முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.130.திருவையாறு
1.130.திருவையாறு
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
1394 |
புலனைந்தும் பொறிகலங்கி
நெறிமயங்கி அலமந்த போதாக வஞ்சேலென் வலம்வந்த மடவார்கள் நடமாட சிலமந்தி யலமந்து மரமேறி |
1.130.1 |
ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, 'அஞ்சேல் என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.
1395 |
விடலேறு படநாக மரைக்கசைத்து அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் கடலேறித் திரைமோதிக் காவிரியி திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் |
1.130.2 |
கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற் கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது. வளைந்த மூக்கினையுடைய கடற்சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித் தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.
1396 |
கங்காளர் கயிலாய மலையாளர் பங்காளர் திரிசூலப் படையாளர் கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா செங்கானல் வெண்குருகு பைங்கான |
1.130.3 |
சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.
1397 |
ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் மான்பாய வயலருகே மரமேறி தேன்பாய மீன்பாயச் செழுங்கமல |
1.130.4 |
புலால் பொருந்தியதாய், முடைநாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித் திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன் பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.
1398 |
நீரோடு கூவிளமு நிலாமதியும் தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த காரோடி விசும்பளந்து கடிநாறும் தேரோடு மரங்கேறிச் சேயிழையார் |
1.130.5 |
கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.
1399 |
வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த காந்தார மிசையமைத்துக் காரிகையார் தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் |
1.130.6 |
அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.
1400 |
நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு |
1.130.7 |
நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.
1401 |
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல |
1.130.8 |
அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற்கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.
1402 |
மேலோடி விசும்பணவி
வியனிலத்தை மாலோடு நான்முகனு மறியாத கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் சேலோடச் சிலையாடச் சேயிழையார் |
1.130.9 |
அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது. கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல் மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.
1403 |
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு மிண்டாடு மிண்டருரை கேளாதே எண்டோளர் முக்கண்ண ரெம்மீச செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் |
1.130.10 |
இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.
1404 |
அன்னமலி பொழில்புடைசூ
ழையாற்றெம் மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் |
1.130.11 |
அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப் பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.130.திருவையாறு , திருவையாறே, திருவையாறாகும், சிவபிரான், கோயிலையுடையது, செழுமையான, நிறைந்த, பொருந்திய, எழுந்தருளிய, திருவையாறு, சென்று, உடையவரும், மணம், விளங்கும், அழகிய, கயிலாய, சேயிழையார், கோயிலை, திருமுறை, தேன், உடையது, பெண்கள், நடனம், உடைய, அணிந்த, வெள்ளெருக்கு, சடைக்கணிந்த, கொன்றை, பொழில்கள், நடமாடுந், பத்தையும், திரண்ட, கொண்டு, பெருமானை, வளரும், நீண்ட, அணிகலன்கள், இளம், மீன்கள், மகளிர், வீதிகளில், கூரிய, மரமேறி, திருச்சிற்றம்பலம், வலிமை, வந்து, மரங்களில், அஞ்சிய, அருள், மனம், கண்டு, பதிகங்கள், திருமால், தங்குங்கோயில், வயலருகே, செழுங்கமல, உள்ள, சுழன்று, சோலைகளில், என்னும், ஆகிய, தேவாரப், கையில்