பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 9.03. நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்
9.03. நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்
4069 |
தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால் | 9.3.1 |
4070 | அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார் | 9.3.2 |
4071 | ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப் பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார் | 9.3.3 |
4072 | எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர் மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக | 9.3.4 |
4073 | வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க | 9.3.5 |
4074 | தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல் தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப் பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க | 9.3.6 |
4075 | இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில் பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து | 9.3.7 |
4076 | வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார் களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் | 9.3.8 |
4077 | திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார் அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார் | 9.3.9 |
4078 | பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந் தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப் பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம் | 9.3.10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 9.03. நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம் , புராணம், ஒலியும், கடல், திருமுறை, நாயனார், அரசு, அமர், நெடும், நெடுமாற, சீர், நின்ற, தாம், செய், மாறனார், திரை, முழக்கு, பெருக, அளித்து, நெறி, பெரிய, பன்னிரண்டாம், அடைந்த, கழல், ஏற்ற, அருளாலே, படைக்