணிந்தவனும், கமழும், மிக்க, கதியே, தானம், நடமாடிய, புகழ், பெற்ற, மலர், மேல், பெருமானிடம், நெய்யாடிய, தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், எம்பெருமான், சொல்லுமின், பொருந்திய, தோன்றிய, உறையும், பலகாலும், நடனம், தீரும், ஊரின், துன்பங்கள், வாளை